இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையே இன்று முதல் டி-20 போட்டி ஹைதராபாத்தில் உள்ள ராஜிவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது.
அதன்படி முதலில் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி சிறப்பாக விளையாடி 20 ஓவர் முடிவில் 207அடித்தனர். இதில் அதிகபட்சமாக ஹெட்மையர் 56 ரன்கள் குவித்தார். இந்திய அணி சார்பில் யுஸ்வேந்திர சாஹல் 2 விக்கெட்டைபறித்தார்.
இதைத் தொடர்ந்து 208 ரன்களுடன் களமிறங்கிய இந்திய அணி ஆட்டம் தொடக்கத்திலேயே தொடக்க வீரர் ரோகித் சர்மா 8 ரன்களில் வெளியேற பின்னர் கே.எல் ராகுல் , விராட் இருவரும் கூட்டணியில் இனைந்து அணி எண்ணிக்கையை உயர்த்தினார். நிதானமாக விளையாடிய கே.எல் ராகுல் அரைசதம் அடித்து 62 ரன் எடுத்து விக்கெட்டை இழந்தார்.
பின்னர் இறங்கிய ரிஷப் பண்ட் நிலைத்து நிற்கவில்லை. இதைத்தொடர்ந்து சிறப்பாகவும் , அதிரடியாகவும் விளையாடிய விராட் கோலி வெஸ்ட் இண்டீஸ் பந்து வீச்சாளர்களின் பந்துகளை பறக்கவிட்டார்.
இந்நிலையில் விராட்கோலி கடைசிவரை களத்தில் நின்று 50 பந்தில் 94 ரன்கள் குவித்தார். அதில் 6 சிக்சர்,6 பவுண்டரி அடங்கும் .இதன் மூலம் இந்திய அணி 18.4 ஓவர்களில் 209 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…
சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…
டெல்லி : ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…
மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…