தென் ஆப்ரிக்காவில் 19 வயது உட்பட்டவர்களுக்கான உலக கோப்பை தொடர் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற செமி-பைனல் போட்டியில் பாகிஸ்தான் , இந்தியா மோதியது. இப்போட்டியில் இரண்டாவது ஓவரை இந்திய பந்துவீச்சாளர் சுஷாந்த் மிஸ்ரா வீசினார்.
அப்போது முஹம்மது ஹுரைரா 4 ரன்னில் விக்கெட்டை பறித்தார். இதைதொடர்ந்து நான்காவது ஒருவரையும் சுஷாந்த் மிஸ்ரா வீசினார். அப்போது அவர் வீசிய பவுன்சர் பந்து பாகிஸ்தான் வீரர் தொடக்க வீரர் ஹைதர்அலி தோள்பட்டையில் அடித்தது.
இதனால் வலி தாங்க முடியாமல் ஹைதர்அலி மைதானத்தில் உட்கார்ந்து கொண்டார். அப்போது ஹைதர்அலி அருகில் சென்ற சுஷாந்த் மிஸ்ரா நன்றாக இருக்கிறீர்களா..? என நலம் விசாரித்துள்ளார். இந்த புகைப்படம் சமூகவலைதளங்களில் வைரலாகியுள்ளது. மேலும் எதிரணி வீரரை விசாரித்த இந்திய வீரர் சுஷாந்த் மிஸ்ராவை பாகிஸ்தான் ரசிகர்கள் அனைவரும் பாராட்டி வருகின்றனர்.
இப்போட்டி போட்செஃப்ஸ்ட்ரூமில் உள்ள சென்வெஸ் பார்க் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. முதலில் இறங்கிய பாகிஸ்தான் அணி 43.1 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 172 ரன்கள் மட்டுமே அடித்தனர்.
இந்திய அணியின் தொடக்க வீரர்களாக யஷ்வி ஜெய்ஸ்வால் , திவ்யான்ஷ் இருவரும் இறங்கினர். ஆட்டம் தொடக்கத்திலே இருந்து அதிரடியாக விளையாடிய இருவரும் அரைசதம் விளாசினார். சிறப்பாக விளையாடிய யஷ்வி ஜெய்ஸ்வால் சதம் விளாசினார்.
தொடக்க வீரர்கள் இருவரும் கடைசிவரை ஆட்டமிழக்காமல் 35.2 ஓவரில் 176 ரன்கள் அடித்தனர்.இதனால் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று நேரடியாக பைனலுக்கு சென்றது.
கடலூர் : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி சிதம்பரத்தில் தனது "மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்" என்ற முழக்கத்துடன்…
டமாஸ்கஸ் : இஸ்ரேல் தனது அண்டை நாடான சிரியாவில் ஒரு பெரிய வான்வழித் தாக்குதலை நடத்திருக்கிறது. காசாவில் ஹமாஸ் மற்றும்…
சென்னை : முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நாளை நடைபெறும் என திமுக…
இங்கிலாந்தில் 200 ஆண்டுகள் பழமையான மற்றும் அந்நாட்டின் அடையாளமாக விளங்கிய சைக்காமோர் கேப் மரத்தை வெட்டியதற்காக இரண்டு நபர்களுக்கு 4…
சென்னை : விஷாலின் 35-வது படத்தின் பூஜை சமீபத்தில் நடந்து முடிந்தது. தற்பொழுது, 'ரெட் பிளவர்' திரைப்பட நிகழ்வில் கலந்து…
சென்னை : தமிழ்நாட்டில் மருத்துவக் கழிவுகளை அனுமதியின்றி கொட்டுவது கடுமையான குற்றமாகக் கருதப்படுகிறது. இதற்காக, தமிழ்நாடு அரசு குண்டர் சட்டத்தின்…