தென் ஆப்ரிக்காவில் 19 வயது உட்பட்டவர்களுக்கான உலக கோப்பை தொடர் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற செமி-பைனல் போட்டியில் பாகிஸ்தான் , இந்தியா மோதியது. இப்போட்டியில் இரண்டாவது ஓவரை இந்திய பந்துவீச்சாளர் சுஷாந்த் மிஸ்ரா வீசினார்.
அப்போது முஹம்மது ஹுரைரா 4 ரன்னில் விக்கெட்டை பறித்தார். இதைதொடர்ந்து நான்காவது ஒருவரையும் சுஷாந்த் மிஸ்ரா வீசினார். அப்போது அவர் வீசிய பவுன்சர் பந்து பாகிஸ்தான் வீரர் தொடக்க வீரர் ஹைதர்அலி தோள்பட்டையில் அடித்தது.
இதனால் வலி தாங்க முடியாமல் ஹைதர்அலி மைதானத்தில் உட்கார்ந்து கொண்டார். அப்போது ஹைதர்அலி அருகில் சென்ற சுஷாந்த் மிஸ்ரா நன்றாக இருக்கிறீர்களா..? என நலம் விசாரித்துள்ளார். இந்த புகைப்படம் சமூகவலைதளங்களில் வைரலாகியுள்ளது. மேலும் எதிரணி வீரரை விசாரித்த இந்திய வீரர் சுஷாந்த் மிஸ்ராவை பாகிஸ்தான் ரசிகர்கள் அனைவரும் பாராட்டி வருகின்றனர்.
இப்போட்டி போட்செஃப்ஸ்ட்ரூமில் உள்ள சென்வெஸ் பார்க் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. முதலில் இறங்கிய பாகிஸ்தான் அணி 43.1 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 172 ரன்கள் மட்டுமே அடித்தனர்.
இந்திய அணியின் தொடக்க வீரர்களாக யஷ்வி ஜெய்ஸ்வால் , திவ்யான்ஷ் இருவரும் இறங்கினர். ஆட்டம் தொடக்கத்திலே இருந்து அதிரடியாக விளையாடிய இருவரும் அரைசதம் விளாசினார். சிறப்பாக விளையாடிய யஷ்வி ஜெய்ஸ்வால் சதம் விளாசினார்.
தொடக்க வீரர்கள் இருவரும் கடைசிவரை ஆட்டமிழக்காமல் 35.2 ஓவரில் 176 ரன்கள் அடித்தனர்.இதனால் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று நேரடியாக பைனலுக்கு சென்றது.
சென்னை : தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கான பண்டிகை கால முன்பணம் ரூ.10,000-லிருந்து ரூ.20,000-ஆக உயர்த்தி சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தநிலையில்,…
சென்னை : நகர்புறங்களில் பெரும்பாலும் கேன் குடிநீர் பயன்பாட்டில் உள்ளது. தமிழகத்தில் குடிநீர் கேன் உற்பத்தி மற்றும் விற்பனை செய்யும்…
சென்னை : நடிகர் சந்தானம் நடித்து முடித்திருக்கும் 'டிடி நெக்ஸ்ட் லெவல' என்கிற நகைச்சுவைப் படம் வெளியீட்டிற்கு தயாராக உள்ளது.…
சென்னை : நடிகை சமந்தா ரூத் பிரபு சமீபத்தில் விசாகப்பட்டினத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார், அங்கு அவரது…
டெல்லி : சாலை விபத்தில் காயமடைபோவருக்கு இனி இலவச சிகிச்சை வழங்ப்படும் என மத்திய அரசு தரப்பில் தற்போது தகவல்…
மதுரை : தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உதயசூரியபுரம் எனும் ஊரில் நேற்று இரவு பெண் ஒருவர் தலை துண்டிக்கப்பட்டு…