#BREAKING: இலங்கை அரசுக்கான ஆதரவு வாபஸ் – இ.தொ.கா அறிவிப்பு!

Published by
பாலா கலியமூர்த்தி

பிரதமர் ராஜபக்ச அரசுக்கான ஆதரவை வாபஸ் பெறுவதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சி அறிவிப்பு.

இலங்கை அரசுக்கு அளித்து வந்த ஆதரவை தொழிலாளர் காங்கிரஸ் கட்சி திரும்ப பெறுவதாக அறிவித்துள்ளது. பிரதமர் ராஜபக்ச அரசுக்கான ஆதரவை வாபஸ் பெற்ற நிலையில், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியின் சமுதாய உட்கட்டமைப்பு இணை அமைச்சராக இருந்த ஜீவன் தொண்டமான் ராஜினாமா செய்தார். ஜீவன் தொண்டமானுடன் எம்பி மருதப்பாண்டி ராமேஸ்வரனும் சுயேட்சையாக செயல்பட தீர்மானிக்கப்பட்டுள்ளது என கூறப்படுகிறது.

இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக அந்நாட்டு மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகியுள்ளனர். இதனால் அரசுக்கு எதிராக பொதுமக்கள் போராட்டங்களைஇ நடத்தி வருகின்றனர். இந்த பொருளாதார நெருக்கடியால் ராஜபக்ச அரசுக்கும் கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இவ்வாறான பரபரப்பான சூழலில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு கேபினட் அமைச்சர்கள் 26 பேர் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, நேற்று அமைச்சர்களின் ராஜினாமா கடிதத்தை அதிபர் கோட்டாபய ராஜபக்சே ஏற்றுக்கொணடார்.

மேலும்,மத்திய வங்கி ஆளுநரும் பதவியை ராஜினாமா செய்தார். இதன்பின்னர் இலங்கை பிரதமர் கோட்டாபய ராஜபக்சே 4 புதிய இடைக்கால அமைச்சர்களை நியமித்தார். அடுத்தடுத்து இந்த பரபரப்பான அரசியல் சூழலில், இன்று இலங்கை நாடாளுமன்றம் கூடும் நிலையில், பிரதமர் ராஜபக்ச அரசுக்கான ஆதரவை வாபஸ் பெறுவதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

பையன் ஹீரோ ஆகிட்டான் ரொம்ப பயமா இருக்கு! விஜய் சேதுபதி பேச்சு!

பையன் ஹீரோ ஆகிட்டான் ரொம்ப பயமா இருக்கு! விஜய் சேதுபதி பேச்சு!

சென்னை : நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா விஜய் சேதுபதி, ‘பீனிக்ஸ்’ திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகமாகிறார். ஏற்கனவே, இந்த…

2 hours ago

ஹர்திக் மட்டும் இல்லனா கோப்பை வந்திருக்காது! கேப்டன் ரோஹித் சர்மா ஓபன் டாக்!

டெல்லி : 2024 டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி சிறப்பாக விளையாடி கோப்பையை வென்றது இன்னும் ஒரு மறக்க முடியாத…

3 hours ago

சிதம்பரம் அருகே கொடூரம்…காதல் விவகாரத்தில் மகளையே கொன்ற தந்தை!

கடலூர் : மாவட்டம் சிதம்பரத்தில் அதிர்ச்சியடைய வைக்கும் வகையில் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. மடப்புரம் பகுதியில் தன்னுடைய குடும்பத்துடன் அர்ஜுனன் என்ற…

4 hours ago

தண்ணீர் கலந்த டீசல்…நடுவழியில் நின்ற ம.பி. முதல்வர் கான்வாய் வாகனங்கள்!

மத்தியப் பிரதேசம் : மாநிலத்தின் முதல்வர் கான்வாயில் இருந்த வாகனங்கள், ஜூன் 26, 2025 அன்று ரத்லம் மாவட்டத்தில் நடுவழியில்…

4 hours ago

யாருடனும் தொடர்பு இல்லை ப்ளீஸ் கொடுங்க..ஜாமீன் கேட்கும் நடிகர் கிருஷ்ணா!

சென்னை : கோக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கின் விசாரணை மேலும் தீவிரமடைந்து அடுத்தகட்டமாக இந்த…

5 hours ago

இஸ்ரேல் போட்ட ஸ்கெட்சில் இருந்து ஈரான் தலைவர் காமெனி தப்பியது எப்படி? வெளியான சீக்ரெட்!

ஈரான் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இரண்டு நாட்டிற்கும் இடையே எழுந்த போரின் காரணமாக பெரும் பதற்றம் ஏற்பட்டிருந்தது. அந்த பதற்றத்தை…

6 hours ago