இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கோவாக்ஸின் கொரோனா தடுப்பூசி தற்போது அதிகமாக பரவி வரக்கூடிய டெல்டா மற்றும் ஆல்பா கொரோனா வைரஸ்களுக்கு எதிராக திறம்பட செயல்படுவதாக அமெரிக்க தேசிய சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
டெல்டா வகை கொரோனா வைரஸ் பிரிட்டன் மற்றும் இந்தியாவில் முதலில் பரவியது கண்டுபிடிக்கப்பட்டது. இந்நிலையில் இந்தியாவில் பாரத் பையோடெக் நிறுவனம் தயாரித்த கோவாக்ஸின் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களின் ரத்த மாதிரியை எடுத்து அமெரிக்க தேசிய சுகாதார நிறுவனம் ஆய்வு மேற்கொண்டது.
இந்த ஆய்வு குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், டெல்டா மற்றும் ஆல்பா வகை கொரோனாக்களுக்கு எதிராக கோவாக்ஸின் தடுப்பூசி சிறப்பாக எதிர்ப்பு சக்தியை உருவாக்குகிறது. இதனை அடுத்து இந்த தடுப்பூசி பாதுகாப்பானதாகவும், நீடித்து செயல்படக்கூடியதாகவும் உள்ளது என்று தெரிவித்துள்ளது. மேலும், இந்த கோவாக்ஸின் தடுப்பூசியின் இரண்டு கட்ட சோதனை முடிவுகள் வெளியாகியுள்ளது.
மூன்றாம் கட்ட பரிசோதனையில் அறிகுறியுடன் கொரோனா பாதித்தவர்களுக்கு இந்த தடுப்பூசி 78% செயல்திறனுடன் இருக்கும் எனவும், கடுமையாக பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களுக்கு இது 100% செயல்படும் என்றும், அறிகுறி இல்லாமல் பாதிக்கப்பட்டவர்களுக்கு 70% செயல்படும் என்றும் இவர்களது ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
சென்னை : இந்தியா முழுவதும் நடந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஒரு பகுதியாக மே 7-ம் தேதியான இன்று சென்னை மற்றும்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் வெற்றிகரமாக தீவிரவாதிகள் முகாம்களை அழித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர்…
கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் 57-வது போட்டியில், நடப்பு சீசனில் லீக் சுற்றுடன் நடையை கட்டவுள்ள சென்னை மற்றும் பிளே…