சூர்யா 40 படத்தின் படப்பிடிப்பில் நடிகர் சூர்யா வருகின்ற 15 ஆம் தேதி முதல் இணைவார்.
நடிகர் சூர்யா சூரரைப்போற்று வெற்றியை தொடர்ந்து அடுத்தாக தனது 40 வது திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தை இயக்குனர் பாண்டிராஜ் இயக்குகிறார். இசையமைப்பாளர் இமான் இசையமைக்கும் இந்த படத்தை சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. படத்தில் நடிகர் சூர்யாவிற்கு ஜோடியாக நடிகை பிரியங்கா அருள் மோகனன் நடித்துவருகிறார். இந்த படத்தில் சத்யராஜ், சரண்யா, சூரி, தேவதர்ஷினி, போன்றோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.
இந்த படத்திற்கான பூஜை கடந்த மாதம் நடந்தது. இந்த நிலையில் நடிகர் சூர்யா இந்த படத்தில் இன்னும் இணையவில்லை ஏனெனில் கடந்த பிப்ரவரி 4-ம் தேதி சூர்யாவிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தனது ட்வீட்டர் பக்கத்தில் அவரே அறிவித்திருந்தார். அதன் பின் அதிலிருந்து குணமடைந்து வீடு திரும்பிய பின்னர் திறப்பு விழா ஒன்றில் முதல் முறையாக கலந்து கொண்டார் அதற்கான வீடியோவும் சமூக வலைத்தளத்தில் பரவி வந்தது.
இதனை தொடர்ந்து தற்போது இந்த சூர்யா 40 படத்தில் நடிகர் சூர்யா எப்போது இணைவார் என்ற தகவல் தற்போது கிடைத்துள்ளது. ஆம், நடிகர் சூர்யா வருகின்ற 15 ஆம் தேதி முதல் சூர்யா 40 படத்தில் இணையவுள்ளார். இதனால் தற்போது சசூர்யா ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளார்கள்.
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
சென்னை : இந்தியா முழுவதும் நடந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஒரு பகுதியாக மே 7-ம் தேதியான இன்று சென்னை மற்றும்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் வெற்றிகரமாக தீவிரவாதிகள் முகாம்களை அழித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர்…
கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் 57-வது போட்டியில், நடப்பு சீசனில் லீக் சுற்றுடன் நடையை கட்டவுள்ள சென்னை மற்றும் பிளே…