ஹோவர் போர்டில் இருந்து கொண்டே பல் பிடுங்கிய மருத்துவருக்கு 12 ஆண்டுகள் சிறை.!

Default Image

அலாஸ்காவின் ஏங்கரேஜில் உள்ள ஒரு பல் மருத்துவர்  ஹோவர் போர்டில் இருக்கும்போது நோயாளியின் பற்களை பிடுங்கியதால்  12 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

பல் பிரித்தெடுத்தல் என்பது மிகவும் நுட்பமான செயல்முறையாகும், இது நன்கு பயிற்சி பெற்ற பல் மருத்துவர்களால் மட்டுமே செய்யமுடியும், பல் பிடுங்கும் போது சீராக கால்களை தரையில் உறுதியாக இருக்க வேண்டும்.

பல் பிடுங்கும்போது ஏதேனும் குலுக்கல்கள் மற்றும் திடீர் அசைவுகள்  ஏற்பட்டால் அது நோயாளிக்கு கடுமையான காயங்களை ஏற்படுத்தும். ஒரு பல் மருத்துவர் ஹோவர் போர்டில் இருக்கும்போது உங்கள் பற்களை பிடுங்கினால் எப்படி இருக்கும் என கற்பனை செய்து பாருங்கள்..? அத்தகைய ஒரு விஷயத்தை கற்பனையில் கூட நினைத்து பார்க்கமுடியாது. ஆனால், அப்படி ஒரு விஷயம் உண்மையில் நடந்துள்ளது.

ஹோவர் போர்டில் இருக்கும்போது மயக்கமடைந்த நோயாளியின் பல் பிரித்தெடுப்பதை வீடியோ எடுத்த பல் மருத்துவருக்கு 12 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்