கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு இன்று தொடங்கியது.!

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு தொடங்கியது.
அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான பொது பிரிவுக்கான முதல்கட்ட கலந்தாய்வு ஜூன் 1 அதாவது இன்று முதல் தொடங்கி ஜூன் 10 வரையில் நடைபெற உள்ளது.
முன்னதாக, கலந்தாய்வு கடந்த மாதம் 29ம் தேதி தொடங்கியது. மாற்றுத்திறனாளிகள், விளையாட்டு வீரர் உள்ளிட்டோருக்கான கலந்தாய்வு 29ம் தேதி முதல் தொடங்கி மே 31 வரை நடைபெற்றது.
மேலும், பொதுப்பிரிவுக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு ஜூன் 12 முதல் 20-ஆம் தெத்து வரை நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 1,07,299 இளநிலை படிப்பு இடங்களுக்கு மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.