ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 4-ஆம் தேதி இந்திய கடற்படை தினமாக கொண்டாடப்படுகிறது.
1971-ஆம் ஆண்டு இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் ஒன்று நடைபெற்றது. அதாவது கிட்டத்தட்ட 48 வருடங்களுக்கு முன்பு அந்த போரில் இந்திய கடற்படை டிசம்பர் நான்காம் தேதி அன்று பாகிஸ்தானின் உள்ள கராச்சி துறைமுகம் மீது ஒரு அவசர கடல்வழி தாக்குதல் நடத்திய இந்திய கடற்படையினர். இந்த தாக்குதலில் பி.என்.எஸ் முஹபிஸ் மற்றும் பி.என்.எஸ் கைபர் கப்பல்களை இந்திய ஏவுகணைகள் தாக்கி மூழ்கடித்தன.
மேலும் இந்திய கடற்படையினரால் மற்றோரு பாகிஸ்தானி கப்பலான பி.என்.எஸ் ஷாஜஹான் என்ற கப்பலை கூட இந்திய கடற்படையால் சேதபடுத்தப்பட்டது. அதனையடுத்து இந்திய ஏவுகணை படகுகள் கராச்சி துறைமுகத்தில் உள்ள எரிப்பொருள் கிடங்குகளை தாக்கி எரிய வைத்தன. இந்த தாக்குதல் நடவடிக்கைகள் ஆபரேஷன் திரிசூலம் எனப்பட்டன. அதனைத் தொடர்ந்து நடைபெற்ற தாக்குதல்கள் ஆபரேஷன் மலைப்பாம்பு என்றும் அழைக்கப்பட்டன.
இந்நிலையில், இந்திய கடற்படையின் சிறப்பான நடவடிக்கைவெற்றியை கொண்டாடும் விதமாக ஆண்டுதோறும் டிசம்பர் நான்காம் தேதி இந்திய கடற்படை தினமாக கொண்டாடுகிறது. மற்றும் இரண்டாம் உலகப் போருக்கு பின்பு மிகப் பெரிய கப்பற்படை தாக்குதல் நடைபெற்றது இதே நாளில் தான்.
லடாக் : லடாக்கில் 15,000 அடி உயரத்தில் இந்திய ராணுவம் உள்நாட்டு ஆகாஷ் பிரைம் வான் பாதுகாப்பு அமைப்பை வெற்றிகரமாக…
திருச்சி : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், இன்று (ஆகஸ்டு 17) திருச்சியில் "மரங்களின் மாநாடு" நடத்தப்படும்…
கடலூர் : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி சிதம்பரத்தில் தனது "மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்" என்ற முழக்கத்துடன்…
டமாஸ்கஸ் : இஸ்ரேல் தனது அண்டை நாடான சிரியாவில் ஒரு பெரிய வான்வழித் தாக்குதலை நடத்திருக்கிறது. காசாவில் ஹமாஸ் மற்றும்…
சென்னை : முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நாளை நடைபெறும் என திமுக…
இங்கிலாந்தில் 200 ஆண்டுகள் பழமையான மற்றும் அந்நாட்டின் அடையாளமாக விளங்கிய சைக்காமோர் கேப் மரத்தை வெட்டியதற்காக இரண்டு நபர்களுக்கு 4…