மீண்டும் இணையும் கொம்பன் கூட்டணி.! கார்த்தி-முத்தையா இணையும் திரைப்படம் எப்போது.?!

பொன்னியின் செல்வன் படத்தை முடித்தவுடன் இயக்குனர் முத்தையா இயக்கும் படத்தில் கார்த்தி நடிக்கவுள்ளதாக தகவல்.
சுல்தான் படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக நடிகர் கார்த்தி இயக்குனர் மணி ரத்தனம் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி வரும், பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை தொடர்ந்து இயக்குனர் பி எஸ் மித்ரன் இயக்கத்தில் இரட்டை வேடங்களில் சர்தார் படத்தில் நடித்து முடித்துள்ளார்.
இந்த நிலையில் பொன்னியின் செல்வன் படத்தின் 80 % படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில், நடிகர் கார்த்தி அடுத்ததாக கொம்பன் படத்தை இயக்கிய முத்தையா இயக்கும் படத்தில் கார்த்தி நடிக்கவுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது. முத்தையா இயக்குமார் படத்தை முடித்த பின் சர்தார் படப்பிடிப்பில் பங்கேற்வுள்ளார்.
முத்தையா இயக்கும் இந்த படத்தை நடிகர் சூர்யா தனது 2D நிறுவனம் சார்பில் தயாரிக்கிறார் எனவும் சில நாட்களுக்கு முன்பு தகவல் கசிந்தது. ஆனால் இன்னும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. விரைவில் அறிவிப்பு வெளியாகுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
லேட்டஸ்ட் செய்திகள்
இஸ்ரேலில் குடியிருப்புகளில் குண்டு மழை பொழியும் ஈரான்.! கிளஸ்டர் குண்டுகள் என்ன செய்யும்.?
June 20, 2025
தனுஷின் ‘குபேரா’ எப்படி இருக்கு.? நெட்டிசன்கள் என்ன சொல்கிறார்கள்.! இதோ டிவிட்டர் விமர்சனம்.!
June 20, 2025
”பட்டாசு விபத்தில் பலியானவர்களுக்கு ரூ.10 லட்சம் வழங்க வேண்டும்” – மதுரை கிளை உத்தரவு.!
June 20, 2025