இயக்குனர் அருண் மாதேஷ் வரன் இயக்கத்தில் செல்வராகவன் மற்றும் கீர்த்தி சுரேஷ் இணைந்து நடிக்கும் சாணிக்காயிதம் படத்திற்கான படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளது.
இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் வருகின்ற மார்ச் மாதம் 5 ஆம் தேதி நெஞ்சம் மறப்பதில்லை திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. மேலும் அடுத்ததாக தனுசை வைத்து நானே வருவேன் படத்தை இயக்க திட்டமிட்டிருந்தார். ஆனால் நடிகர் தனுஷ் தி க்ரே மேன் மற்றும் d43 படத்தில் நடித்து வருவதால் இரண்டு படங்களை முடித்துவிட்டு நானே வருவேன் படத்தில் இணைவார் என்று கூறப்ப டுகிறது. இதற்கிடையில் இயக்குனர் செல்வராவன் இயக்குனர் அருண் மாதேஷ்வரன் இயக்கத்தில் நடிக்கவுள்ள சாணிக்காயிதம் படத்திற்கான படப்பிடிப்பில் இன்று இணைந்துள்ளார். இதனை தனது ட்வீட்டர் பக்கத்தில் உறுதி படுத்தியுள்ளார். இந்த படத்தில் இவருடன் நடிகை கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார்.
மேலும் படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். ஒளிப்பதிவாளராக யக்னமூர்த்தி என்பவர் பணியாற்றவுள்ளார். இந்த படத்தின் பர்ஸ்ட் லூக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
மும்பை : அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா மற்றும் குஜராத் அணியின் கேப்டன் சுப்மன் கில் இருவருக்கும் இடையே நடந்த…
டெல்லி : பஹல்காம் விவகாரத்தில் இந்திய ராணுவம் பாகிஸ்தானை கூறிவைத்து தாக்குதல் நடத்தியது போருக்கு வழிவகுத்தது. இரண்டு நாடுகளுக்கும் இடையே நடந்த…
மதுரை : தமிழகத்தில் 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கிக்கொண்டு இருக்கும் சூழலில், தேர்தலில் பங்கேற்கும் அரசியல் கட்சிகள் அனைத்தும் தேர்தலுக்கான வேளைகளில்…
கேன்டர்பரி : இந்திய கிரிக்கெட் வீரர் கருண் நாயர் இளம் கிரிக்கெட் வீரர்கள் கிடைத்த வாய்ப்புகள் எப்படி பயன்படுத்தவேண்டும் என்கிற அளவுக்கு…
சென்னை : பாமக நிறுவனர் ராமதாஸூக்கும், அவரது மகன் அன்புமணிக்கும் இடையே ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடு பெரிய அளவில் பேசுபொருளாக…
சென்னை : தமிழ் திரையுலகின் மூத்த நடிகர் ராஜேஷ், தனது 75-ஆவது வயதில் சென்னையில் மாரடைப்பால் காலமானார். இவருடைய மறைவு சினிமா…