தனுஷின் பொல்லாதவன் படத்திற்கு பிறகு தனுஷ் – வெற்றிமாறன் கூட்டணியில் 2017ல் வெளியான திரைப்படம் ஆடுகளம். இந்த படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் டாப்சி. அதனையடுத்து இந்த படத்தில் ஜெயபாலன், கிஷோர், ஆடுகளம் நரேன், முருகதாஸ் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தார்கள். இந்த படம் தனுஷிற்கு தேசிய விருதையே வாங்கி கொடுத்து, தனுஷின் மார்க்கெட்டை உயர்த்திய படங்களில் ஒன்றாகும்.
இந்த நிலையில் தற்போது இந்த படத்தில் யாருக்கும் தெரியாத ரகசியம் ஒன்றை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது டுவிட்டரில் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இந்த படத்தில் நடித்த டாப்சி, கிஷோர் மற்றும் ஜெயபாலன் ஆகியோருக்கு பின்னணி குரல் கொடுத்தவர் யார் என்பதை தெரிவித்துள்ளனர். நடிகை டாப்சிக்கு நடிகை மற்றும் பாடகியான ஆண்ட்ரியா அவர்களும், கிஷோர் அவர்களுக்கு நடிகர் மற்றும் இயக்குநரான சமுத்திரக்கனி அவர்களும், ஜெயபாலன் அவர்களுக்கு நடிகர் ராதாரவி அவர்களும் டப்பிங் பேசியதாக தெரிவித்துள்ளனர். ஆடுகளம் படத்தில் இந்த பிரபலங்களும் பணியாற்றியுள்ளது யாரும் அறியாத விஷயமாகும். இந்த செய்தி தற்போது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை : உடல்நலக் குறைவால் அவர் இன்று காலமானதை அடுத்து, ஈஞ்சம்பாக்கம் இல்லத்தில் அஞ்சலிக்காக உடல் வைக்கப்பட்டிருந்தது. மு.க.முத்துவின் உடலுக்கு…
திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம், ஆரம்பாக்கத்தில் 8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான வழக்கில், நெல்லூரில் சந்தேகத்தின் பேரில் வட…
சென்னை : நாகப்பட்டினம், வேதாரண்யம், செருதூர் மீனவ கிராம முக துவாரத்தில் எடப்பாடி கே பழனிசாமி மக்களிடம் குறைகளை கேட்டு…
சென்னை : மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் மூத்த மகனும், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் சகோதரருமான மு.க.முத்து மறைவுக்கு…
மும்பை : மும்பையில் உள்ள கோல்டன் டொபாக்கோ ஸ்டூடியோவில் ‘கிங்’ படத்தின் படப்பிடிப்பின்போது நடிகர் ஷாருக்கான் ஒரு தீவிரமான ஆக்ஷன்…
திருவள்ளூர் : கும்மிடிப்பூண்டி அருகே சமீபத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம் குறித்து, ஜூலை 19, 2025 அன்று வெளியான தகவல்களின்படி,…