அமெரிக்காவின் கொலரடோ மாகாண அரபாஹோ மற்றும் ரூஸ்வெல்ட் காட்டுப்பகுதியில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீ வரலாறு காணாத அழிவை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தில் உள்ள காடுகளில் கடந்த சில மாதங்களாக காட்டுத்தீ வேகமாக பரவி வருகிறது. அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தில் உள்ள அரபாஹோ மற்றும் ரூஸ்வெல்ட் ஆகிய பகுதிகளில் ஆகஸ்ட் மாதம் ஏற்பட்ட காட்டுத் தீயால் அப்பகுதியில் வசித்து வந்த மலைவாழ் சமூகத்தினர் அனைவரும் தங்களது வீடுகளை காலி செய்து வெளியேறிய நிலையி, ஒரு லட்சத்து 67 ஆயிரம் ஏக்கர் பரப்பளவிலான காடுகள் தற்போது வரை அழிக்கப்பட்டுள்ளது.
மேலும் அப்பகுதியில் வாழ்ந்த மலைவாழ் சமூகத்தினரின் வீடுகளும் எரிந்து நாசமாகியுள்ளது. 90 கிலோ மீட்டர் வேகத்தில் மணிக்கு வீசக்கூடிய காற்று காய்ந்த வனப்பகுதியில் உள்ள காடுகள் முழுவதையும் அழித்து வேகமாக பரவிக்கொண்டிருக்கிறது. இதுவரை 56 சதவீதம் மட்டுமே தீ கட்டுப்படுத்தபட்டுள்ளதாகவும், மேலும் தீயை அணைக்கும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப் பட்டுள்ளது. உயிர்சேதம் இருப்பினும் அது குறித்த தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
சென்னை : இந்தியா முழுவதும் நடந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஒரு பகுதியாக மே 7-ம் தேதியான இன்று சென்னை மற்றும்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் வெற்றிகரமாக தீவிரவாதிகள் முகாம்களை அழித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர்…
கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் 57-வது போட்டியில், நடப்பு சீசனில் லீக் சுற்றுடன் நடையை கட்டவுள்ள சென்னை மற்றும் பிளே…