கொரோனா வைரஸ் பரவலை தண்ணீரால் அழிக்க முடியும்.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வருகிற நிலையில், இந்த வைரசால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், ரஷியாவில் உள்ள வெக்டார் மாநில வைராலஜி மற்றும் பயோடெக்னாலஜி ஆராய்ச்சி மையத்தின் ஆய்வில், கொரோனா வைரஸ் பரவலை தண்ணீரால் அழிக்க முடியும் என்று தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து அவர்கள் கூறுகையில், 90 மணி நேர வைரஸ் துகள்கள் அறை வெப்பநிலையில் உள்ள நீரில் 24 மணி நேரத்திலும், 99.9 சதவீதம் 72 மணி நேரத்திலும் இறக்கின்றன என்று ஆராய்ச்சியில் தெரிவித்துள்ளனர்.
கொரோனா வைரஸ் சில நிபந்தனைகளில் தண்ணீரில் வாழ முடியும் என்றாலும், கடல் அல்லது புதிய நீரில் வைரஸ் பெருக்கமடையாது என்றும், எஃகு, லினோலியம், கண்ணாடி, பிளாஸ்டிக் மற்றும் பீங்கான் பரப்புகளில் வைரஸ் 48 மணி நேரம் வரை செயல்பட முடியும் என்றும் அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.
இன்று நம்மில் அதிகமானோர் கொரோனா வைரஸை அழிப்பதற்கு பயன்படுத்தக் கூடிய ஆயுதங்களில் ஒன்று கிருமிநாசினி. வீட்டு கிருமிநாசினிகள் வைரஸுக்கு எதிராக செயல்படுகின்றன என்றும், குளோரின் கொண்ட கிருமிநாசினிகள் 30 விநாடிகளுக்குள் கொரோனா வைரஸின் மேற்பரப்பை முழுமையாக அழிக்க முடியும் என்று ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.
மும்பை : அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா மற்றும் குஜராத் அணியின் கேப்டன் சுப்மன் கில் இருவருக்கும் இடையே நடந்த…
டெல்லி : பஹல்காம் விவகாரத்தில் இந்திய ராணுவம் பாகிஸ்தானை கூறிவைத்து தாக்குதல் நடத்தியது போருக்கு வழிவகுத்தது. இரண்டு நாடுகளுக்கும் இடையே நடந்த…
மதுரை : தமிழகத்தில் 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கிக்கொண்டு இருக்கும் சூழலில், தேர்தலில் பங்கேற்கும் அரசியல் கட்சிகள் அனைத்தும் தேர்தலுக்கான வேளைகளில்…
கேன்டர்பரி : இந்திய கிரிக்கெட் வீரர் கருண் நாயர் இளம் கிரிக்கெட் வீரர்கள் கிடைத்த வாய்ப்புகள் எப்படி பயன்படுத்தவேண்டும் என்கிற அளவுக்கு…
சென்னை : பாமக நிறுவனர் ராமதாஸூக்கும், அவரது மகன் அன்புமணிக்கும் இடையே ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடு பெரிய அளவில் பேசுபொருளாக…
சென்னை : தமிழ் திரையுலகின் மூத்த நடிகர் ராஜேஷ், தனது 75-ஆவது வயதில் சென்னையில் மாரடைப்பால் காலமானார். இவருடைய மறைவு சினிமா…