unknown node
ஜம்மு-காஷ்மீர்: ஜம்மு-காஷ்மீரில் இராணுவ தலைமையகத்தை குறி வைத்து பயங்கரவாதிகள் நேற்று இரவு தாக்குதல் நடத்தினர். குப்வாரா மாவட்டத்தின் காலரூஸ் வனப்பகுதியில் உள்ள 41 வது ராஷ்டிரீய ரைபிள்ஸ் படையினரின் இராணுவ தலைமையகத்தை பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் ராணுவ வீரர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். இதனையடுத்து அப்பகுதியில் தேடுதல் வேட்டை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.