அடுத்த 3 மணிநேரத்திற்கு 35 மாவட்டங்களில் மழை – சென்னை வானிலை மையம்!

தமிழகத்தில் பல மாவட்டங்களில் கடந்த சில நாட்களாகவே கனமழை பெய்து வரும் நிலையில், இன்று சென்னை முழுவதும் பலத்த காற்றுடன் கனமழை பெய்துவருகிறது. அடுத்த 3 மணிநேரத்திற்கு 35 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தற்போது தகவலை வெளியிட்டுள்ளது.
வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
35 மாவட்டங்களில் மழை
அதன்படி, தமிழகத்தின் நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், அரியலூர், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், திருவாரூர், நாகப்பட்டினம், திருவாரூர், நாகப்பட்டினம், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களிலும் காரைக்கால் மற்றும் புரச்சேரி ஆகிய பகுதியிலும் அடுத்த 3 மணிநேரத்திற்கு மழை வெளுக்க போகிறது.
சென்னை நிலவரம்:
மேலும், சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 36-37 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கக்கூடும் எனவும் சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.