தமிழக மக்களுக்கு முதல்வர் பழனிசாமி கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்து!

தமிழக மக்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் கிருஷ்ணஜெயந்தி வாழ்த்துக்களை கூறியுள்ளார்.
உலகம் முழுவதையும் ஆட்டிப் படைக்கும் கொரோனா வைரஸ் தமிழகத்திலும் பல லட்சக்கணக்கான மக்களின் வாழ்க்கையை புரட்டிப் போட்டுள்ளது. இதனால் தமிழகமே அடங்கிய நிலையில் கடந்த சில மாதங்களாகவே ஊரடங்கு உத்தரவு அமல் படுத்தப்பட்ட நிலை உள்ளது. இந்த நிலை எப்போது மாறும் இயல்பு நிலை வரவேண்டும் என்பதற்காக பலர் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்நிலையில் அவ்வப்போது வரும் ஒரு சில பண்டிகைகள் தான் மக்களை சந்தோஷப்படுத்துகிறது.
அதில் ஒன்றாக வருகின்ற புதன் கிழமை கிருஷ்ண ஜெயந்தி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இந்த கிருஷ்ண ஜெயந்தி பண்டிகைக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் முன்னதாகவே கிருஷ்ண ஜெயந்தியை கொண்டாடும் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துக்கள் என்றும், அனைவரிடமும் அன்பு செலுத்தி பலன் கருதாது கடமையை செய்ய வேண்டும் என்னும் பகவத் கீதையின் போதனைகளை கடைப்பிடித்து எளிமையாக அடக்கத்துடன் இருப்பதை பின்பற்ற வேண்டுமென தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
ஆரம்பத்தில் திணறிய மும்பை.. வெளுத்து வாஙகிய சூர்ய குமார்.! டெல்லி அணிக்கு இதுதான் டார்கெட்.!
May 21, 2025
175 பில்லியன் டாலரில் அமெரிக்காவை பாதுகாக்க `கோல்டன் டோம்’.., டிரம்ப் அறிவித்த திட்டம் என்ன?
May 21, 2025