சிமெண்ட் லாரி மீது மோதிய ஜீப் – 8 பேர் உயிரிழப்பு ; 6 பேர் காயம்!

Default Image

கர்நாடகாவில் சிமெண்ட் லாரி மீது ஜீப் மோதிய விபத்தில் 7 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 6 பேர் காயமடைந்துள்ளனர். 

கர்நாடக மாநிலத்தில் உள்ள சிக்கபல்லாபூர் என்னும் மாவட்டத்தில் சிமெண்ட் ஏற்றிக்கொண்டு வந்த லாரி மற்றும் எதிரே வந்த ஜீப் நேருக்கு நேர் மோதியுள்ளது. இந்த விபத்தில் 8 பேர் உயிரிழந்த நிலையில், 6 பேர் காயமடைந்துள்ளனர். மேலும் அதிவேகமாக வந்த ஜீப் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்ததாகவும், அதனால் தான் விபத்து ஏற்பட்டுள்ளதாகவும் முதல்கட்ட விசாரணையில் கூறப்படுகிறது.

6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இருவர் மருத்துவமனையில் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், விபத்து குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

eps - mk stalin
DMK - Ajithkumar
Ajith Kumar TN Govt
elon musk vs Trump
Ajith Kumar Case - Siva Gangai