INDvsENG : பும்ரா இல்லைனா 2-வது தோல்வி உறுதி – இந்தியாவுக்கு ரவி சாஸ்திரி எச்சரிக்கை!
பும்ரா இல்லை என்றால் இந்திய அணி இரண்டாவது போட்டியிலும் தோல்வி அடைய வாய்ப்புகள் உள்ளது என ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.

எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் போட்டி கடந்த ஜூன் 20-ஆம் தேதி முதல் ஜூன் 24 வரை லீட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. இதில் இங்கிலாந்து அணி வெற்றிபெற்றது. இந்த தோல்வியை தொடர்ந்து அடுத்ததாக ஜூலை 2-ஆம் தேதி முதல் ஜூலை 6 வரை நடைபெறவுள்ள இரண்டாவது போட்டியில் விளையாட இந்தியா தயாராகி வருகிறது.
இந்த போட்டியிலாவது இந்திய அணி வெற்றிபெற்று இங்கிலாந்துக்கு பதிலடி கொடுக்கும் என ரசிகர்கள் எதிர்பார்க்கும் நிலையில், அவர்களுடைய தலையில் குண்டை தூக்கிப்போடும் விதமாக ஒரு தகவல் தீயாக ஓடிக்கொண்டு இருக்கிறது. அது என்னவென்றால், இங்கிலாந்துக்கு எதிரான இந்த இரண்டாவது போட்டியில் இந்தியாவின் பந்துவீச்சில் தூணாக இருந்த பும்ரா விளையாடமாட்டார் என்பது தான். பண்ணுச்சுமை காரணமாக அவர் இந்த இரண்டாவது போட்டியில் விளையாடுவது சந்தேகம் தான் எனவும் தகவல்கள் வெளியாகி இருந்தது.
இன்னும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. அப்படி இருந்தாலும் நம்ப தக்க கிரிக்கெட் வட்டாரத்தில் இருந்து கிடைத்த தகவல் என்னவென்றால், இரண்டாவது போட்டியில் அவர் விளையாடமாட்டார் எனவும் அவருக்கு பதிலாக அர்ச்தீப் சிங்கிற்கு வாய்ப்புகள் வழங்கப்படவுள்ளதாகவும் தகவல்கள் ஓடிக்கொண்டு இருக்கிறது. அர்ச்தீப் சிங் சிறப்பான பந்துவீச்சாளராக இருந்தாலும் கூட பும்ரா இடத்தை நிரப்புவாரா என்கிற கேள்விகளும் ஒரு பக்கம் எழுந்திருக்கிறது.
அதே சமயம், முதல் போட்டியின் முதல் இன்னிங்ஸில் பும்ரா 5 விக்கெட் எடுத்திருந்தார். அவரைப்போல ஒரு வீரர் இரண்டாவது போட்டியில் விளையாடவில்லை என்றால் நிச்சயமாக இந்தியாவுக்கு பெரிய பின்னடைவாக தான் இருக்கும் என முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பலரும் எச்சரிக்கிறார்கள். அப்படி தான் இந்தியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரரும். பயிற்சியாளருமான ரவி சாஸ்திரி சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்டபோது இரண்டாவது போட்டியில் பும்ரா இல்லை என்றால் இந்தியாவுக்கு மீண்டும் தோல்வி என கூறியுள்ளார்.
இது குறித்து பேசிய அவர் “இந்திய அணிக்காக பும்ரா 2-வது போட்டியில் விளையாடதது குறித்து ஒன்றுக்கு இரண்டு முறை யோசித்து முடிவு எடுக்கவேண்டும் என்று நான் சொல்வேன். அதே சமயம் அவர் இல்லாமல் விளையாடினாள் நிச்சயமாக இந்திய அணி இரண்டாவது போட்டியிலும் தோல்வி அடைய வாய்ப்புகள் உள்ளது. பூம்ரா மூன்று டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவேன் என்று கூறினார்.
இப்போது, அவர் எந்த மூன்று போட்டிகளில் விளையாடுவார் என்பது உங்களுக்குத் தெரியும், அது கேட்கப்பட வேண்டிய மற்றொரு கேள்வி. அவர் ஒரு இடைவெளி இப்போது எடுத்தால் எப்படி சரியாக இருக்கும். ஏற்கனவே, இங்கிலாந்து, ஆஸ்ரேலியா அணிகளுக்கு எதிராக நடந்த டெஸ்ட் தொடரில் இந்தியா தோல்வி அடைந்திருக்கிறது. எனவே, இந்த தொடரில் கொஞ்சம் கவனமாக விளையாடவேண்டும்” எனவும் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.