கிரிக்கெட்

“கோப்பையை தவறவிட்ட குற்றவாளி அவர் தான்”..ஸ்ரேயாஸ் ஐயரை திட்டிய யோகராஜ் சிங்!

பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் இறுதிப்போட்டி வரைசென்று பஞ்சாப் அணி தோல்வி அடைந்தாலும் கூட அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயரை பாராட்டியே ஆகவேண்டும் என்று கூறலாம். ஏனென்றால், நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் சிறப்பாக பேட்டிங் ஆடியது மட்டுமின்றி அணியையும் சிறப்பாக வழிநடத்தி கொண்டுபோனார். இதுவரை ஒரு முறை மட்டுமே அதாவது 2015-ஆம் ஆண்டு மட்டுமே பஞ்சாப் இறுதிப்போட்டிக்கு முன்னேறி தோல்வியை சந்தித்தது. அதன்பிறகு 9 வருடங்களாக பஞ்சாப் அணி இறுதிப்போட்டிக்கு தகுதிபெறாமல் இருந்த நிலையில், இந்த சீசன் […]

Ahmedabad 5 Min Read
shreyas iyer yograj singh

ஐபிஎல் ஓவர்…இன்று முதல் தொடங்குகிறது TNPL!

கோவை : ஐபிஎல் தொடர் கோலாகலமாக நடந்து முடிந்த நிலையில், அடுத்ததாக 9-ஆவது தமிழ்நாடு பிரீமியர் லீக் (TNPL) கிரிக்கெட் தொடர் கோவையில் இன்று (ஜூன் 05, 2025) தொடங்குகிறது. இன்று தொடங்கும் இந்த கிரிக்கெட் தொடர் வரும் ஜூலை 6, வரை நடைபெறவுள்ளது. இந்த மாபெரும் டி20 கிரிக்கெட் திருவிழாவில் 8 அணிகள் பங்கேற்கின்றன, மேலும் போட்டிகள் கோவை, சேலம், திண்டுக்கல், மற்றும் நெல்லை ஆகிய நகரங்களில் நடைபெற உள்ளன. இந்த தொடரின் முதல் போட்டியில் திண்டுக்கல் […]

Dindigul Dragons vs Lyca Kovai Kings 8 Min Read
tnpl 2026

தீரா சோகத்தில் முடிந்த கொண்டாட்டம்…மன வேதனையில் விராட் கோலி!

பெங்களூர் : ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணி 18-வருடங்களுக்கு பிறகு கோப்பை வென்ற காரணத்தால் அதனை ரசிகர்கள் நேற்று கொண்டாடி தீர்த்தனர். இந்த உற்சாக கொண்டாட்டம் தீராத சோகத்தில் முடியும் என யாரும் நினைத்து பார்த்திருக்க முடியாது என்கிற வகையில் பெரும் சோகமான சம்பவம் நடந்திருக்கிறது. அது என்னவென்றால், (ஆர்சிபி) அணியின் ஐபிஎல் 2025 வெற்றி விழாவில் ஏற்பட்ட பயங்கர கூட்ட நெரிசலில், 11 பேர் சிக்கி உயிரிழந்தது தான். 18 ஆண்டு காத்திருப்புக்குப் பிறகு ஆர்சிபி முதல் […]

#Bengaluru 5 Min Read
rcb fans celebration death vk

பெங்களூர் சம்பவத்தை வச்சு அரசியல் செய்ய வேண்டாம் – ராஜீவ் சுக்லா

பெங்களூர் : சின்னசாமி மைதானத்தில் நடந்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) அணியின் ஐபிஎல் 2025 வெற்றி விழாவில், எதிர்பாராத கூட்ட நெரிசலால் 11 பேர் உயிரிழந்தனர், மேலும் 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 18 ஆண்டு நீண்ட காத்திருப்புக்குப் பிறகு ஆர்சிபி அணி முதன்முறையாக ஐபிஎல் கோப்பையை வென்றதை கொண்டாடுவதற்காக நடத்தப்பட்ட இந்தப் பேரணியில், லட்சக்கணக்கான ரசிகர்கள் கலந்துகொண்டதால் இந்த பேரிழப்பு ஏற்பட்டது. கோப்பை வென்ற கொண்டாட்டத்தில் பலரும் மகிழ்ச்சியில் இருந்த […]

#Bengaluru 5 Min Read
rcb fans celebration death

“இது கிரிக்கெட்டுக்கு சோகமான நாள்”…இரங்கல் தெரிவித்த அனில் கும்ப்ளே!

பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) அணியின் ஐபிஎல் 2025 வெற்றிக் கொண்டாட்ட நிகழ்வில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழந்த சம்பவம் கிரிக்கெட் உலகில் பெரும் அதிர்ச்சியையும் துக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த சோகமான சம்பவத்தில் 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 18 ஆண்டுகளுக்குப் பிறகு ஆர்சிபி அணி முதல் முறையாக ஐபிஎல் கோப்பையை வென்றதைக் கொண்டாடுவதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட இந்தப் பேரணியில், எதிர்பாராதவிதமாக லட்சக்கணக்கான ரசிகர்கள் திரண்டதால் இந்த […]

#Bengaluru 4 Min Read
anil kumble sad

18 வயசு ஆச்சா? வாக்காளராக மாறுங்க…RCB-க்கு வாழ்த்து தெரிவித்து விழிப்புணர்வு சொன்ன ECI!

பெங்களுர் : ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணி 18 ஆண்டுகளுக்குப் பிறகு ஐபிஎல் 2025 கோப்பையை வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளது. அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியை 6 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, முதல் முறையாக கோப்பையை வேற்று வாழ்த்துக்கள் மழையை தற்போது பெற்றுக்கொண்டு வருகிறது . இந்த வெற்றி, அணியின் நீண்டகால ரசிகர்களுக்கு மகத்தான மகிழ்ச்சியை அளித்துள்ளது. இந்த வெற்றியை கொண்டாடும் வகையில், பெங்களூருவில் விடாந சவுதாவிலிருந்து […]

Ahmedabad 5 Min Read
rcb 2025

“அடுத்த சீசன் கோப்பை எங்களுக்கு”…தோல்விக்கு பின் வேதனையுடன் பேசிய ஸ்ரேயாஸ் ஐயர்!

அகமதாபாத் : நாம ஜெயிச்சிட்டோம் மாறா என பெங்களூர் அணியின் 18-ஆண்டுகள் கனவான கோப்பையை வெல்லும் கனவு நேற்று நிறைவேறியது. நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி நேற்று நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் பஞ்சாப் அணியை எதிர்கொண்டு விளையாடியது. முதலில் பேட்டிங் செய்த ஆர்சி பிஅணி 20 ஓவர்களில் ஒன்பது விக்கெட்டுகளுக்கு 190 ரன்கள் எடுத்தது. இதையடுத்து களமிறங்கிய பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 184 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. எனவே, போட்டியில் 6 […]

Ahmedabad 6 Min Read
shreyas iyer

கோப்பை பெங்களூருக்கு வர வேண்டும் என்பது எனது கனவு…முன்னாள் உரிமையாளர் விஜய் மல்லையா எமோஷனல்!

அகமதாபாத் : ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டியில் பஞ்சாப் கிங்ஸை 6 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, 18 ஆண்டுகள் நீடித்த கோப்பை கனவை நினைவாக்கியது. இந்த வெற்றி ஆர்.சி.பி ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல், அணியின் முன்னாள் உரிமையாளர் விஜய் மல்லையாவுக்கும் பெருமைமிக்க தருணமாக அமைந்தது. அவரது தலைமையில் 2008இல் தொடங்கப்பட்ட ஆர்.சி.பி, பல ஆண்டுகளாக கோப்பையின் வெற்றிக்காகப் போராடியது. எனவே. ஒரு வழியாக பெங்களூர் கோப்பை வென்ற காரணத்தால் விஜய் மல்லையாவும் […]

Ahmedabad 6 Min Read
Vijay Mallya

கோப்பையை வென்ற பெங்களூர் அணி…போராடி தோற்ற பஞ்சாப்! பரிசுத்தொகை எவ்வளவு?

அகமதாபாத் : நாம ஜெயிச்சிட்டோம் மாறா என பெங்களூர் அணியின் 18-ஆண்டுகள் கனவான கோப்பையை வெல்லும் கனவு நேற்று நிறைவேறியது. நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி நேற்று நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் பஞ்சாப் அணியை எதிர்கொண்டு விளையாடியது. முதலில் பேட்டிங் செய்த ஆர்சி பிஅணி  20 ஓவர்களில் ஒன்பது விக்கெட்டுகளுக்கு 190 ரன்கள் எடுத்தது. இதையடுத்து களமிறங்கிய பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 184 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. எனவே, போட்டியில் […]

Ahmedabad 6 Min Read
Royal Challengers Bengaluru won

குழந்தை போல தூங்குவேன்! கோப்பையை வென்றதால் எமோஷனலான விராட் கோலி!

அகமதாபாத் : ஐபிஎல் சீசன் தொடங்கி 18-ஆண்டுகள் ஆகியிருக்கும் நிலையில் ஒருமுறை கூட கோப்பை வெல்லவில்லை என்கிற விமர்சனத்தை வாங்கிக்கொண்டு இருந்த பெங்களூர் அணி நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடி முதல் முறையாக கோப்பையை வென்று விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்துள்ளது. நேற்று நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடந்த இறுதிப்போட்டியில் பெங்களூர் அணி பஞ்சாப் அணியை எதிர்கொண்டது. முதலில் பேட்டிங் செய்த ஆர்சி பிஅணி  20 ஓவர்களில் ஒன்பது விக்கெட்டுகளுக்கு 190 ரன்கள் எடுத்தது. இதையடுத்து களமிறங்கிய […]

Ahmedabad 5 Min Read
Royal Challengers Bengaluru vs Punjab Kings

நம்ம ஜெயிச்சிட்டோம் மாறா.!! 18 வருட கனவு.., முதல் முறையாக கோப்பை வென்றது RCB அணி.!

அகமதாபாத் : ஐபிஎல் தொடரின் இன்றைய தினம் இறுதிப் போட்டி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் பஞ்சாப் கிங்ஸ் இடையே நடைபெற்றது. அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடந்த இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி அணி 20 ஓவர்கள் முடிவில் 190 ரன்களை குவித்தது. ஆனால், இந்த போட்டியில் டாஸில் தோல்வி அடைந்தாலும், போட்டியில் 6 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணியை வீழ்த்தி முதல் முறையாக மகுடத்தை முத்தமிட்டிருக்கிறது பெங்களூரு அணி. முதலில் […]

Ahmedabad 8 Min Read
RCB win

யார் கனவு நனவாகும்? 191 ரன் அடிச்சா கப் உங்களுக்கு.., சவாலான இலக்கு வைத்த ஆர்சிபி.!

அகமதாபாத் : இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 இன் இறுதிப் போட்டி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது. பஞ்சாப் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் டாஸ் வென்று முதலில் பந்து வீச முடிவு செய்தார். இந்த இரு அணிகளும் பிளையிங் லெவன் அணியில் எந்த மாற்றமும் செய்யவில்லை. தற்பொழுது, பேட்டிங் செய்து வரும் ஆர்சிபி அணிக்கு தொடக்கம் நன்றாக அமைவியவில்லை. ஆம், முதல் அடியாக கைல் ஜேமிசன் பந்துவீச்சில், […]

Ahmedabad 5 Min Read
Royal Challengers Bengaluru vs Punjab Kings

ஆர்சிபிக்கு முதல் அடி: தூக்கி அடித்த சால்ட்.., அலேக்காக கேட்ச் புடித்த ஸ்ரேயாஸ் ஐயர்.!

அகமதாபாத்: பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ஆர்சிபி அணிகளுக்கு இடையிலான இந்தியன் பிரீமியர் லீக்கின் (ஐபிஎல் 2025) இறுதிப் போட்டி தற்போது அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. சரியாக 7 மணிக்கு டாஸ் போடப்பட்டு பிளேயிங் லெவெனும் அறிவிக்கப்பட்டது. அதன்படி, டாஸ் வென்ற பஞ்சாப் அணி பவுலிங்கை தேர்வு செய்தளது. இதனால், முதலில் பெங்களூரு அணி அணி பேட்டிங் செய்து வருகிறது. இதனிடையே, பெங்களூர் அணியின் ஓபனிங் வீரர் பில் சால்ட், அந்த அணியில் இணைந்துள்ளதாக […]

Ahmedabad 4 Min Read
Shreyas Iyer - Phil Salt

PBKS vs RCB: ஐபிஎல் இறுதிப்போட்டி.., வானில் இந்திய ராணுவத்திற்கு மரியாதை.!

அகமதாபாத் : ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) மற்றும் பஞ்சாப் கிங்ஸ் (PBKS) அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் 2025ன் இறுதிப் போட்டி தொடங்கியது. அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த பரபரப்பான போட்டிக்கு முன்னதாக, ஆபரேஷன் சிந்தூரில் துணிச்சலுடன் செயல்பட்ட இந்திய ஆயுதப்படைகளுக்கு இந்திய விமானப்படையினர் மரியாதை செலுத்தியது. ஆம்., மைதானத்தில் எங்கு பார்த்தாலும் மூவர்ணக் கொடியே மிளிர்கிறது. ஆபரேஷன் சிந்தூர் வெற்றியை தொடர்ந்து ராணுவத்தை கௌரவிக்கும் வகையில் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. […]

Ahmedabad 4 Min Read
IPLFinals

PBKS vs RCB: ஐபிஎல் இறுதிப் போட்டி.., வெல்லப்போவது யார்? டாஸ் – பிளேயிங் லெவன் இதோ.!

அகமதாபாத்: பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ஆர்சிபி அணிகளுக்கு இடையிலான இந்தியன் பிரீமியர் லீக்கின் (ஐபிஎல் 2025) இறுதிப் போட்டி தற்போது அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் விரைவில் தொடங்க போகிறது. இந்த போட்டி இரவு 7.30 மணிக்கு தொடங்கும். தற்பொழுது, டாஸ் போடப்பட்டு பிளேயிங் லெவெனும் அறிவிக்கப்பட்டது. அதன்படி, டாஸ் வென்ற பஞ்சாப் அணி பவுலிங்கை தேர்வு செய்துள்ளது. இதனால், முதலில் பெங்களூரு அணி அணி பேட்டிங் செய்ய போகிறது. ஐபிஎல் கோப்பை கனவுடன் இறுதிப் […]

#Weather 6 Min Read
RCBvPBKS

அகமதாபாத்தில் மழை: இறுதிப்போட்டி நடைபெறுமா? மழை குறுக்கிட்டால் கோப்பை யாருக்கு.?

அகமதாபாத்: பெங்களூரு – பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் இறுதிப் போட்டி சற்று நேரத்தில் தொடங்கவுள்ளது. போட்டியை காண, நரேந்திர மோடி மைதானத்திற்கு ரசிகர்கள் குவிந்து வருகின்றனர். இந்தச் சூழலில், அங்கு மழை பெய்து வருவதால் போட்டி நடக்குமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. கோப்பையை கைப்பற்றும் 18 ஆண்டுகள் கனவுடன் பெங்களூரு அணி களமிறங்கும் சூழலில் மழை குறுக்கிடுவது ரசிகர்களை ஏமாற்றமடைய வைத்துள்ளது. நேற்று முன் தினம், இதே மைதானத்தில் நடந்த இரண்டாவது தகுதிச்சுற்று போட்டியை பாதித்தது. […]

#Weather 5 Min Read
RCB or PBKS

இந்த வருஷம் ஆர்சிபிக்கு தான் கப்! ரூ.6.4 கோடி பெட் கட்டிய ராப் பாடகர் டிரேக்!

அகமதாபாத் : நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி இன்று அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) மற்றும் பஞ்சாப் கிங்ஸ் (PBKS) அணிகள் மோதிக்கொள்கிறது. இரண்டு அணிகளும் இதுவரை ஒரு முறை கூட கோப்பை வெல்லவில்லை என்கிற காரணத்தால் எந்த அணி கோப்பையை வெல்லபோகிறது என்கிற எதிர்பார்ப்புகளும் எழுந்திருக்கிறது. இரண்டு அணிகளும் சிறப்பான பார்மில் இருப்பதன் காரணமாக இன்று நடைபெறவுள்ள இந்த போட்டி மிகவும் சவாலான போட்டியாக இருக்கும் […]

Drake 7 Min Read
Drake virat kohli rcb

முதல் முறையாக கோப்பையை வெல்லப்போவது எந்த அணி? இறுதிப்போட்டியில் பெங்களூர் பஞ்சாப் மோதல்!

அகமதாபாத் : ஐபிஎல் 2025 கோலாகலமாக நடந்து முடிந்து இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இன்று (ஜூன் 3)-ஆம் தேதி நடைபெறவுள்ள இறுதிப்போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) மற்றும் பஞ்சாப் கிங்ஸ் (PBKS) அணிகள் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் மோதுகிறது. இந்த இரு அணிகளும் இதுவரை ஐபிஎல் கோப்பையை வென்றதில்லை. எனவே, எந்த அணி இன்று நடைபெறும் இந்த போட்டியில் வெற்றிபெற்று கோப்பையை வெல்லப்போகிறது என்கிற எதிர்பார்ப்புகள் எழுந்திருக்கிறது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு இதுவரை மூன்று […]

Indian Premier League 2025 5 Min Read
RCBvsPBKS

12 ஆண்டுகளுக்கு பின் இந்தியாவில் உலகக் கோப்பை.! மகளிர் ஒருநாள் தொடர் அறிவிப்பு.!

டெல்லி : இந்த ஆண்டு மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பைக்கான தேதிகள் மற்றும் இடங்களை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) அறிவித்துள்ளது. அதன்படி, செப்டம்பர் 30 முதல் நவம்பர் 2 வரை நடைபெறும் இந்தப் போட்டியின் 13வது பதிப்பாகும். இந்தியாவில் 3 நகரங்களிலும், இலங்கையில் 2 நகரங்களிலும் உலகக்கோப்பை போட்டிகள் நடைபெறும் இந்தப் போட்டியில் மொத்தம் எட்டு அணிகள் பங்கேற்கும் ஐசிசி அறிவித்துள்ளது. இந்தப் போட்டியில் ஆஸ்திரேலியா நடப்பு சாம்பியனாக நுழையும். அவர்கள் 2022 ஆம் ஆண்டு […]

cricket world cup 5 Min Read
2025 ICC Women's Cricket World Cup

ஒரே நாளில் ஓய்வை அறிவித்த 2 அதிரடி வீரர்கள்.! எந்த போட்டியில் இருந்து தெரியுமா?

பிரிட்டோரியா : இன்று ஜூன் 2 (திங்கட்கிழமை) ஒரே நாளில் கஹென்ரிச் கிளாசென் மற்றும் ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் க்ளென் மேக்ஸ்வெல்லும் விடைபெற்றார். இந்த திடீர் முடிவு இரு வீரர்களின் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இருந்து ஆஸ்திரேலிய நட்சத்திர வீரர் கிளென் மேக்ஸ்வெல் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 149 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள அவர், 3990 ரன்கள் மற்றும் 77 விக்கெட்டை வீழ்த்தியுள்ளார்.  மேலும், தென்னாப்ரிக்க கிரிக்கெட் அணியின் அதிரடி ஆட்டக்காரரான […]

Heinrich Klaasen 6 Min Read
maxwell - heinrich klaasen