உத்திரப்பிரதேச மாநிலத்தில் திருமணமான ஒரே மாதத்தில் 70 ஆயிரம் பணம் மற்றும் நகைகள் உடன் வீட்டை விட்டு ஓடிய புதுப்பெண். உத்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ள ஷாம்லி மாவட்டத்தில் திருமணமாகி ஒரு மாதங்கள் கூட முடிவடையாத நிலையில் ஒரு பெண் மாமியார் வீட்டில் இருந்து 70 ஆயிரம் பணம் மற்றும் தங்க நகைகளுடன் வீட்டை விட்டு ஓடி விட்டதாக அவரது கணவர் பிங்கு என்பவர் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து ஷாம்லி மாவட்ட காவல் நிலையத்தில் அவரது கணவர் அளித்த […]
அமெரிக்காவை சேர்ந்த நிறுவனமான டெஸ்லா ,2021 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இந்தியாவில் விற்பனையத் தொடங்க உள்ளதாக மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். தனியார் செய்தி நிறுவனத்திற்கு அமைச்சர் நிதின் கட்கரி பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில்,ஏராளமான இந்திய நிறுவனங்களும் மின்சார வாகனங்களை தயாரித்து வருகின்றன.அவை மிகவும் மலிவாக இருக்கும் .ஆனால் தொழில்நுட்ப ரீதியாக டெஸ்லாவைப் போலவே மேம்பட்டவை.டெஸ்லா முதலில் விற்பனையுடன் நடவடிக்கைகளைத் தொடங்கும். பின்னர் கார்களுக்கான உற்பத்தியைப் தொடங்கும்.”ஐந்து ஆண்டுகளில் […]
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள உத்தரகண்ட் முதல்வர் திரிவேந்திர சிங் ராவத், டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார். உத்தரகண்ட் மாநில முதலமைச்சர் திரிவேந்திர சிங் ராவத்க்கு கடந்த டிசம்பர் 18 ஆம் தேதி கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் தனது வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டார். நேற்று முன்தினம் (ஞாயிற்றுக்கிழமை) அவருக்கு காய்ச்சல் தீவிரமடைந்ததாக கூறப்பட்ட நிலையில், டெஹ்ரா-டுனில் உள்ள டூன் மருத்துவமனையில் அவரை அனுமதித்தனர். இதனையடுத்து அவர், நேற்று டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு, சிகிச்சை […]
பிரேசிலில் வசித்து தர்மேந்திரா என்பவர் தனது மனைவியான சப்னா அனிஜாவுக்கு எட்டாம் ஆண்டு திருமண நாள் பரிசு வழங்குவதற்காக நிலவில் 3 ஏக்கர் நிலம் வாங்கி கொடுத்துள்ளார். இன்று பலருக்கும் நாம் வாழும் இந்த பூமியில் ஒரு சென்டில் நிலம் வாங்குவதே கனவாக இருந்து வருகிற நிலையில், தனது ஆசை மனைவிக்காக எட்டாம் ஆண்டு திருமண நாளில் நிலவில் நிலம் வாங்கி கொடுத்து அசத்தியுள்ளார் தர்மேந்திரா என்பவர். பிரேசிலில் வசித்து வரும் இவர் தனது மனைவியான சப்னா அனிஜாவுக்கு […]
ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் மற்றும் அஸ்ட்ராஜெனகா இணைந்து உருவாக்கும் இந்தியாவின் கொரோனா தடுப்பூசி ஒத்திகை இன்று மற்றும் நாளை நான்கு மாநிலங்களில் நடைபெறுகிறது. கடந்த ஒரு வருட காலமாக உலகம் முழுவதிலும் தனது வீரியத்தை குறையாமல் காட்டிக் கொண்டிருக்கும் கொரானா வைரஸ் தாக்கம் இந்தியாவில் சற்றே குறைந்து உள்ளது என்றே கூறலாம். இருப்பினும் இந்தியாவில் மட்டுமல்லாமல் பல்வேறு நாடுகளிலும் இந்த கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பூசி மற்றும் தடுப்பு மருந்துகள் குறித்த ஆராய்ச்சிகள் விறுவிறுப்பாக நடந்து கொண்டே உள்ளது. […]
குஜராத் மாநிலம், ராஜ்கோட்டில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க திட்டமிட்டுள்ள நிலையில், டிசம்பர் 31 ஆம் தேதி காணொளி மூலம் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டவுள்ளார். குஜராத் மாநிலம், ராஜ்கோட் மாவட்டத்தில் உள்ள காந்தேரி கிராமத்திற்கு அருகே எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய அரசு 1,195 கோடி ரூபாய் ஒதுக்கியது. இந்த எய்ம்ஸ் மருத்துவமனை, 201 ஏக்கர் பரப்பளவில் அமைக்கவுள்ளதாகவும், அதற்கான நில கையகப்படுத்தும் பணிகள் நிறைவடைந்தது. இந்நிலையில், ராஜ்கோட்டில் அமையவுள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு டிசம்பர் 31 ஆம் […]
நியூ பாபூர் – நியூ குர்ஜா வழித்தடத்தில் கிழக்கத்திய சரக்கு ரயில் போக்குவரத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை 11 மணிக்கு காணொலிக் காட்சி மூலம் தொடங்கி வைக்கிறார். இந்நிகழ்ச்சியின் போது, உத்தரப்பிரதேசம் கிழக்கத்திய பிரத்யேக சரக்கு ரயில் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு மையத்தையும் பிரதமர் தொடங்கி வைக்கிறார்.உத்தரப்பிரதேச ஆளுநர் ஆனந்திபென் படேல், உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் ஆகியோரும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்கின்றனர். 351 கி.மீ நீளமுள்ள நியூ […]
வெங்காய ஏற்றுமதிக்கு தடை விதித்திருந்த நிலையில், ஜனவரி முதல் வெங்காய ஏற்றுமதிக்கு அனுமதி அளித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. கொரோனா ஊரடங்கு மற்றும் மழை காரணமாக வெங்காய உற்பத்தி இந்த ஆண்டு பெரிதும் பாதிக்கப்பட்டது. இதன் விளைவால் வெங்காய உற்பத்தியும் கடுமையாக குறைந்தது. இதனால், சில்லறை, மொத்த வர்த்தகம் ஆகியவற்றில் வெங்காயத்துக்கு கெடுபிடி ஏற்பட்டது. நாடு முழுவதும் வெங்காயத்தின் விலை உச்சத்தை தொட்டது. இதையடுத்து, வெங்காயத்தின் விலையேற்றத்தை கட்டுப்படுத்தும் வகையில், கடந்த அக்டோபரில் சின்ன வெங்காயம், பெரிய வெங்காயம் […]
இந்தியாவில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு, ஜனவரி 31ஆம் தேதி வரை நீடிக்கப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில், முதலில் நாடு முழுவதும் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதன்பின் மக்களின் வாழ்வாதாரம் மற்றும் பொருளாதாரம் ஆகியவற்றை கருத்தில் கொண்ட மத்திய அரசு சில தளர்வுகளை அறிவித்தது. தற்பொழுது தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில், மத்திய அரசு தளர்வுகளுடனான ஊரடங்கை ஜனவரி 31 -ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டது. […]
அசாமில் மூன்று நாள் அசாம் சட்டமன்றக் கூட்டத்தொடர் இன்று தொடங்கியுள்ள நிலையில், மாநிலத்தில் மதரஸா மாகாண மயமாக்கலை ரத்து செய்வதற்கான மசோதாவை அசாம் அரசு இன்று தாக்கல் செய்தது. குளிர்கால கூட்ட தொடர் தொடங்கிய பின்னர் ஊடகங்களுடன் பேசிய அசாம் அமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா, மசோதா நிறைவேற்றப்பட்டதும், மாநில அரசால் மதரஸாவை நடத்தும் நடைமுறை முடிவுக்கு வரும் என்று கூறினார். ஒரு அறிக்கையின்படி, அசாமில் 614 அரசு உதவி மற்றும் அங்கீகரிக்கப்பட்ட மதரஸாக்கள் மற்றும் சுமார் 900 […]
வேளாண் சட்டங்களை ரத்து செய்வது தொடர்பாக வரும் 30 ஆம் தேதி மதியம் 2 மணிக்கு பேச்சுவார்த்தைக்கு வருமாறு விவசாயிகளுக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. அண்மையில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக ஹரியானா, குஜராத், பஞ்சாப், உத்தரப்பிரதேம் உள்ளிட்ட பல மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் ஆயிரக்கணக்கானோர், இன்று 33 ஆம் நாளாக டெல்லி எல்லையில் போராட்டம் நடத்திக்கொண்டு வருகின்றனர். விவசாயிகளின் போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், மத்திய அரசு 5 […]
கேரள தலைநகரான திருவனந்தபுரத்தின் மேயராக 21 வயதான இளம்பெண் ஆர்யா ராஜேந்திரன், இன்று பதவியேற்றார். அவருக்கு பலரும் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். கேரளாவில் நடைபெற்று முடிந்த உள்ளாட்சி தேர்தலில், திருவனந்தபுரத்தை உள்ளடக்கி, ஆளும் இடதுசாரி கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்றது. அதன்படி, திருவனந்தபுரம், முடவன்முகல் வார்டில் போட்டியிட்ட 21 வயது கல்லூரி மாணவியான ஆர்யா ராஜேந்திரன், அவரை எதிர்த்து போட்டியிட்ட யுடிஎஃப் வேட்பாளர் ஸ்ரீகலாவை விட 2872 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றிபெற்றார். இதனையடுத்து, […]
பஞ்சாப் முதல்வரின் வேண்டுகோளையும் மீறி 1338 செல்போன் டவர்கள் டெல்லியில் இதுவரை விவசாயிகளால் சேதபடுத்தப்பட்டுள்ளது. மத்திய அரசால் கொண்டுவரப்பட்டுள்ள வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் கடந்த ஒரு மாதங்களுக்கு மேலாக போராட்டம் நடத்தப்பட்டு கொண்டிருக்கிறது. இந்த போராட்டத்தில், பஞ்சாப் மற்றும் ஹரியானா உள்ளிட்ட பல மாநிலங்களிலிருந்து விவசாயிகள் கலந்துகொண்டு தங்கள் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். மத்திய அரசால் பேச்சு வார்த்தைக்கு விவசாயிகள் அழைக்கப்பட்டு பேசினாலும், முழுவதுமாக மூன்று சட்டங்களையும் ரத்து செய்ய வேண்டும் என்பதையே விவசாயிகள் கோரிக்கையாக […]
கடந்த தேர்தல்களில் பிரதமர் மோடி மற்றும் பாஜக மீதான நம்பிக்கையை எவ்வாறு மாற்றியுள்ளது என்பதைக் காட்டுகிறது என்று அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி, சமீபத்தில் நடைபெற்ற பஞ்சாயத்து தேர்தலில் பாஜக வெற்றி பெற வைத்த மக்களுக்கு நன்றி என்று தெரிவித்தார். பிரதமர் தலைமையில் கிராமப்புற மக்களுக்கு நம்பிக்கை உள்ளது என்றும் ஜம்மு-காஷ்மீரில் நடைபெற்ற டி.டி.சி தேர்தலில் பாஜக வரலாறு உருவாக்கியுள்ளது எனவும் […]
ஆயில் இந்தியா லிமிடெட் (OIL) உள்ள பல்வேறு காலிப்பணியிடங்களை நிரப்ப அந்நிறுவனம் வேலைவாய்ப்பை அறிவித்துள்ளது. ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரின் ஆயில் இந்தியா லிமிடெட் (OIL) உள்ள பல்வேறு காலிப்பணியிடங்களை நிரப்ப அந்நிறுவனம் அறிவித்துள்ளது. தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது என்றும் தெரிவித்துள்ளது. விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப படிவங்களை ஆயில் இந்தியா லிமிடெட் அதிகாரப்பூர்வ இணையத்தில் பெறலாம்: https://www.oil-india.com/ விண்ணப்பிக்கும் முறை: https://www.oil-india.com/Current_openNew.aspx என்ற இணையதளம் மூலம் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம். ராஜஸ்தான் RF/ WP / 11 (2020) ’என்பதைக் கிளிக் செய்து […]
ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் அஸ்ட்ராஜெனகா கூட்டு தயாரிப்பில் உருவாகிவந்த தடுப்பூசிக்கான ஒத்திகை இன்று இந்தியாவில் நடைபெற உள்ள நிலையில், இன்னும் இரண்டு நாட்களில் அங்கீகாரம் வழங்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக பல்வேறு இடங்களிலும் மக்கள் பாதிக்கப்பட்டு தொடர்ந்து உயிரிழந்து வருகின்றனர். இன்னும் கொரோனாவின் தாக்கம் குறையாத நிலையில், இந்தியாவில் சற்று குறைந்துள்ளது என்று கூறலாம். இருப்பினும் இந்த கொரானா வைரஸை முழுவதுமாக ஒழிப்பதற்கு தடுப்பூசி மற்றும் தடுப்பு மருந்துகள் பல்வேறு ஆராய்ச்சி கூடங்களில் கண்டுபிடிக்கப்பட்டு […]
நாட்டின் முதல் டிரைவர் இல்லாத ரயில் சேவையை பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்துள்ளார். முழுவதும் தானியங்கி முறையில் இயங்குவதால் ஓட்டுநர் இல்லாத இந்த ரயில்களில் மனிதத் தவறுகள் களையப்படுகின்றன.மெஜந்தா மார்க்கத்தில் இந்தச் சேவை துவக்கப்பட்ட பிறகு டெல்லி மெட்ரோவின் பிங்க் மார்க்கத்திலும் 2021-ஆம் ஆண்டு மத்தியில் ஓட்டுநர் இல்லாத ரயில் சேவை இயக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இன்று நாட்டின் முதல் முழுமையான (automatic) டிரைவர் இல்லாத மெட்ரோ ரயில் சேவையை 37 கி.மீ. மெஜந்தா […]
காங்கிரஸ் கட்சியின் 136-வது நிறுவன நாளை முன்னிட்டு இன்று டெல்லியில் கட்சி தலைமை அலுவலகத்தில் ஏ.கே அந்தோணி கொடி ஏற்றினார். காங்கிரஸ் கட்சியின் 136-வது நிறுவன நாளை முன்னிட்டு இன்று டெல்லியில் கட்சி தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் மூத்த தலைவர் ஏ.கே அந்தோணி கொடி ஏற்றினார். டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். காங்கிரஸ் கட்சி தொடங்கப்பட்ட 136-வது ஆண்டு விழா இன்று கொண்டாடப்படும் நிலையில், பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு காங்கிரஸ் கட்சி ஏற்பாடு செய்துள்ளது. […]
டெல்லியில் குடியரசு தின விழா அணிவகுப்பு ஒத்திகை விழாவில் கலந்து கொண்ட ராணுவ வீரர்களில் 150 ராணுவ வீரர்களுக்கு கொரோனா. இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் இந்த வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் தான் உள்ளது. இந்நிலையில் தற்போது புதிய வகை கொரோனா வைரஸ் பரவி வருவதால், மேலும் ஜாக்கிரதையுடன் இருக்குமாறு […]
பல ஹோட்டல்களில் பாதிக்கப்பட்டதால், தனது சமூகத்தினருக்கு ஊக்கமளிக்கும் எனும் நம்பிக்கையில், நொய்டாவில் கஃபே திறந்துள்ளார் திருநங்கை பெண்மணி. தற்போதைய காலகட்டங்களில் முன்பு போல பெண்களும் சரி, திருநங்கைகளும் சரி வீட்டுக்குள் முடங்கி கிடப்பது கிடையாது. தங்களுக்கான வாழ்க்கையை துணிந்து வாழ துவங்கி விட்டார்கள். பலர் சாதனைகளும் செய்து வருகிறார்கள். ஆண்களுக்கு இணையாக தங்களாலும் சாதிக்க முடியும் எனவும், சில கொடூரமான குணம் கொண்ட ஆண்களின் சீண்டல்களுக்கு ஆளாகியிருந்தாலும் சாதிக்கும் வெறியுடன் பல திருநங்கைகள் வாழ்ந்து வருகிறார்கள். அது […]