மதுரையில் நோய் கட்டுப்பாட்டு பகுதிகளை தவிர மற்ற இடங்களில் நாளை முதல் காலணி மற்றும் துணிக்கடைகள் ஏ.சி வசதி இன்றி இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை கொரோனா தொற்றால் இதுவரை 9ஆயிரத்திற்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் சிவப்பு மண்டலமாக அறியப்படும் மதுரை மாவட்டத்தில் இதுவரை 123 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 83 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார். தற்போது 38 பேர் கொரோனா சிகிச்சை பெற்று வருகின்றனர். இருவர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். […]
கோவில் நகரமான மதுரையின் வைகையாற்றின் குறுக்கே உள்ள குருவிக்காரன் சாலையில் ரூ.23.17 கோடி மதிப்பில் புதிய உயர்மட்ட பாலம் கட்டுமான பணி தற்போது துவங்க உள்ளது. இதையொட்டி ஏற்கனவே அங்குள்ள பழைய தரைப்பாலத்தில் இன்று முதல் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. இந்த பாலம் 75 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. இதனை உரிய முறையில் பராமரிக்காததால் இந்த பாலத்தின் அடித்தளம் மிகவும் பலம் இழந்து காணப்பட்டது. மேலும் வைகை ஆற்றில் அதிகளவில் வெள்ளம் வந்தால், இந்த தரைமட்ட பாலம் மூழ்கி […]
மதுரை தபால்தந்தி நகர் பகுதியில் உள்ள மதுபானக் கடைக்கு தீ வைத்துவிட்டு மர்ம நபர்கள் தப்பி ஓடினர். கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், தமிழகத்தில் 43 நாள்களுக்கு பிறகு சென்னை தவிர தமிழகத்தின் மற்ற இடங்களில் டாஸ்மாக் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து கடந்த இரண்டு மதுக்கடைகள் திறக்கப்பட்டன. நேற்று உயர் நீதிமன்றம் ஊரடங்கு முடியும் வரை மதுபான கடைகளை திறக்கக் கூடாது என்று உத்தரவிட்டது. இந்நிலையில், மதுரை தபால்தந்தி […]
கர்ப்பிணிகளுக்கு மருத்துவ ஆலோசனைக்கு கட்டணமில்லா தொலைபேசி எண். இந்தியா முழுவதும் கொரோனா வைரசின் தீவிர பரவலை கட்டுப்படுத்த மே-3ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் வீட்டிற்குள் முடங்கி கிடைக்கும் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கர்ப்பிணி பெண்கள், இந்த வைரஸ் நோயின் தாக்கதால் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏனென்றால், மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்கோ அல்லது பரிசோதனைக்கோ செல்வதற்கு அச்சத்தில் உள்ளனர். இந்நிலையில், மதுரை மாவட்ட ஆட்சியர், கர்ப்பிணிகளின் மருத்துவ ஆலோசனைக்கு கட்டணமில்லா தொலைபேசி எண்களை அறிவித்துள்ளார். […]
மதுரையில் சார்பு ஆய்வாளர் மற்றும் தலைமை காவலரை தாக்கிய கொரோனா வைரஸ். இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் மிக தீவிரமாக நிலையில், இதனை கட்டுப்படுத்தும் நோக்கில், இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் யாரும் வெளியே வரவேண்டாம் அறிவுறுத்தப்பட்டுள்ள நிலையில், மக்களை காக்கும் பணியில், காவலர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் வெளியில் வந்து பணி செய்கின்றனர். இந்நிலையில், மதுரையில் சார்பு ஆய்வாளர் மற்றும் தலைமை காவலரை கொரோனா வைரஸ் தாக்கியுள்ளது. இதனையடுத்து, […]
கொரோனா நிவாரண நிதி வழங்கிய 65 வயது மூதாட்டி. இந்தியாவில் கொரோனா வைரஸின் கொடூர தாக்குதலில் இருந்து காத்துக் கொள்ள, இந்திய அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர். இதனையடுத்து, அனைத்து இடங்களிலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கொரோனா தடுப்பு பணிக்காக பிரபலங்கள் முதல் சிறுவர்கள் முதல் அனைவருமே நிதி வழங்கி வருகின்றனர். இதனையடுத்து, மதுரை ஆத்திகுளம் பகுதியை சேர்ந்த 65 வயது மூதாட்டி ஒருவர் நிவாரண நிதியாக பிராத்தமர் மோடி மற்றும் 27 […]
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இ-பாஸ் பெற பொதுமக்கள் குவித்தனர். கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இந்த ஊரடங்கு தமிழகத்திலும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. ஊரடங்கு அமலில் உள்ளதால் தேவையின்றி பொதுமக்கள் வாகனங்களில் வெளியே சுற்றுவதற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதையும் மீறி வருபவர்களுக்கு அபராதம், வழக்கு பதிவு, வாகனங்கள் பறிமுதல் போன்ற நடவடிக்கைகளை போலீசார் எடுத்து வருகின்றனர். இந்நிலையில், மதுரையில் வாகனங்கள் வெளியில் வர மாவட்ட ஆட்சியரிடம் அடையாள அட்டை பெற்றால் மட்டுமே […]
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் பட்டருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் முயற்சியில் இந்திய அரசு தீவிரமாக இறங்கியுள்ள நிலையில், இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், மக்கள் யாரும் அத்தியாவசிய தேவைகளுக்கு மாத்திரம், தற்பாதுகாப்புடன் முக கவசம் அணிந்து வெளியில் வருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில், மதுரையில் உள்ள மீனாட்சி அம்மன் கோவில் பட்டருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ள நிலையில், இவர் வெளிநாட்டுக்கு சென்று வந்ததை மறைத்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனையடுத்து, கோயிலுக்கு […]
கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மருத்துவமனைகளும், மருந்துக்கடைகள், காய்கறி, பழக்கடைகள், மளிகை கடைகள், பெட்ரோல் பங்குகள் போன்ற அத்தியாவசிய கடைகள் வழக்கம் போல இயங்கி வந்தன.மேலும் பொதுப்போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் ரேஷன் கடைகள் மட்டும் வழக்கம்போல் திறந்திருக்கும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்கு இடையில் ஏப்ரல் 2ம் தேதி முதல் ரேஷன் கடைகளில் கொரோனா நிவாரண உதவித்தொகை ₹1000 மற்றும் ஏப்ரல் மாதத்திற்கான அத்தியாவசிய பொருட்கள் இலவசமாக விநியோகிக்கப்படும் […]
மதுரை சிந்தாமணி சாலை கண்ணன் காலனியை சேர்ந்தவர் இளம்வயது ராமமூர்த்தி. இவருக்கு அண்மையில் தான் திருமணமானது, இவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் சிந்தாமணி சாலை அருகில் உள்ள ராஜம்மன் நகரில் வசித்து வருகின்றனர். இதனை தொடர்ந்து ராமமூர்த்தியின் பக்கத்து வீட்டில் உள்ள மைனர் பெண்ணுக்கு விஜயகுமார் என்று இளைஞருக்கும் திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்துள்ளது. இதுகுறித்து ராமமூர்த்தி குழந்தை திருமணம் என்ற பெயரில் போலீசாருக்கு தகவல் கொடுத்து திருமணத்தை தடுத்து நிறுத்தியுள்ளார். இதனால் விஜயகுமாரின் குடும்பம் ராமமூர்த்தி […]
கொரோனா வைரஸின் தாக்கம் இந்தியாவிலும் அதிகரித்து வருவதால், அரசும் அதற்கான நடவடிக்கையாக கடுமையான சில சட்டங்களையும் போட்டுள்ளது. அதில் ஒன்றாக தேவையின்றி தடையை மீறுபவர்களை போலீசார் தீவிரமான லத்தி அடியையும் கையாண்டு வருகின்றனர். இந்நிலையில், மதுரை கருப்பாவூரணியில் போலீஸ் தாக்கியதில் ராவுத்தர் என்னும் கறிக்கடை வைத்துள்ள முதியவர் உயிரிழந்துள்ளதாக அந்த ஊர் மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். 71 வயதுடைய இந்த முதியவரை போலீசார் தாக்கியதால் உடல்நலம் குன்றி உயிரிழந்ததாக கூறியுள்ளனர்.
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மழை பொழிந்து வருகிறது. கோடைவெயில் வாட்டி வந்த நிலையில் மதுரை மற்றும் தூத்துக்குடி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் அதிகாலை முதல் மழை பொழிந்தது.இதில் மதுரையில் அதிகாலை முதல் சாரல் மழை பெய்து வருகிறது. அதே போல் தூத்துக்குடி மற்றும் கோவில்பட்டி சுற்றுவட்டாரத்தில் அதிகாலை முதல் கனமழை பெய்து வருகிறது.மேலும் விருதுநகர் மாவட்டத்தில் சாத்தூரில் இடி மின்னலுடன் கூடிய கனமழை அதிகாலை முதல் பெய்து வருகிறது குறிப்பிடத்தக்கது
சீனாவை தொடர்ந்து பல நாடுகளில் கொரோனா வைரஸ் நோயானது பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. தற்போது இதன் பாதிப்பு இந்தியாவிலும் பரவி வருகிற நிலையில், இதனை தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கை அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், மதுரையில், 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, நரிமேடு, தபால் தந்தி நகர் பகுதிகளில் 4 நாட்கள் பொதுமக்கள் வெளியே வர தடை விதித்து மாவட்ட நிர்வாகம் அதிரடியாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டம் வில்லாபுரத்தை சேர்ந்தவர் முஸ்தபா. இவர் கேரளாவில் கூலி தொழிலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளன. இந்நிலையில், தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இதனையடுத்து, ஊரடங்கு உத்தரவுக்கு முன்பு தமிழகம் வந்துள்ளார் . இவர் மதுரை நகரில் உள்ள தனது அம்மா வீட்டில் தங்கியுள்ளார். இதனையடுத்து இவருக்கு சளி, இருமல், சோர்வு ஆகியவை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து அக்கம்பக்கத்தினர் இவருக்கு கொரோனா இருக்கலாம் என்ற சந்தேகத்தில், சுகாதாரத்துறை மற்றும் காவல்துறையினருக்கு தகவல் […]
இந்தியா முழுவதும் கொரோனா தாக்குதல் தீவிரமாக இருப்பதால், இந்திய பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனையடுத்து, மதுரையில் உள்ள பல்நோக்கு சிறப்பு மருத்துவமனை, கொரோனாவிற்காக சிறப்பு மருத்துவமனையாக மாற்றப்பட்டுள்ளது. இந்த பல்நோக்கு மருத்துமனை புதிதாக கட்டப்பட்ட கட்டிடம் என்பதால், இங்கு கொரோனா நோயாளிகளில் தங்க வைப்பதற்கான அனைத்து வசதிகளும் உள்ளது. கொரோனா அறிகுறிகளுடன் வருவோரை தனிமைப்படுத்தி பரிசோதிக்க, சிகிச்சை அளிக்க ஏதுவாக 650 படுக்கைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. 150 படுக்கை வசதி கொண்ட ஐ.சி.யூ வார்டுகளும் உள்ளது. […]
உலகம் முழுவதும் தனது தொற்றால் கொன்று குடித்து வரும் கொரோனாவிற்கு பலி எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.இந்தியாவில் 10 பேர் இந்த கொலைக்கார வைரஸிற்கு பலியாகிய நிலையில் 400க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.தமிழகத்தில் இந்தரஸால் முதல் உயிர் பறிபோகியுள்ளது குறிப்பிடத்தக்கது.இந்நிலையில் இந்த வைரஸை கட்டுப்படுத்தவும் அதனை பரவாமல் தடுக்கவும் மத்திய மாநில அரசுகள் கடுமையான முன்னெச்செரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.அதன் ஒரு பகுதியாக பிரதமர் மோடி இந்தியா முழுவதும் இன்று நள்ளிரவு முதல் 21 […]
கடந்த சில மாதங்களாக உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ் நோயானது, பல்லாயிரக்கணக்கான உயிர்களை காவு வாங்கியுள்ளது. இந்த நோயானது தற்போது இந்தியாவில் மட்டுமல்லாது, தமிழகத்திலும் 10-க்கும் மேற்பட்டோரை பாதித்துள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் 10-க்கும் மேற்பட்டோர் கோரோனோ தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், மதுரையில், ஒருவருக்கு இந்த நோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ள நிலையில், அமைச்சர் விஜய பாஸ்கர் கூறுகையில், மதுரையில் கொரோனா பாதித்து சிகிச்சை பெற்று வரும் நபர் ஆபத்தான நிலையில் உள்ளார் என கூறியுள்ளார்.
முதலில் சீனாவில் தொடங்கி, தற்போது மற்ற நாடுகளில் பரவலாக பரவி வரும் கொரோனா வைரஸ் நோயானது, உலகையே அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. யாருக்காயின் சளி, இருமல் போன்ற பிரச்சனை ஏற்பட்ட உடன், நமக்கு கொரோனா தோருக்கு இருக்குமோ என்ற சந்தேகமும் வந்துவிடுகிறது. இந்நிலையில், மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே கொரோனா இருக்குமோ என்ற சந்தேகத்தில் மூலிகை மருந்து சாப்பிட்ட தாய், மகன்கள் 3 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, மூலிகை மருந்து சாப்பிட்ட 3 பேருக்கும் உசிலம்பட்டி […]
கடந்த இரண்டு மாதங்களாக கொரோனா பாதிப்பு மிக தீவிரமாக பரவி வருகிறது. இந்த பாதிப்பு முதலில் சீனாவில் ஏற்பட்டுள்ள நிலையில், அங்கு பல்லாயிரக்கணக்கான மக்கள் இந்த நோயின் பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து இந்த நோயின் பாதிப்பு மற்ற நாடுகளிலும் பரவி வருகிற நிலையில், அனைத்து நாடுகளிலும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. கொரோனா இந்தியாவில் பரவி உள்ளதால் பல மாநிலங்களில் பள்ளி, கல்லூரிகள், திரையரங்குகள் மற்றும் மக்கள் அதிகமாக கூடும் வணிக வளாகங்கள், கோவில்கள், தேவாலயங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது. […]
மனைவி மீது எழுந்த சந்தேகத்தின் காரணமாக கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டு கணவன் தப்பி ஓடிய சம்பவம் மதுரை அருகே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் ஆனது மதுரை திருநகர் எஸ்.ஆர்.வி. நகரில் நடந்துள்ளது.இந்த பகுதியை சேர்ந்தவர் அசோக் வயது 32ஆகிறது. இவருடைய மனைவி சுதா வயது 27 ஆகிறது. இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள்.திருமணம் ஆகி ஒரு பெண், மற்றும் ஒரு ஆண் குழந்தை உள்ளது. கணவர் அசோக் எந்த வேலைக்கும் செல்லாமல் […]