மதுரை

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் ஆன்லைன் நுழைவுத்தேர்வுக்கான விண்ணப்பபடிவம் இணையதளத்தில் வெளியீடு!

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டப் படிப்புக்கான ஆன்லைன் நுழைவுத் தேர்வு விண்ணப்ப படிவம் இணையதள பக்கத்தில் பல்கலைக்கழகத்தால் வெளியிடப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த ஐந்து மாதங்களாக தமிழகம் முழுவதும் ஊரடங்கு அமல் படுத்தப்பட்ட நிலையில் உள்ளது. இந்நிலையில், பள்ளிகள் கல்லூரிகள் என அனைத்துமே மார்ச் மாதம் 24 முதலே மூடப்பட்ட நிலையில் தான் உள்ளது. இந்நிலையில் வரும் கல்வி ஆண்டிற்கான முதுகலைப் படிப்புக்கு நுழைவு தேர்வு எழுதுவோருக்கான விண்ணப்பபடிவங்கள் இணையதளம் மூலமாக வெளியிடப்பட்டு […]

#Corona 3 Min Read
Default Image

கொரோனா தொற்று : மதுரை ஆத்திக்குளத்தில் உள்ள சிபிஐ அலுவலகம் மூடல்!

மதுரை ஆத்திக்குளத்தில் உள்ள சிபிஐ அலுவலகம் மூடல். தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. சாத்தான்குளம் தந்தை, மகன் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இதையடுத்து இவ்வழக்கு சிபிஐ அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. கடந்த 22-ந்தேதி காவலர்களிடம் விசாரணை நடத்திய குழுவில் உள்ள அதிகாரிகளில் இரண்டு பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில், அவர்களுக்கு […]

#CBI 3 Min Read
Default Image

Covid-19 : உயிரிழந்த கிறிஸ்தவரின் கடைசி ஆசையை நிறைவேற்றிய இஸ்லாமிய இளைஞர்கள்!

மதுரையில் உயிரிழந்த பெண் மருத்துவரின் தந்தையை அவரது ஆசைப்படி கிறிஸ்தவ முறைப்படி அடக்கம் செய்த இஸ்லாமிய இளைஞர்கள் இயக்கத்தின் செயல் பாராட்டுகளை பெற்றுள்ளது. மதுரை மாவட்டம் எல்லிஸ் நகர் எனும் பகுதியில் உள்ள மருத்துவமனை ஒன்றில் பெண் மருத்துவராகப் பணியாற்றும் மருத்துவரின் தந்தைக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். உடல்நிலை மோசமடைந்து வருவதை அறிந்த அவர், தான் இறந்து விட்டால் தன்னை கிறிஸ்தவ முறைப்படி அடக்கம் செய்யுமாறு ஏற்கனவே வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்நிலையில் […]

#Corona 3 Min Read
Default Image

மாஸ்க் போடாவிட்டால் இதை பண்ணுங்க! மதுரை மாநகர காவல் ஆணையர் அதிரடி

மாஸ்க் போடாதவர்கள் குறித்து முகநூல் பக்கத்தில் பதிவிடலாம். தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை  கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தமிழகத்தில் இதுவரை இந்த கொரோனா வைரஸால், பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், மதுரையில், இந்த வைரஸ் பாதிப்பால் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மதுரை மாநகர காவல் ஆணையர் பிரேம் ஆனந்த் ஒரு அதிரடியான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அந்த அறிவிப்பின் படி, […]

coronavirus 3 Min Read
Default Image

#மூடிய காரணம்- 120 தனியார் மருத்துவமனைக்கு நோட்டீஸ்!

எந்தவொரு காரணமும்  இன்றி மதுரை மாவட்டத்தில் மூடப்பட்ட 120 தனியார் மருத்துவமனைகளுக்கு விளக்கம் கேட்டு மாவட்ட ஆட்சியர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். மதுரை மாவட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தனியார் மருத்துவமனைகள்  உள்ளது. தற்போது இந்த மாவட்டத்தில் கொரோனா பரவல் காரணமாக  தனியார் மருத்துவமனைகள் செயல்பட வேண்டும் என்ற உத்தரவு இருக்கின்ற பொழுது மதுரை மாவட்டத்தில் சுமார் 120 தனியார் மருத்துவமனைகள் ஒட்டு மொத்தமாக மூடப்பட்டுள்ளன. இதனால் மூடப்பட்ட மருத்துவமனைகளுக்கு எல்லாம் விளக்கம் கேட்டு மாவட்ட ஆட்சியர் வினய் நோட்டீஸ்  […]

#Madurai 3 Min Read
Default Image

#8 ஆயிரம் -மதுரையில் கொரோனா கொடூரம்!

மதுரையில் கொரோனா தொற்றானது சுமார் 8 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. தமிழகத்தில் கொரோனாத் தொற்று பரவி வரும் நிலையில்  மாவட்டங்களிலும் இதன் தாக்கம் ஏற்பட்டு வருகிறது.இந்நிலையில்  மதுரை மாவட்டத்தில் மட்டும்  கொரோனா பாதிப்பு 8 ஆயிரத்தை கடந்து உள்ளது. அவ்வாறு மதுரை மாவட்டத்தில் இன்று மேலும்  245 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில் அம்மாவட்டத்தில் மொத்த .பாதிப்பானது 8,103ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது

கொரோனா 2 Min Read
Default Image

ரேஷன் அரிசிக்காக 80 கி.மீ சைக்கிளில் சென்ற முதியவர் சாலையில் மயக்கம்!

ரேஷன் அரிசியை வாங்குவதற்காக விருதுநகரிலிருந்து மதுரைக்கு 80 கிலோமீட்டர் சைக்கிளிலேயே சென்ற முதியவர் சாலையில் மயங்கி விழுந்துள்ளார். விருதுநகர் மாவட்டத்தில் வசித்து வரும் மதுரையை சொந்த ஊராகக் கொண்ட செல்லத்துரை என்பவருக்கு 59 வயதாகிறது. இவர் கடந்த எட்டு ஆண்டுகள் தனியார் கம்பெனியில் உள்ள கார் கம்பெனியில் ஓட்டுநராக பணிபுரிந்து வந்துள்ளார். அவரது மனைவி செங்கல் சூளையில் வேலை செய்து வந்துள்ளார். ஆனால் கொரோனா வைரஸ் காரணமாக வேலை அவ்வளவாக இருவருக்கும் இல்லாததால் ஒரு வேளை சாப்பாட்டிற்கே […]

#Rice 3 Min Read
Default Image

மதுரையில் கொரோனா பாதிப்பு 7,000-ஐ தாண்டியது!

மதுரையில் கொரோனா பாதிப்பு 7,000-ஐ தாண்டியது. தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கொரோனா பாதிப்பில், தமிழகத்தில், சென்னை முதலிடத்தில் உள்ள நிலையில், தொடர்ந்து மற்ற மாவட்டங்களிலும் இதன் பாதிப்பு தீவிரமடைந்து வருகிறது. இந்நிலையில், மதுரையில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிற நிலையில், தற்போது மேலும் 295 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அங்கு கொரோனா பாதித்தவர்கள் […]

coronavirus 2 Min Read
Default Image

பெண்குழந்தைக்கு கள்ளிப்பால் கொடுத்து கொன்றவருக்கு ஜாமீன்!

மதுரை மாவட்டம் சோழவந்தானில் பெண் குழந்தைக்கு கள்ளிப்பால் கொடுத்து கொன்றவருக்கு உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. மதுரை மாவட்டம் சோழவந்தான் பகுதியில் பூ மேட்டு தெரு எனும் தெருவை சேர்ந்த தவமணி சித்ரா என்னும் தம்பதிகளுக்கு ஏற்கனவே மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர். இந் நிலையில் அண்மையில் கர்ப்பிணியாக இருந்த சித்ராவுக்கு  நான்காவது பெண் குழந்தை கடந்த மே மாதம் 10 ஆம் தேதி பிறந்துள்ளது. இந்த நான்காவது பெண் குழந்தைக்கு கள்ளிப்பால் கொடுத்து பாண்டியம்மாள் கொலை […]

#Bail 2 Min Read
Default Image

12 மணிநேரத்தில் குணமடைந்த கொரோனா நோயாளி! மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை!

பிளாஸ்மா சிகிச்சை மூலம் 12 மணிநேரத்தில் குணமடைந்த கொரோனா நோயாளி. தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், கொரோனா வைரஸ் சிகிச்சைக்கு, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில், பிளாஸ்மா சிகிச்சையை பரிந்துரை செய்தது.  இந்நிலையில், சில மாநிலங்களில் பிளாஸ்மா சிகிச்சை அளிக்கப்பட்ட கொரோனா நோயாளிகள் குணமடைந்துள்ள நிலையில், மதுரையில் உள்ள ராஜாஜி அரசு மருத்துவமனையில், கொரோனாவுக்கு மேற்கொள்ளப்பட்ட பிளாஸ்மா சோதனை வெற்றியடைந்துள்ளதாக மருத்துவமனை […]

coronavirus 3 Min Read
Default Image

ஆண்களே உஷார்! டிக்டாக் மூலம் இளம்பெண் விரித்த வினோத வலையில் சிக்கி ரூ.97,000-ஐ இழந்த இளைஞர்!

டிக்டாக் மூலம் ரூ.97,000-ஐ இழந்த இளைஞர். இளைஞரை ஏமாற்றிய இளம்பெண் சுசி கைது. இன்று அதிகமான இளைஞர்கள் மற்றும் பெண்கள் டிக்டாக்கிற்கு அடிமையாகியுள்ளனர் என்று தான் சொல்ல வேண்டும். தங்களுடைய அதிகமான நேரத்தை டிக் டாக்கில் தான் செலவிடுகின்றனர். தற்போது ஊரடங்கை சாதகமாக பயன்படுத்தி, வீட்டில் இருப்பவர்கள் அதிகமாக இணையதளத்தில் தான் உலாவி வருகின்றனர்.  இந்நிலையில், மதுரையை சேர்ந்த 23 வயதான இளைஞர் ராமசந்திரன். இவர் மதுரையில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். தற்போது விடுமுறை […]

#TikTok 5 Min Read
Default Image

பிரதமர் மோடியால் பாராட்டப்பட முடிதிருத்தும் தொழிலாளி மகளை ஏழைகளுக்கான நல்லெண்ண தூதராக அறிவித்தது ஐ.நா சபை!

பிரதமர் மோடியால் பாராட்டப்பட முடிதிருத்தும் தொழிலாளி மகளை ஏழைகளுக்கான நல்லெண்ண தூதராக அறிவித்தது ஐ.நா சபை. கடந்த சில நாட்களுக்கு முன்பதாக, பிரதமர் மோடி’மான் கி பாத்’ என்ற நிகழ்ச்சியில் பேசும் போது, மதுரையை சேர்ந்த முடிதிருத்தும் தொழில் செய்யும் மோகன் என்பவரை பாராட்டி பேசியுள்ளார். ஏனென்றால், மோகன் தனது மகளின் படிப்பு செலவிற்காக சேமித்து வைத்திருந்த, ரூ.5 லட்சம் பணத்தை, ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்ய உபயோகித்துள்ளார்.  பிரதமர் மோடி இவரை பாராட்டி பேசிய […]

#Modi 2 Min Read
Default Image

மதுரை பல்கலைக்கழக நுழைவு தேர்வு ரத்து – மதுரை காமராஜ் பல்கலைக்கழக துணைவேந்தர்

மாணவர் சேர்க்கைக்கான நுழைவு தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளதாக மதுரை காமராஜ் பல்கலைக்கழக துணைவேந்தர் தெரிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸின் பரவல் தீவிரமாக காணப்படுகின்ற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதுவரை தமிழகத்தில், கொரோனா வைரசால், 25,872 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 208 பேர் உயிரிழந்துள்ளனர்.  இந்நிலையில், கொரோனா வைரஸின் தீவிர பரவலால், புதிய மாணவர் சேர்க்கைக்கான நுழைவு தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளதாக மதுரை காமராஜ் பல்கலைக்கழக துணைவேந்தர் தெரிவித்துள்ளார். […]

coronavirus 2 Min Read
Default Image

உசிலம்பட்டி அருகே வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்திருந்த மூதாட்டி கைது!

உசிலம்பட்டி அருகே வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்திருந்த மூதாட்டி கைது. மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே உள்ள அல்லிகுண்டம் என்ற கிராமத்தில், வீட்டில் பதுக்கி கஞ்சா விற்பனை செய்வதாக, அப்பகுதி போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து, மாதுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் தலைமையில், தனிப்பிரிவு போலீசார் அல்லிகுண்டம் கிராமத்தில் ஆய்வு மேற்கொண்டார்.  அந்த ஆய்வில், அக்கிராமத்தில் வசித்து வரும் அய்யாக்காள் என்ற மூதாட்டி வீட்டில் கஞ்சா பதுக்கி விற்பனை செய்வது தெரியவந்தது. இதனையடுத்து, அவரிடம் இருந்து […]

#Arrest 2 Min Read
Default Image

ஜூன் 15 வரை மார்ச் மாத பஸ் பாஸை பயன்படுத்தி கொள்ளலாம்!

ஜூன் மாதம் 15 தேதி வரை மார்ச் மாதத்திற்கான பாஸை பயன்படுத்தி கொள்ளலாம் என அரசு பேருந்துகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.  கொரோனா வைரஸ் காரணமாக கடந்த 2 மாதங்களுக்கு மேல் இயங்காமல் இருந்த பேருந்துகள் தற்பொழுது தான் இயக்கப்பட அனுமதி பெற்று இயங்குகின்றன. இந்நிலையில், பேருந்துகள் பாஸ் எடுத்து தான் இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளது.  மார்ச் மாத எடுத்துக்கொண்ட பாஸை வைத்து வருகின்ற ஜூன் 15 ஆம் தேதி வரை பயன்படுத்தி கொள்ளலாம் என மதுரையிலுள்ள அரசு பேருந்துகளுக்கு […]

bus 2 Min Read
Default Image

கொரோனா ஊரடங்கு! 2 மாதத்திற்கு பின் உயர்நீதிமன்ற மதுரை கிளை திறப்பு!

2 மாதத்திற்கு பின் உயர்நீதிமன்ற மதுரை கிளை திறக்கப்பட்டுள்ளது.  தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் இதுவரை கொரோனா வைரஸால் தமிழகத்தில், 22,333 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 173 பேர் உயிரிழந்துள்ளனர்.   இந்நிலையில், ஊரடங்கு உத்தரவால், மதுரை உயர்நீதிமன்ற கிளை மூடப்பட்டிருந்த நிலையில், 2 மாதங்களுக்கு பின் தற்போது திறக்கப்ட்டுள்ளது. மேலும், அரசு அறிவுறுத்திய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் உயர்நீதிமன்ற கிளையில் […]

Corona Curfew 2 Min Read
Default Image

பிரதமர் மோடியால் பாராட்டப்பட்ட மதுரையை சேர்ந்த சலூன் கடைக்காரர்!

பிரதமர் மோடியால் பாராட்டப்பட்ட மதுரையை சேர்ந்த சலூன் கடைக்காரர். தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் இதுவரை கொரோனா வைரஸால் தமிழகத்தில், 22,333 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 173 பேர் உயிரிழந்துள்ளனர்.  இந்நிலையில், தமிகத்தில் கொரோனா வைரசை கட்டுப்படுத்த, தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில், ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பலரும் உதவிக்கரம் நீட்டி வந்தனர்.  இதனையடுத்து, பிரதமர் […]

#BJP 3 Min Read
Default Image

மதுரை மாவட்டத்தில் மாஸ்க் அணியாமல் சென்றவர்களுக்கு அபராதம் விதிப்பு!

முகக்கவசங்கள் அணியாமல் வெளியே வந்த 1762 பேர் மூலம் 1,83,000 ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற  நிலையில், இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல  நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதுவரை தமிழகத்தில், 14,753 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 98 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், தற்போது பிறப்பிக்கப்பட்டுள்ள 4-ம் கட்ட ஊரடங்கு உத்தரவில், சில தளர்வுகள் கொண்டு வரப்பட்டுள்ள நிலையில், மக்கள் தங்களது தேவைகளுக்காக வெளியே வரும் போது, கண்டிப்பாக […]

coronavirus 3 Min Read
Default Image

மதுரையில் மாஸ்க் அணியாவிட்டால் அபராதம் 100, மாஸ்க் 1 இலவசம்!

மாஸ்க் அணியாத மதுரை வாசிகளிடமிருந்து 100 ரூபாய் அபராதம் வசூலிக்க வேண்டும் எனவும், அவர்களுக்கு ஒரு மாஸ்க் அளிக்கப்பட வேண்டும் எனவும் மதுரை அரசு உத்தரவிட்டுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே தான் செல்கிறது. இதுவரை 49 லட்சத்துக்கு அதிகமானோர் உலகம் முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளனர், 3 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.  இந்நிலையில், கொரோனா தொற்று உள்ளவர்களிடயிருந்து அடுத்தவருக்கு பரவாமல் இருப்பதற்காக, முக கவசம் அனைவரும் கட்டாயம் அணிய வேண்டும் என […]

#Corona 4 Min Read
Default Image

மதுரை அருகே கள்ளிப்பால் கொடுத்து பெண்சிசு கொடூர கொலை…. சிசுவின் பாட்டி, தந்தை கைது…

மதுரை மாவட்டம் சோழவந்தானைச் சேர்ந்த தந்தை பாட்டி ஆகியோர் கள்ளிப்பால் கொடுத்து பெண் சிசுவை கொலை செய்ததாக கைது செய்யப்பட்டுள்ளனர். மதுரை மாவட்டம்  சோழவந்தானை சேர்ந்த தம்பதி தவமணி மற்றும் சித்ரா . இந்த தம்பதிகளுக்கு  ஏற்கனவே மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் நான்காவதாக  பெண் குழந்தையை பெற்றெடுத்தார் சித்ரா. இதனிடையே பிறந்த அந்த பெண் சிசு கடந்த சில தினங்களுக்கு முன்னர் உயிரிழந்ததாக கூறப்பட்டு அந்த சிசு  வைகையாற்றில் […]

#Death 3 Min Read
Default Image