சர்கார் படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூலிப்பது உறுதியானால் தியேட்டர் உரிமத்தை ரத்து செய்யலாம் என்று உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தமாரித்துள்ள திரைப்படம் சர்கார். இப்படம் தீபாவளியன்று திரைக்கு வர உள்ளது. இந்நிலையில் மதுரை சேர்ந்த மகேந்திரபாண்டி என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு ஒன்றை தொடர்ந்தார்.அந்த மனுவில் அரசாணையை பின்பற்றாமல் பல மடங்கு கூடுதல் கட்டணம் மல்டி பிளக்ஸ் திரையரங்கில் வசூலிப்பதாக தெரிவித்தார்.இதை விசாரித்த உயர் […]
5 ரூபாயை திரும்ப கொடுக்காததால் ஆட்டோ டிரைவரை பெண் ஒருவர் நடுரோட்டில் சரமாரியாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களிலும் பரவி வருகிறது. மதுரை கோரிப்பாளையம் பகுதியில் பெண் ஒருவர் ஷேர் ஆட்டோவை மறித்து ஏறினார். தெற்குவாசல் செல்ல வேண்டும் என அவர் ஆட்டோ டிரைவரிடம் கூறியதற்கு, அந்த டிரைவர் ரூ.15 தர வேண்டும் என கேட்டுள்ளார். இதற்கு ஒப்புக்கொண்ட அந்த பெண் இறங்கும் போது, 20 ரூபாய் நோட்டை கொடுத்துள்ளார். மீதி […]
மணல் திருட்டுக்குப் பயன்படுத்தப்படும் வாகனங்களை இனி வட்டாட்சியர் விடுவிக்க முடியாது என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. இது தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்தது.வழக்கின் விசாரணை முடிவில் ,மணல் திருட்டுக்குப் பயன்படுத்தப்படும் வாகனங்களை இனி வட்டாட்சியர் விடுவிக்க முடியாது என்று உத்தரவு பிறப்பித்தது.மேலும் மாவட்ட சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தே வாகனங்களை மீட்க முடியும் என்றும் உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது.
மதுரை தனியார் விடுதியில் டிடிவி தினகரனுடன் எம்எல்ஏ கருணாஸ் சந்தித்துள்ளார். 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் நேற்று முன்தினம் (செப்டம்பர் 25 ஆம் தேதி)சபாநாயகரின் உத்தரவு செல்லும் என்று தீர்ப்பு அளித்தார் 3வது நீதிபதி சத்யநாராயணன்.மேலும் அதேபோல் 18 எம்.எல்.ஏக்களின் மனுக்களை தள்ளுபடி செய்தார் நீதிபதி சத்தியநாராயணன். இந்நிலையில் மதுரை தனியார் விடுதியில் டிடிவி தினகரனுடன் எம்எல்ஏ கருணாஸ் சந்தித்துள்ளார்.டிடிவி-கருணாஸ் சந்திப்பின்போது தங்க தமிழ்ச்செல்வன், சாத்தூர் சுப்பிரமணியன் ஆகியோர் உடனிருந்தனர்.
உயர்நீதிமன்ற மதுரை கிளை, ஸ்டெர்லைட் தாமிர உருகாலைக்கு இறக்குமதி செய்யப்பட்ட மூல பொருட்களின் விபரத்தை தாக்கல் செய்யுமாறு மத்திய கலால் துறைக்கு உத்தரவிட்டுள்ளது.2013 ஏப்ரல் முதல் 2018 மார்ச் வரையிலான புள்ளி விவரத்தை மத்திய கலால் துறையினர் தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
பல ஆண்டுகளாக கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த உமாபதி செப்.21 ஆம் தேதி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். கடந்த 10ஆம் தேதி நெஞ்சு வலி காரணமாக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட உமாபதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
மதுரையில் தீபாவளிக்கு முந்தய நாள் இரவு 2 மணி வரை வியாபாரம் செய்வதற்கு வியாபாரிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மதுரையை சேர்ந்த அஷ்ரப் என்பவர் தொடர்ந்த வழக்கினை தொடர்ந்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தீர்ப்பளித்துள்ளது. இதனையடுத்து தீபாவளிக்கு முந்தய நாள் நவ.4,5 ஆகிய தேதிகளில் நள்ளிரவு 2 மணி வரை வியாபாரம் செய்யலாம் என உத்தரவிட்டுள்ளது.
கடந்த சில வாரங்களாக காய்ச்சல்கள் பரவிய வண்ணம் உள்ளது. இந்நிலையில் நேற்று மதுரையில் பன்றி காய்ச்சலால் இருவர் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து மதுரை அரசு மருத்துவமனையில் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 99 பேருக்கும், டெங்குவால் பாதிக்கப்பட்ட 6 பேருக்கும், பன்றிகாய்ச்சலால் பாதிக்கப்பட்ட 7 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று சென்னையில் ஒரு சிறுவன் பன்றி காய்ச்சலால் இறந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மதுரை – விருதுநகர் இடையே இரட்டை ரயில் பாதை அமைக்கும் பணி நடைபெறுவதால், மதுரை -செங்கோட்டை வரை இயக்கப்பட்டு வந்த பயணிகள் ரயில், மதுரை – விருதுநகர் வரை இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
வடகிழக்கு பருவமழை தொடங்கவுள்ள நிலையில், பேரிடர் மீட்பு குழுவினரின் பணிகள் குறித்து நேற்று கலெக்டர் அலுவலகத்தில் ஆய்வு பணியில் ஈடுபட்டார் அமைச்சர் உதய குமார். இது குறித்து அவரை பேசுகையில், அனைத்து மாவட்டங்களிலும் பேரிடர் மீட்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், முக்கியமாக கடலோர பகுதிகளில் கூடுதல் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். இந்நிலையில் மதுரையில் வெள்ள பாதிக்கும் பாகுதிகளாக 27 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன. 119 அலுவலர்கள் மீட்பு பணியில் ஈடுபட தயார் நிலையில் உள்ளதாகவும் கூறியுள்ளார்.
மதுரையில் பன்றி காய்ச்சல் பரவி வந்த நிலையில் , மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் பன்றி காய்ச்சல் பாதிப்பால் இருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்கள். ஏற்கனவே வைரஸ் காய்ச்சலுக்கு ஒருவர் பலியான நிலையில், தற்போது பன்றி காய்ச்சலுக்கு இரு பெண்கள் பலியாகி இருப்பது மதுரை மாவட்ட மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
கருணாநிதியின் கட்சி காலாவதியான கட்சி என வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி உதயகுமார் விமர்சித்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஆர்.பி உதயகுமார், ‘இந்த இயக்கத்தை எத்தனையோ பேர் வீர வசனம் பேசி அழிப்போம் என்று கூறினார்கள் ஆனால் அவர்கள்தான் காணாமல் போய் உள்ளனர். மதுரையில் அமைச்சராகவும், முன்னாள் முதலமைச்சரின் மகனான அழகிரியும் இதே மதுரையில் அதிமுகவை அழிப்போம் என்று கூறினார். ஆனால் தற்போது அவரைத் தேடும் நிலை தான் உள்ளது’ என்று கூறியுள்ளார். ‘நீதிமன்ற உத்தரவின் […]
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே பேருந்துக்காக நின்றவர்கள் மீது கார் மோதியதில் 7 மாத குழந்தை உட்பட 4 பேர் பலி.. மதுரை மாவட்டம் வாடிப்பட்டி நிறுத்தத்தில் பேருந்துக்காக ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் நின்று கொண்டு இருந்தனர்.அப்போது அந்த வழியாக மேகமாக வந்த ஆம்னி கார் கட்டுப்படடை இழந்து பஸ்க்கு நின்றவர்கள் மீது மோதியது.இதில் விபத்தில் 7மாத குழந்தை உட்பட 4 பேர் சம்பவ இடத்தில் உயிர் இழந்தனர். விபத்து குறித்து அங்கே விசாரணை நடத்த வந்த காவல்துறையினர் கார் […]
கவிஞர் வைரமுத்து அவர்கள் உணவு ஒவ்வாமை மற்றும் இரத்த அழுத்தம் காரணமாக நேற்று மதுரை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இதனையடுத்து இன்று அவரது உடல் நலம் தேறினதை அடுத்து மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
வைகை அணையிலிருந்து வினாடிக்கு 200 கனஅடி வீதம் வரும் 22-ம் தேதி முதல் 20 நாட்களுக்கு தண்ணீர் திறந்துவிட முதலமைச்சர் பழனிசாமி உத்தரவு பிறப்பித்துள்ளளது. இது தொடர்பாக முதலமைச்சர் பழனிசாமி வெளியிட்ட உத்தரவில்,மதுரை, சிவகங்கை மாவட்ட குடிநீர் தேவைக்காக வைகை அணையிலிருந்து வினாடிக்கு 200 கனஅடி வீதம் வரும் 22-ம் தேதி முதல் 20 நாட்களுக்கு தண்ணீர் திறந்துவிட உத்தரவு பிறப்பித்துள்ளார்.அதேபோல் திண்டுக்கல் மாவட்டத்தில் 844 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் வகையில் பாலாறு, பொருந்தலாறு அணையிலிருந்து வரும் 24-ம் […]
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டு இருப்பவர் மாணவர் பிரவீன் குமார். இவர் தனது சகோதரனுடன் சாலையில் நடந்து சென்றுள்ளார். இந்நிலையில் 8 பேர் கொண்ட கொண்ட கும்பலால் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார் மாணவர் பிரவீன். இந்த சம்பவம் மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நீர் நிலை ஆக்கிரமிப்பு வழக்குகளில் 5 மாவட்ட ஆட்சியர்கள் நீதிமன்றத்தில் ஆஜராகி உள்ளனர். இது தொடர்பாக வழக்கறிஞர் அருள் நிதி நீர் நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரி வழக்கு ஒன்றை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தொடர்ந்தார்.இந்த வழக்கை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ராஜா அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.பின்னர் இது தொடர்பாக 5 மாவட்ட ஆட்சியர்கள் நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ராஜா அமர்வு உத்தரவு பிறப்பித்தது. நீர் நிலை ஆக்கிரமிப்பு வழக்குகளில் 5 மாவட்ட ஆட்சியர்கள் […]
மோதல் தொடர்பாக கருணாஸ் மீதான வழக்கை ரத்து செய்ய மறுப்பு தெரிவித்துவிட்டது உயர்நீதிமன்றக் கிளை. கடந்த செப்டம்பர் 28 ஆம் தேதி கருணாஸுக்கு நிபந்தனை ஜாமின் வழங்கியது சென்னை எழும்பூர் நீதிமன்றம் .தமிழக முதல்வர் மற்றும் காவல்துறையை சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த வழக்கில் அவருக்கு ஜாமின் வழங்கியது சென்னை எழும்பூர் நீதிமன்றம். வேலூர் மத்திய சிறையிலிருந்து கருணாஸ் விடுதலை செய்யப்பட்டார். 2 வழக்குகளில் நிபந்தனை ஜாமின் கிடைத்ததையடுத்து கருணாஸ் விடுதலை செய்யப்பட்டார்.மேலும் திருவல்லிக்கேணி காவல்நிலையத்தில் 30 நாட்களுக்கு […]
முதன்மை அமர்வு நீதிபதி நஸிமா பானு, தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் சத்தியமூர்த்தி ஆகியோர் மதுரை மத்திய சிறையை ஆய்வு செய்தனர். சிறையில் உள்ள இளம் குற்றவாளிகளுக்கு இடம் பற்றாகுறையாக இருப்பதாகவும், அவர்களுக்கு போதுமான அளவு அறை ஒதுக்கி கொடுக்க வேண்டும் எனவும், தரமான உணவு வழங்க வேண்டும் எனவும், மற்றும் பல குறைகளை சுட்டிகாட்டி, சிறை துறை அதிகாரிகளை நிவர்த்தி செய்து கொடுக்குமாறும் அறிவுறுத்தினார்.
செப்டம்பர் 29-ம் தேதி சர்வதேச இதய தினம் ஒவ்வொரு ஆண்டும் அனுசரிக்கப்படுகிறது. இதனையடுத்து மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை சார்பில் ஒரு வார கால விழிப்புணர்வு பிரச்சாரம் தொடங்கி நடந்து வருகிறது. இதனையடுத்து மதுரை ரயில் நிலையம் மற்றும் மீனாட்சி மிஷன் மருத்துவமனை சிகப்பு விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. மீனாட்சி மிஷன் மருத்துவமனை தலைவர் எஸ்.குருசங்கர் அவர்கள் பேசியதாவது, மக்கள் மத்தியில் இதயம் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சில கருத்துக்களை கூறியுள்ளார்.