கஜா புயலால் பாதிக்கப்பட்ட நாகை மாவட்ட மக்களுக்கு மதுரை மாநகராட்சி சார்பில் நிவாரண உதவிகள் அளிக்கப்பட்டுள்ளது. கஜா புயலால் பாதிக்கப்பட்ட நாகை மாவட்ட மக்களுக்கு சில இடங்களில் இருந்து உதவி கரங்கள் நீட்டிக்கொண்டு இருக்கின்றனர். ஆனால் அவர்களுக்கு முழுமையான உதவிகள் கிடைக்கப்பெறவில்லை என்றே கூறுகின்றனர். இந்நிலையில் மதுரை மாநகராட்சி சார்பில் நாகை மாவட்ட மக்களுக்கு 10 லட்சம் மதிப்பிலான லாரி மூலம் நிவாரண உதவிகள் அனுப்பப்பட்டுள்ளது.
எம்.பி.பி.எஸ் படிப்பில் 2019 முதல் மாணவர் சேர்க்கையை 250 ஆகா உயர்த்த மருத்துவ கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ளது. மதுரை அரசு மருத்துவ கல்லூரி மாணவர் சேர்க்கையை 250 ஆக உயர்த்துவது குறித்து உதவி இயக்குனர் சபிதா விசாரணை நடத்தி வருகிறார். இவ்வாறு உயர்த்துவதற்கு என்னென்ன தேவைகள் உள்ளது என விசாரித்து வருகின்றார். இதில் டீன் மருதுபாண்டியன், துணை முதல்வர் தனலட்சுமி ஆகியோர் கலந்து கொண்டனர்.
கஜா புயல் காரணமாக பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. மதுரையில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருவதுடன், மின்சாரமும் துண்டிக்கப்பட்டுள்ளது. கஜா புயல் காரணமாக மதுரை மாவட்டத்தில், மேலூர் கொட்டாம்பட்டியில் பலத்த காற்றுடன் மலை பெய்து வருவதோடு, மிசாரமும் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
கஜா புயல் காரணமாக மதுரை காமராஜர் பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கஜா புயல் காரணமாக சில பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைக்கைப்பட்டுள்ளது. இந்நிலையில் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெறவிருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகள் இறுதி தேர்வுக்கு பின்னர் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கஜா புயலால் மதுரை மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கஜா புயல் அதிதீவிரமாக மாறிய நிலையில் தமிழகத்தில் திருவாரூர், தஞ்சாவூர்,ராமநாதபுரம், புதுக்கோட்டை,புதுச்சேரி,காரைக்கால்,சிவகங்கை உள்ளிட்ட தமிழக மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.கஜா காலையில் நாகை கடற்கரையில் கடந்தநிலையில் உள்மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வுமையம் சார்பில் தெரிவிக்கப்பட்டநிலையில் இன்று மதுரை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். DINASUVADU
சைனிக் பள்ளியில் சேருவதற்கான நுழைவுத்தேர்வுக்கு புதிய வயது வரம்பு அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய வயது வரம்பை ரத்து செய்ய கோரி அனிதா என்பவர் ஐகோர்ட் கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தார். இதனையடுத்து பாதுகாப்பு துறை அமைச்சகத்தாக் நிர்வகிக்கப்படும் சைனிக் பள்ளி முதல்வருக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை நோட்டிஸ் அனுப்பியுள்ளது.
தமிழகமெங்கு தொடர்ந்து டெங்கு காய்ச்சல்கள் பரவி வருவதால், கல்லுப்பட்டி பேருராட்சியில் டெங்கு கொசுப்புழுக்கள் உற்பத்தியாகாமல் தடுக்கும் பணியில் அலுவலர்கள் ஈடுபட்டுள்ளனர்.மேலும் பள்ளி வளாகங்கள், பஸ் ஸ்டாண்டுகள் மற்றும் மக்கள் கூடும் இடங்களில் தண்ணீர் தேங்காத வண்ணம் கண்காணிக்குமாறும், காய் கழுவுதலின் அவசியம் பற்றியும் அறிவுறுத்தியுள்ளனர்.
மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை சர்க்கரை நோய் நிபுணர் மகேஷ்பாபு கூறியதாவது : சர்க்கரை நோய் பாதித்தோரில் மாரடைப்பு, சிறுநீரக கோளாறால் கடந்த ஆண்டுகளில் மட்டும் 40 லட்சம் பேர் உயிரி;தந்துள்ளதாக கூறியுள்ளார். சர்க்கரை நோய் தினத்தில், ‘ சர்க்கரை நோயும், குடும்பமும் ‘ என்ற கருத்த முன்வைத்து விழிப்புணர்வு அளிக்கப்படும் என்றும் நகர்ப்புறங்களில் 18, கிராமங்களில் 8 சதவீதம் பேர்களுக்கு சர்க்கரை நோய் பரவியுள்ளதாகவும் கூறியுள்ளார்.
மதுரை, ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்ட அணைகளில் இருந்து தண்ணீர் திறக்க முதலமைச்சர் பழனிச்சாமி உத்தரவு பிறப்பித்துள்ளார். இது தொடர்பாக முதலமைச்சர் பழனிச்சாமி வெளியிட்ட உத்தரவில், மதுரை, ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் உள்ள 5 கண்மாய்களுக்கு நாளை முதல் வரும் 21-ம் தேதி வரை வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்க உத்தரவு பிறப்பித்துள்ளார்.இதர வைகை பூர்வீக பாசன பகுதிக்கு வரும் 23-ம் தேதி முதல் 27-ம் தேதி வரை தண்ணீர் திறக்க பிறப்பித்துள்ளார். பகுதி-1ஐ சார்ந்த 4 கண்மாய்களுக்கு வரும் 28ம் தேதி முதல் […]
மதுரை தெற்குவாசல் என்.எம்.ஆர் பாலம் அருகே சதீஸ் அவர்கள் மர்மநபர்களால் கொலை செய்யப்பட்டுள்ளார். பாலமேடு பகுதியில் கொடூரமாக வெட்டிக்கொலை செய்யப்பட்டார். நாகமேடு பகுதியில், நித்யானந்தம் என்பவர் கைகள் கட்டப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 24 மணிநேரத்தில் அடுத்தடுத்து நடந்த ந்த மூன்று கொலைகள் நடந்துள்ளது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதனையடுத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சுகாதாரத்துறையில் தமிழகம் முதலிடம், பொதுவான நோய்களை கண்டறிவதிலும் தமிழகம் முதலிடம் என்று ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தெரிவித்துள்ளர். இது தொடர்பாக மதுரையில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கூறுகையில், சுகாதாரத்துறையில் தமிழகம் முதலிடம், பொதுவான நோய்களை கண்டறிவதிலும் தமிழகம் முதலிடத்தில் உள்ளது.அதேபோல் குழந்தைகள் இறப்பை தடுப்பதிலும், கர்ப்பிணி பெண்கள் உயிரிழப்பை தடுப்பதிலும் தமிழகம் முதலிடத்தில் உள்ளது என்றும் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தெரிவித்துள்ளர்.
மதுரை விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.இது பயணிகள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மதுரை விமான நிலையத்திற்கு தொலைபேசியில் இந்த வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் குறித்து விசாரணையை கையில் எடுத்த போலிசார் விசாரித்ததில் வெடிகுண்டு மிரட்டல் போலி என அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். மேலும் விமான நிலையத்தையும்,பயணிகளையும் பதற வைத்த அந்த தொலைப்பேசி வெடிகுண்டு மிரட்டல் யார் என்று தேடிய போலீசாருக்கு அடுத்த அதிர்ச்சி காத்திருந்தது மிரட்டல் விடுத்தவர் மேல அனுப்பானடியைச் சேர்ந்த 14 வயது சிறுவன் […]
மதுரை அரசு மருத்துவமனையில் பன்றிக் காய்ச்சலால் இதுவரை 12பேர் உயிரிழந்துள்ளனர் என்று மதுரை அரசு மருத்துவமனை டீன் மருதுபாண்டியன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மதுரை அரசு மருத்துவமனை டீன் மருதுபாண்டியன் கூறுகையில், மதுரை அரசு மருத்துவமனையில் பன்றிக் காய்ச்சலால் இதுவரை 12பேர் உயிரிழந்துள்ளனர்.அதேபோல் இறந்தவரின் உடலை வழங்க பட்டாசு வாங்கி வரும்படி கூறிய ஊழியர்களிடம் விசாரணை நடத்த குழு அமைக்கப்பட்டுள்ளது. 3 பேராசிரியர்கள் கொண்ட குழு விசாரித்த பின்னர் ஊழியர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பாரும் என்றும் மதுரை அரசு மருத்துவமனை டீன் மருதுபாண்டியன் […]
திண்டுக்கல் மாவட்டம் எமகாலபுரத்தை சேர்ந்தவர் யுவராஜ், இவருக்கு வயது 12. இவர் மர்மக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
மதுரையில் பூட்டிய வீட்டில் 7 இடங்களில் 336 சவரன் நகையை திருடிய இலங்கை அகதிகள் சிவராஜன் மற்றும் ரவி ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து 336 சவரன் நகை, 19 லட்சம் மற்றும் 23 இரு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டு, விசாரணை நடத்தி வருகிறது.
மதுரையில் பன்றிக் காய்ச்சலுக்கு 14 பேரும், டெங்கு காய்ச்சலுக்கு 2 பேரும் சிகிச்சை பெற்று வருகிறார்கள் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் அமைச்சர் செல்லூர் ராஜூ ஆய்வு ஆய்வு செய்த பின் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறுகையில் ,மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் பன்றிக் காய்ச்சலுக்கு 14 பேரும், டெங்கு காய்ச்சலுக்கு 2 பேரும் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு டெங்கு தாக்கம் குறைவாக உள்ளது என்றும் அமைச்சர் செல்லூர் ராஜூ […]
தமிழகத்தில் காய்ச்சல் பாதிப்புகள் தொடர்ந்து வருகின்ற நிலையில், மதுரையில் கடந்த 2 நாளில் மட்டும் பன்றி காய்ச்சலால் உயிரிழந்துள்ளனர். இதில் ஆன் மற்றும் குழந்தைகள் உட்பட 5 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 10 பேருக்கு பன்றி காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதி மக்கள் பீதியடைந்துள்ளனர்.
எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மதுரை மத்திய சிறையில், இதுவரை 13 கட்டமாக 239 கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மதுரை மத்திய சிறையில் இருந்து 18 ஆயுள் கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
மதுரை அரசு மருத்துவமனையில், பன்றிகாய்ச்சலால் பாதிக்கப்பட்ட மேலூரை சேர்ந்த அல்லிமலர் மற்றும் சுந்தர்ராஜன் பட்டியை சேர்ந்த மந்திரமூர்த்தியும் பன்றிகாய்ச்சலால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இவர்கள் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை உயிரிழந்துள்ளார்கள் . இது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
யானைகள் மின்சாரம் தாக்கி உயிரிழப்பதை தடுக்க, வனத்துறை செயலாளர் மின்வாரியத்துறை தலைவருடன் ஆலோசனை நடத்த ஆணையிட்டுள்ளது. இதற்க்கு வனத்துறை முதன்மை செயலாளர் ஆலோசனை நடத்தி உரிய முடிவு எடுக்குமாறு உயர்நீதிமன்ற மதுரை கிளை ஆணையிட்டுள்ளது. மேலும், மேகமலையில் யானைகள் மிசாரம் தாக்கி உயிரிழந்தது குறித்துவன உயிரின குற்ற தடுப்பு குழு விசாரிக்க உத்தரவிட்டுள்ளது. நீதிமன்றம் இந்த வழக்கை 3 மாதத்திற்கு ஒத்தி வைத்துள்ளது.