உலகப்புகழ் பெற்ற கள்ளழகர் மதுரை வைகையாற்றில் இறங்கும் நிகழ்வு சற்று முன்னர் கோலாகலமாக நடைபெற்றது.கொரோனா காரணமாக இரண்டு ஆண்டுகளாக நடைபெறாத நிலையில்,வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் நிகழ்வு இன்று பக்தர்கள் சூழ கோலாகலமாக நடைபெற்றது. அதன்படி,பச்சைப்பட்டு உடுத்தி தங்கக்குதிரை வாகனத்தில் கள்ளழகர் பக்தர்கள் வெள்ளத்தில் மிதந்து வந்து வைகை ஆற்றின் நடுவே அறநிலையத்துறை அமைந்திருந்த மண்டகப்படியில் கம்பீரமாக கள்ளழகர் எழுந்தருளினார்.இதனை காண வந்திருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து ஆடி,பாடி மகிழ்ந்தனர்.
மதுரையில் மீனாட்சி அம்மன் திருக்கோவிலில் சித்திரை திருவிழா ஏற்கனவே தொடங்கி நடைபெற்று வரும் நிலையில்,கடந்த ஏப்.12 இல் கள்ளழகர்,அழகர் கோவிலில் இருந்து தனது பயணத்தை தொடங்கினார். இந்நிலையில்,மதுரை வைகை ஆற்றில் நாளை கள்ளழகர் எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெறுவதையொட்டி,அதிக அளவு தண்ணீர் வருவதால் நாளை வைகை ஆற்றில் பக்தர்கள் இறங்க தடை விதித்து மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர் உத்தரவிட்டுள்ளார். எனினும்,வைகை ஆற்றின் கரையோரங்களில் மட்டும் நின்று சாமி தரிசனம் செய்ய மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.
விருதுநகர் இளம்பெண் பாலியல் வழக்கில் கைதான ஹரிஹரன், ஜுனைத் அகமத், மாடசாமி, பிரவீன் ஆகியோர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. விருதுநகரில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் பட்டியலின பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் ஹரிஹரன், ஜுனைத் அகமத், மாடசாமி, பிரவீன் மற்றும் பள்ளி மாணவர்கள் 4 பேர் என மொத்தம் 8 பேர் மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து,சிபிசிஐடி போலீசார் கைது செய்திருந்தனர். இவர்களிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்ட நிலையில், கைதான […]
ஏப்.16-ஆம் தேதி கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்வு நடைபெறவுள்ள நிலையில், அன்று உள்ளூர் விடுமுறை அறிவித்து மதுரை மாவட்ட ஆட்சியர் அனிஷ் சேகர் உத்தரவிட்டுள்ளார். மதுரையில் சித்திரை திருவிழா வெகுவிமரிசையாக நடைபெற்று வரும் நிலையில், ஏப்.16-ஆம் தேதி கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்வு நடைபெறவுள்ளது. இதனையடுத்து, அன்று மதுரை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து மதுரை மாவட்ட ஆட்சியர் அனிஷ் சேகர் உத்தரவிட்டுள்ளார். மேலும், ஏப்-16ல் கருவூலங்கள், சார்நிலை கருவூலங்கள் குறைந்த அளவு ஊழியர்களுடன் […]
கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவ நிகழ்ச்சியின் போது மாற்றுத்திறனாளிகளை அனுமதிக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவு. மதுரை சித்திரை திருவிழாவில் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவ நிகழ்ச்சியின் போது மாற்றுத்திறனாளிகளை அனுமதிக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், மதுரை மாவட்டத்தில் சித்திரை திருவிழாவில், “அருள்மிகு கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவத்தினை” கண்டுகளிக்கும் விதமாக 2018 ஆம் ஆண்டு முதல் மாற்றுத்திறனாளிகளுக்கென்று தனி இடவசதி சிறப்பாக ஏற்பாடு செய்யவும், இவ்வாய்ப்பினை ஆண்டு தோறும் மாவட்ட […]
சித்திரைப் பெருவிழா முன்னிட்டு அன்னதானத்துக்கு உணவுத்துறை அனுமதி அவசியம் என மதுரை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு. மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான வகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் நிகழ்வு ஏப்ரல் 16-ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த நிலையில் மதுரை மாவட்ட ஆட்சியர் எஸ்.அனீஷ் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில், சித்திரை திருவிழாவை முன்னிட்டு, கள்ளழகர் மண்டகப்படிகளில் அன்னதானம் வழங்குவதால் மற்றும் பக்தர்களால் வழங்கப்படும் பிரசாத உணவுகள் உள்ளிட்டவை பாதுகாப்பான உணவாக செயற்கை சாயங்கள் எதுவும் […]
மதுரையில், எரிவாயு விலை உயர்வை கண்டித்து, அகில இந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில், சிலிண்டருக்கு மாலை அணிவித்தும், ஒப்பாரி வைத்து மத்திய அரசுக்கு நூதன போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஐந்து மாநிலத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பின்பதாக தொடர்ந்து பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்த்தப்பட்டு வருகிறது. எரிவாயு விலை உயர்வு அந்த வகையில் வர்த்தக ரீதியாக பயன்படுத்தப்படும் 19 கிலோ எடை கொண்ட எல்பிஜி சிலிண்டர் விலை தற்போது 250 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. […]
மதுரை காமராஜர் பல்கலைக் கழக துணைவேந்தராக குமார் அவர்கள் நியமனம் செய்து தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவு. மதுரை காமராஜர் பல்கலைக் கழக துணைவேந்தராக குமார் அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார். மதுரை காமராஜர் பல்கலைக் கழக துணைவேந்தராக குமார் அவர்கள் நியமனம் செய்து தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவிட்டுள்ள நிலையில், ஆசிரிய பணியில் 29 ஆண்டுகள் அனுபவம் கொண்ட இவர், 3 ஆண்டுகள் பதவியில் இருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை – சிங்கப்பூர் இடையேயான நேரடி விமான சேவை இன்று முதல் மீண்டும் தொடக்கம். நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல் காரணமாக சர்வதேச விமான சேவைக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. ஆனால்,தற்போது கொரோனா பரவல் குறைந்து வருகிறது. இந்நிலையில்,கொரோனா காரணமாக ரத்து செய்யப்பட்டு இருந்த மதுரை – சிங்கப்பூர் இடையேயான நேரடி விமான சேவை இன்று முதல் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. அதன்படி,சிங்கப்பூர் நேரப்படி மாலை 5 மணிக்கு சிங்கப்பூரில் இருந்து புறப்பட்டு மாலை 6.40 மணிக்கு […]
இனி பணி நேரத்தில் அரசு ஊழியர்கள் செல்போன் பயன்படுத்த அனுமதிக்க கூடாது என்று தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. அத்தியாவசியமற்ற காரணங்களுக்காக அரசு ஊழியர்கள் செல்போனில் செல்போனில் நேரத்தை வீணடிக்க அனுமதிக்க கூடாது என்று நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. இது தொடர்பாக,உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் கூறுகையில்: “அலுவலக நேரத்தில் தேவையின்றி செல்போனில் அரட்டை அடிப்பதும், அதனை பயன்படுத்துவதும்,வீடியோ எடுப்பதும் நல்ல நடவடிக்கை அல்ல.அலுவலக நேரத்தில் செல்போன் பயன்பாடு தொடர்பாக தமிழக அரசு உரியவிதிகளை வகுக்க […]
மதுரை மாவட்டம் மேலூர் அடுத்த தும்பைபட்டியைச் சேர்ந்த 17 வயது சிறுமி காதலர் தினத்தன்று தனது காதலன் நாகூர் ஹனிபாயுடன் வீட்டை விட்டு சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, பிப்ரவரி 24-ஆம் தேதி மேலூர் அனைத்து மகளிர் காவல்நிலைத்தில் சிறுமியின் பெற்றோர் புகார் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து, வழக்குபதிவு செய்து காவல் 3 தனிப்படை அமைத்து தேடி வந்த நிலையில் அந்தச் சிறுமியை மயங்கிய நிலையில் சிறுமியின் காதலன் தாய் கடந்த 3 நாட்களுக்கு முன்பு சிறுமியின் வீட்டுக்கு அனுப்பி […]
மதுரையில் அனைத்து அரசு துறை அதிகாரிகள், அலுவலர்கள் பொது போக்குவரத்தை பயன்படுத்த அம்மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார். வாகன மாசை குறைக்கும் வகையில் அரசு அதிகாரிகள் மின்சார வாகனங்களிலோ, சைக்கிளிலோ, நடந்தோ வருமாறு அறிவுறுத்தியுள்ளார். புதன்கிழமைகளில் அரசு அலுவலர்கள் சொந்த வாகனத்தில் வருவதை தவிர்த்துவிட்டு, பொது பொதுப்போக்குவரத்தை பயன்படுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளார். அரசு அலுவலகங்களுக்கு வரும் பார்வையாளர்களையும் பொது போக்குவரத்தை பயன்படுத்த கோருமாறும் ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார்.
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் கடந்த 19 பிப்.ஆம் தேதி நடைபெற்று முடிந்த நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற கவுன்சிலர்கள் அனைவரும் நேற்று முன்தினம் பதவி ஏற்றுக் கொண்டனர். இன்று மேயர், துணை மேயர்,சேர்மன் மற்றும் துணை சேர்மன் ஆகிய பதவிகளுக்கு மறைமுகத் தேர்தல் இன்று காலை முதல் நடைபெற்று வருகிறது.பல இடங்களில் மானகரடசி மேயர்,நகராட்சி மற்றும் பேரூராட்சி தலைவர்கள் பொறுப்பேற்றுக் கொண்டனர். இதனிடையே, சிலர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். இந்நிலையில்,மதுரை திருமங்கலம் […]
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு மதுரை துணை மேயர் பதவியை திமுக ஒதுக்கீடு செய்துள்ளது. தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் கடந்த 19 பிப்.ஆம் தேதி நடைபெற்று முடிந்த நிலையில்,அதற்கான வாக்கு எண்ணிக்கை பிப்.22 ஆம் தேதி நடைபெற்றது.இதனையடுத்து,தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில்,திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் பெரும்பாலான இடங்களில் வெற்றி பெற்றது. இதனையடுத்து,நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற கவுன்சிலர்கள் அனைவரும் நேற்று பதவி ஏற்றுக் கொண்டனர்.இதனைத் தொடர்ந்து,மேயர்,துணை மேயர்,சேர்மன் மற்றும் துணை சேர்மன் […]
மதுரை:தமிழகத்தில் 9 புதிய ரயில் வழித்தடத்திட்டங்களுக்கு தலா ஆயிரம் ரூபாய் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதை வன்மையாக கண்டிப்பதாக மதுரை எம்பி சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார். தமிழக புதிய ரயில் வழித்தடத் திட்டங்களுக்கும் புதிதாக சேர்க்கப்பட்ட இரட்டை பாதை திட்டங்களுக்கும் போதிய நிதி ஒதுக்கீடு செய்து திட்டங்களை நிறைவேற்ற வேண்டும் என்று மத்திய அரசுக்கு மதுரை எம்.பி.சு.வெங்கடேசன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக,தனது அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது: வெறும் ஆயிரம் ரூபாய்: “மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையை தொடர்ந்து PINK Book என்று […]
நீட் என்றாலே குழப்பம்,பாதிப்பு,மாணவர்களுக்கான அநீதி என்றுதான் அர்த்தமா? என்றும்,நீட் முதுகலை மருத்துவ தேர்வுகளை ஒரு மாதத்திற்கு தள்ளி வைக்க வேண்டும் என்று கோரி மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சருக்கு மதுரை எம்பி சு.வெங்கடேசன் கடிதம் எழுதியுள்ளார். 2021 நீட் முதுகலை மருத்துவப் படிப்பு கலந்தாய்வு முடிவதற்கு முன்பே 2022 நீட் முதுகலை மருத்துவப் படிப்பிற்கான தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.எனவே,நீட் என்றாலே குழப்பம்,பாதிப்பு,மாணவர்களுக்கான அநீதி என்றுதான் அர்த்தமா? என்று கேள்வி எழுப்பிய மதுரை எம்பி சு.வெங்கடேசன் அவர்கள்,நீட் […]
மதுரை:தமிழக வணிக வரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்திக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழக வணிக வரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்திக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இதனைத் தொடர்ந்து,அமைச்சர் மூர்த்தி அவர்கள் தன்னை வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும்,கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக முதலமைச்சர் தலைமையில் காணொலி காட்சி வாயிலாக தற்போது நடைபெற்ற மதுரை மாவட்டத்திற்கான புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சியில் அமைச்சர் மூர்த்தி அவர்கள் பங்கேற்கவில்லை எனத் தகவல் வெளியாகியுள்ளது. […]
மதுரையில் இருந்து மேட்டுப்பாளையம் வரை புதிய ரயில் இயக்கப்பட உள்ளதாக சமூக வலைத்தளங்களில் வெளியான சுற்றறிக்கைக்கு தெற்கு ரயில்வே விளக்கம். மதுரையில் இருந்து பழனி, பொள்ளாச்சி வழியாக மேட்டுப்பாளையம் வரை புதிய விரைவு ரயில் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வேயின் பெயரில் சுற்றறிக்கை ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வந்தது. இந்த நிலையில், மதுரையில் இருந்து மேட்டுப்பாளையத்திற்கு ரயில் இயக்கப்பட உள்ளதாக வெளியான தகவலுக்கு தெற்கு ரயில்வே மறுப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் தெற்கு […]
மதுரை:ஒருவர் தவறு செய்ய துணைபுரிந்தால் யூடியூப்பும் குற்றவாளிதான் என்று உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தெரிவித்துள்ளது. ஒருவர் தவறு செய்ய துணை புரிந்தால் சட்டப்படி யூடியூப்பும் குற்றவாளிதான் என்று உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தெரிவித்துள்ளது.ஏனெனில்,யூடியூப்பை பார்த்து துப்பாக்கி,வெடிகுண்டு தயாரிப்பது,கள்ளச்சாராயம் காய்ச்சுவது என குற்றவாளிகள் பலரும் வாக்குமூலம் தருகின்றனர்.எனவே,அறிவியல் வளர்ச்சியை தவறாக பயன்படுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது.மேலும்,வெளிமாநிலங்களில் இருந்து தேவையற்ற வீடியோ பதிவு செய்யப்படுகிறது என்றால் அதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அதே சமயம்,தவறான வீடியோக்கள் […]
மதுரை:உலக புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி தற்போது தொடங்கியுள்ளது. உலக புகழ்பெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி தற்போது தொடங்கியுள்ளது.மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர் முன்னிலையில் மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி ஏற்றனர்.இதனையடுத்து,ஜல்லிக்கட்டு போட்டியை வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி கொடியசைத்து தொடங்கி வைத்துள்ளார். 700 காளைகள்,300 மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டுள்ள இந்த ஜல்லிக்கட்டு போட்டியில்,முனியாண்டி கோயில் காளை உள்ளிட்ட கிராம கோயில் காளைகள் வடிவாசலில் முதலில் அவிழ்த்து விடப்பட்டதையடுத்து , போட்டி நடைபெற்று வருகிறது. அலங்காநல்லூர் […]