மதுரை

11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரிசல்ட் வெளியீடு;லிங்க் இதோ – முதல் 3 இடம் பிடித்த மாவட்டங்கள் எவை தெரியுமா?..!

தமிழகத்தில் கடந்த மே மாதம் 2021-22 ஆம் கல்வியாண்டிற்கான பதினொன்றாம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெற்ற நிலையில்,இந்த பொதுத் தேர்வு முடிவுகளை தற்போது (ஜூன் 27-ஆம் தேதி) அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ளது.அதன்படி,தேர்வர்கள்  http://tnresults.nic.in & http://dge.tn.gov.in என்ற இணைய தளத்தில் தங்களது பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம்,தமிழகம்,புதுச்சேரியில் 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 90.07% மாணவ,மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.அந்த வகையில்,8,43,675 பேர் தேர்வு […]

#TNGovt 5 Min Read
Default Image

#Breaking:”உயிரிலும் மேலான தொண்டர்கள் என் பக்கம்;யாராலும் என்னை நீக்க முடியாது” – ஓபிஎஸ் பதிலடி!

அதிமுகவில் ஒற்றைத் தலைமை குறித்த சர்ச்சை எழுந்துள்ள நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன் பல்வேறு பிரச்சனைக்கு மத்தியில்,அதிமுக பொதுக்குழு கூட்டம் பரபரப்பாக நடந்து முடிந்துள்ள நிலையில்,அடுத்த பொதுக்குழு கூட்டம் ஜூலை 11 ஆம் தேதி நடைபெறவுள்ளது. அக்கூட்டத்தில்,ஒற்றைத் தலைமை தீர்மானம் குறித்து முடிவு எடுக்கப்படவுள்ளது. மேலும்,ஜூலை 11 இல் நடைபெறும் பொதுக்குழுவில் நிச்சயம் ஈபிஎஸ் அவர்கள் பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்படுவார் எனவும், கழகத்தின் தொண்டர்கள் தற்போது ஈபிஎஸ் அவர்களுக்கு தான் ஆதரவாக உள்ளனர் என்றும் அவரது ஆதரவாளரான […]

#ADMK 7 Min Read
Default Image

இன்று முதல் இங்கே முகக்கவசம் கட்டாயம் – நீதிமன்றம் போட்ட உத்தரவு!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தொற்று பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது.அந்த வகையில்,தமிழகத்தில் நேற்று மட்டும் 692 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.இதனால்,மக்கள் கூட்டம் அதிமுகமுள்ள இடங்களில் கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும் என அரசு தரப்பில் ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில்,இன்று திங்கட்கிழமை(ஜூன் 20) முதல் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.அதன்படி,வழக்கறிஞர்கள், நீதிமன்ற பணியாளர்கள் என அனைவரும் முகக்கவசம் அணிந்து வரவேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை […]

#Madurai 4 Min Read
Default Image

#Breaking:அதிகரிக்கும் கொரோனா;ஜூன் 20 முதல் இவை கட்டாயம் – நீதிமன்றம் போட்ட உத்தரவு!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தொற்று பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது.அந்த வகையில்,தமிழகத்தில் நேற்று மட்டும் நேரத்தில் 552 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால்,மக்கள் கூட்டம் அதிமுகமுள்ள இடங்களில் கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும் என அரசு தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில்,வருகின்ற திங்கட்கிழமை(ஜூன் 20) முதல் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.அதன்படி,வழக்கறிஞர்கள், நீதிமன்ற பணியாளர்கள் என அனைவரும் முகக்கவசம் அணிந்து வரவேண்டும் என உயர்நீதிமன்ற […]

coronavirusintamilnadu 3 Min Read
Default Image

#BREAKING: நிதி முறைகேடு – ஊராட்சி மன்ற தலைவர் பதவி நீக்கம்!

முறைகேட்டில் ஈடுபட்டது அம்பலமானதால் மதுரை மாவட்டம் கோட்டைமேடு ஊராட்சி மன்ற தலைவர் பதவி நீக்கம். நிதி முறைகேடு புகாரில் மதுரை மாவட்டம் கோட்டைமேடு ஊராட்சி மன்ற தலைவர் ஷர்மிளா ஜி.மோகன் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். 2019 நடந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்று ஊராட்சி மன்ற தலைவரானார் ஷர்மிளா ஜி.மோகன். ஊராட்சி மன்ற தலைவராக பதவியேற்றபின் ஊராட்சி நிதியை சொந்த வங்கி கணக்குக்கு மாற்றி முறைகேடு செய்ததாக குற்றசாட்டு எழுந்ததாக கூறப்படுகிறது. இதனைத்தொடர்ந்து அதிகாரிகள் நடத்திய ஆய்வில், […]

#Madurai 3 Min Read
Default Image

#Breaking:சற்று முன்…கோயில் திருவிழாவில் நாடகம் நடத்த அனுமதி – உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு!

தமிழகத்தில் கோயில்களில் ஆடல்,பாடல் நிகழ்ச்சி நடத்த அனுமதி கோரிய மனுக்களை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்றம் மதுரை கிளை நேற்று உத்தரவிட்டிருந்தது.குறிப்பாக,கோயில் விழாக்களில் ஆடல்,பாடல் நிகழ்ச்சிக்கு அனுமதி கோரி பல்வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்கள் வழக்கு தொடுத்திருந்தனர். இந்த வழக்கு விசாரணையின்போது,கோயில் விழாக்கள் வழக்கம்போல் நடைபெறலாம்.ஆனால்,ஆடல்,பாடல் நிகழ்ச்சிக்கு அனுமதி தர இயலாது என உயர்நீதிமன்ற கிளை தெரிவித்து,இதுதொடர்பான மனுக்களை நேற்று தள்ளுபடி செய்திருந்தது. இந்நிலையில்,மதுரை முதலைக்குளம் கோயில் திருவிழாவில் நாடகம் நடத்த உயர்நீதிமன்ற மதுரைக் கிளை அனுமதி அளித்துள்ளது. […]

#Temple 3 Min Read
Default Image

பேராசிரியர்கள் தேவை.. ஜூன் 18க்குள் விண்ணப்பிக்கலாம் – எய்ம்ஸ் மருத்துவ கல்லூரி அறிவிப்பு

மதுரை எய்ம்ஸ் மருத்துவ கல்லூரியில் 21 துறைகளில் பணியாற்ற 94 பேராசிரியர்கள் தேவை என அறிவிப்பு. மதுரை எய்ம்ஸ் மருத்துவ கல்லூரியில் பணியாற்ற 94 பேராசிரியர்கள் தேவை என அறிவிப்பு வெளியாகியுள்ளது. மதுரை எய்ம்ஸ் மருத்துவ கல்லூரி நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், மதுரை எய்ம்ஸ் மருத்துவ கல்லுரியில் 21 துறைகளில் பணியாற்ற 94 பேராசிரியர்கள் தேவைப்படுகின்றனர். அதன்படி, ENT, Anatomy, Biochemistry, General Surgery உள்ளிட்ட 21 துறைகளில் பணியாற்ற 94 பேராசிரியர்கள் தேவைப்படுகின்றனர். இதில், 20 […]

AIIMS 3 Min Read
Default Image

பொதுமக்கள் புகார் அளிப்பதற்காக மொபைல் செயலி வசதி – மாநகராட்சி ஆணையர் அறிவிப்பு

ஸ்மார்ட் சிட்டி பணிகள் துரிதமாக்கப்படும் என புதிதாக பொறுப்பேற்ற மதுரை மாநகராட்சி ஆணையர் பேட்டி. கடந்த 2021-ஆம் ஆண்டு மதுரை மாநகராட்சியின் 69-வது ஆணையராக கார்த்திகேயன் பொறுப்பேற்றார். மதுரை மாநகராட்சி ஆணையராக கார்த்திகேயன் பொறுப்பேற்ற பிறகு நிர்வாகத்தில் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை என்றும் குறிப்பாக நிதி தட்டுப்பாடு, மாநகராட்சி திட்டப் பணிகள், ஸ்மார்ட் சிட்டி திட்டங்களில் பெரிய அளவில் சுணக்கம் ஏற்பட்டுள்ளதாக குற்றசாட்டுகள் எழுந்ததாக கூறப்படுகிறது. ஆனாலும், கார்த்திகேயன் ஆணையராக பதவியேற்றது முதல் குடிநீர், பாதாள சாக்கடை, […]

#Madurai 4 Min Read
Default Image

#BREAKING: பால்வளத்துறை துணை ஆணையர் பணி இடைநீக்கம்!

மதுரை மண்டல பால்வளத்துறை துணை ஆணையர் கிறிஸ்துதாஸை சஸ்பெண்ட் செய்து ஆணையர் பிரகாஷ் உத்தரவு. மதுரை மண்டல பால்வளத்துறை துணை ஆணையர் கிறிஸ்துதாஸை பணி இடை நீக்கம் செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பால்வளத்துறை துணை ஆணையர் கிறிஸ்துதாஸ் நேற்று ஓய்வு பெற வேண்டிய நிலையில், பால்வள மேம்பாட்டு ஆணையர் பிரகாஷ் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். கிறிஸ்துதாஸ் மீது நிலுவையில் உள்ள குற்றச்சாட்டுகள் மீதான விசாரணை முடிவடையும் வரை ஒய்வு பெற அனுமதி இல்லை என்றும் ஆணையர் பிரகாஷ் உத்தரவிட்டார்.

#Madurai 2 Min Read
Default Image

#Breaking:பரபரப்பு…திமுகவினரின் இருக்கைகளில் அமர்ந்த அதிமுகவினர்!

மதுரை மாநகராட்சிக்கான நடப்பு ஆண்டிற்கான  பட்ஜெட்டை மேயர் இந்திராணி தாக்கல் இன்னும் சற்று நேரத்தில் செய்ய இருந்த நிலையில்,மதுரையில் உள்ள அனைத்து வார்டுகளை சேர்ந்த கவுன்சிலர்களும் அறிஞர் அண்ணா மாளிகைக்கு வருகை புரிந்துள்ளனர். இந்நிலையில்,திமுக கவுன்சிலர்களுக்கு ஒதுக்கப்பட்ட இருக்கைகளில் அதிமுக கவுன்சிலர்கள் அமர்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.இதனால், திமுக கவுன்சிலர்கள் அதிமுக கவுன்சிலர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டனர்.இதனையடுத்து,உரிய இருக்கைகளில் அமர வேண்டும் என மாமன்ற செயலாளர் ரமேஷ் உத்தரவு பிறப்பித்தார். ஆனால்,அதனை மீறியும் சுமார் 30 நிமிடங்களுக்கும் மேலாக வாக்குவாதம் […]

#ADMK 2 Min Read
Default Image

5 ஷவர்மா கடைகளில் கெட்டுப்போன சிக்கன் பறிமுதல்…! உணவு பாதுகாப்புத்துறை நோட்டீஸ்..!

மதுரையில், உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் உணவகங்களில் சோதனை மேற்கொண்ட நிலையில், 5 ஷவர்மா கடைகளில் கெட்டுப்போன சிக்கன் பறிமுதல். கேரளாவின் காசர்கோட்டில் உள்ள பேருந்து நிலையம் அருகே தனியார் உணவகத்தில் விற்பனை செய்யப்பட்ட ஷவர்மாவை வாங்கி சாப்பிட்ட, கரிவள்ளூரில் வசிக்கும் தேவானந்தா என்ற 16 வயது பள்ளி மாணவி உயிரிழந்துள்ளார். இந்த சம்பவத்தை தொடர்ந்து அதிகாரிகள் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், மதுரையில், உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் உணவகங்களில் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையில், 5 […]

Chicken 2 Min Read
Default Image

#BREAKING: மதுரை மருத்துவக் கல்லூரி டீனாக மீண்டும் ரத்னவேல் நியமனம் – அமைச்சர் அறிவிப்பு

மதுரை மருத்துவக் கல்லூரி முதல்வர் இடமாற்றம் ரத்து, மீண்டும் அதே பணியில் அமர்த்தப்படுவார் என அறிவிப்பு. மதுரை மருத்துவக் கல்லூரி டீனாக மீண்டும் ரத்னவேல் நியமனம் செய்யப்படுவதாக மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்துள்ளார். சமஸ்கிருதத்தில் மருத்துவ மாணவர்கள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டது தொடர்பாக மதுரை மருத்துவ கல்லுரி முதல்வர் ரத்னவேல் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டிருந்தார். இந்த நிலையில், இன்று காலை மருத்துவத்துறை அமைச்சரை நேரில் சந்தித்து சம்ஸ்கிருத உறுதிமொழி சர்ச்சை குறித்து விளக்கத்தை அளித்திருந்தார் ரத்னவேல். தற்போது அவர் அளித்த […]

#MinisterMaSubramanian 4 Min Read
Default Image

சமஸ்கிருத உறுதிமொழி சர்ச்சை – மருத்துவக் கல்வி இயக்குநர் விளக்கம்!

தேசிய மருத்துவ ஆணையம் அனுப்பிய சுற்றறிக்கையை குழப்பத்திற்கு காரணம் என சம்ஸ்கிருத உறுதிமொழி விவகாரத்தில் மருத்துவக் கல்வி இயக்குநர் விளக்கம். மதுரை மருத்துவ கல்லூரியில் சமஸ்கிருதத்தில் உறுதிமொழி ஏற்ற விவகாரத்தில் காத்திருப்போர் பட்டியலில் உள்ள கல்லூரி முதல்வர் ரத்னவேல் மற்றும் மாணவர்களிடையே மருத்துவக் கல்வி இயக்குநர் நாராயணபாபு விசாரணை மேற்கொண்டார். இதன்பின் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், சுற்றறிக்கையால் வந்த குழப்பதால் தான் சமஸ்கிருத மொழியில் உறுதி மொழி ஏற்கப்பட்டது. NMC சுற்றறிக்கை பற்றி விளக்கம் பெறாமல் […]

#Madurai 3 Min Read
Default Image

மதுரை மருத்துவக் கல்லூரி முதல்வராக ரத்தினவேலை மீண்டும் நியமிக்க வேண்டும் – ஓபிஎஸ்

மருத்துவர் ரத்தினவேலை மீண்டும் மதுரை மருத்துவக் கல்லூரி முதல்வராக நியமிக்க தமிழக அரசுக்கு ஓபிஎஸ் வலியுறுத்தல். மதுரை மருத்துவக் கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்களை வரவேற்கும் நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் பழனிவேல் தியாகராஜன், பி.மூர்த்தி, மாவட்ட ஆட்சியர் அனிஷ்சேகர், கல்லூரி முதல்வர் ரத்னவேல் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். அப்போது மாணவர்கள் சமஸ்கிருதத்தில் மகரிஷி சரக் சப்த் உறுதிமொழி ஏற்றது பெரும் சர்ச்சையானது. இதனைத் தொடர்ந்து, மேடையில் பேசிய அமைச்சர் பிடிஆர், சமஸ்கிருதத்தில் உறுதிமொழி ஏற்கபட்டது அதிர்ச்சியளிக்கிறது […]

#AIADMK 6 Min Read
Default Image

#Breaking:சமஸ்கிருதத்தில் உறுதிமொழி – கல்லூரி முதல்வர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்!

மதுரை மருத்துவக் கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்களை வரவேற்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் பழனிவேல் தியாகராஜன்,பி.மூர்த்தி,மாவட்ட ஆட்சியர் அனிஷ்சேகர்,கல்லூரி முதல்வர் ரத்னவேல் உள்ளிட்டோர்  கலந்துகொண்டனர். அப்போது வழக்கமான உறுதிமொழிக்கு பதிலாக மாணவர்கள் சமஸ்கிருதத்தில் மகரிஷி சரம் சப்த் உறுதிமொழி ஏற்றது பெரும் சர்ச்சையானது.இதனைத் தொடர்ந்து,மேடையில் பேசிய அமைச்சர் பிடிஆர்,சமஸ்கிருதத்தில் உறுதிமொழி ஏற்கபட்டது அதிர்ச்சியளிக்கிறது என அதிருப்தி தெரிவித்தார். இதனையடுத்து,சமஸ்கிருத உறுதிமொழி ஏற்றது தொடர்பாக விளக்கமளிக்கு கல்லூரி முதல்வர் ரத்னவேல் அவர்கள் விளக்கமளிக்க மருத்துவ கல்லூரி இயக்குநரகம் உத்தரவிட்டது.அதன்பின்னர்,தேசிய […]

College Dean 4 Min Read
Default Image

தீயணைப்புத்துறை அலுவலகத்தில் திடீர் விசிட் அடித்த முதல்வர்..!

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், மதுரை உசிலம்பட்டி தீயணைப்பு துறை அலுவலகத்தில் திடீரென்று ஆய்வு மேற்கொண்டுள்ளார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், அவ்வப்போது காவல்துறை உள்ளிட்ட அலுவலகங்களில் திடீர் ஆய்வு மேற்கொள்வதுண்டு உண்டு. அந்த வகையில், இன்று மதுரையில் தீயணைப்புத்துறை அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டுள்ளார். மதுரை உசிலம்பட்டி தீயணைப்பு துறை அலுவலகத்தில் திடீரென்று ஆய்வு மேற்கொண்டுள்ளார். அப்போது தீயணைப்பு துறை அலுவலகத்தில் எத்தனை பேர் பணியில் உள்ளனர் என்பது தொடர்பான விவரங்களை கேட்டறிந்துள்ளார்.

#MKStalin 2 Min Read
Default Image

மதுரை மேம்பாலம் விபத்து – தனியார் நிறுவனத்துக்கு ரூ.3 கோடி அபராதம்!

மதுரையில் மேம்பாலம் இடிந்த விபத்தில் தனியார் ஒப்பந்த நிறுவனத்திற்கு ரூ.3 கோடி அபராதம் விதிப்பு. மதுரை புதுநத்தம் சாலையில் 7.5 கிலோ மீட்டர் தூரத்திற்கு சுமார் ரூ.545 கோடி மதிப்பீட்டில் மேம்பாலம் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த மேம்பாலத்தின் ஒரு பகுதி கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இடிந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஒரு தொழிலாளி உயிரிழந்த நிலையில், விபத்து தொடர்பாக கட்டுமான நிபுணர்கள் கொண்ட குழு விசாரணை நடத்தி வந்தது. இந்த விசாரணையின் அடிப்படையில், ஒப்பந்த நிறுவனத்திற்கு […]

FINE 3 Min Read
Default Image

மக்களே கவனம்… 500 அபராதம்.. மாஸ்க் அணிவதை கண்காணிக்க சிறப்புக் குழு – மாவட்ட ஆட்சியர் உத்தரவு

மாஸ்க் அணியாமல் பொது இடங்களுக்கு வருபவர்களுக்கு ரூ.500 விதிக்கப்படும் என மதுரை ஆட்சியர் அறிவிப்பு. தமிழ்நாட்டில் கடந்த சில வாரங்களாக கொரோனா தொற்று குறைந்து வந்த நிலையில், தற்போது மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இருப்பினும், கொரோனாவின் தாக்கம் குறைந்ததால், பொதுமக்களிடையே முகக்கவசம் அணிவது உள்ளிட்ட கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் பின்பற்றுவது சற்று குறைந்து காணப்பட்டது. இந்த சமயத்தில் தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரிப்பைக் கருத்தில் கொண்டு பொது இடங்களில் இனி முகக்கவசம் அணியாவிட்டால் ரூ.500 அபராதம் வசூலிக்க உத்தவிட்டுள்ளதாக மருத்துவத்துறை […]

#COVID19 3 Min Read
Default Image

தேன்கூட்டில் கல்லெறிந்த சிறுவர்கள் – ஒருவர் உயிரிழப்பு ; 10 பேர் படுகாயம்!

மதுரை மாவட்டத்திலுள்ள திருமங்கலம் எனும் பகுதியில் சிறுவர்கள் விளையாட்டுத்தனமாக தேன் கூட்டின் மீது கல்லெறிந்து விளையாடியுள்ளனார். இதனை அடுத்து இந்த தேனீக்கள் கலைந்து அருகிலிருந்தவர்களை விரட்ட ஆரம்பித்துள்ளது. அப்பொழுது தேனீக்கள் கொட்டியதில் 75 வயது முத்து எனும் முதியவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும் தேனீக்கள் கொட்டியதில் 3 பெண்கள் உள்பட 10 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

#Death 2 Min Read
Default Image

#Breaking:பெரும் சோகம்…வைகை ஆற்றில் பக்தர்கள் இருவர் பலி;உதவி எண் அறிவிப்பு!

உலகப்புகழ் பெற்ற கள்ளழகர் மதுரை வைகையாற்றில் இறங்கும் நிகழ்வு இன்று காலை கோலாகலமாக நடைபெற்றது.கொரோனா காரணமாக இரண்டு ஆண்டுகளாக நடைபெறாத நிலையில்,வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் நிகழ்வு இன்று லட்சக்கணக்கான பக்தர்கள் சூழ கோலாகலமாக நடைபெற்றது. அதன்படி,பச்சைப்பட்டு உடுத்தி தங்கக்குதிரை வாகனத்தில் கள்ளழகர் பக்தர்கள் வெள்ளத்தில் மிதந்து வந்து வைகை ஆற்றின் நடுவே அறநிலையத்துறை அமைந்திருந்த மண்டகப்படியில் கம்பீரமாக கள்ளழகர் எழுந்தருளினார்.இதனை காண வந்திருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் வைகை ஆற்றில் இறங்கி தண்ணீரை பீய்ச்சி அடித்து ஆடி,பாடி […]

kallazhagar 5 Min Read
Default Image