திருமங்கலம் அருகே பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் நிதியுதவி அறிவிப்பு. மதுரை திருமங்கலம் அருகே அழகுசிறை கிராமத்தில் செயல்பட்டு வந்த பட்டாசு தொழிற்சாலையில் இன்று திடீரென ஏற்பட்ட வெடிவிபத்தில் 5 பேர் உயிரிழந்தனர் என்ற செய்தியினை கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன் என முதலமைச்சர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், வணிகவரி மற்றும் பத்திரப்பதிவு துறை அமைச்சர் மூர்த்தியை உடனடியாக சம்பவ இடத்திற்கு செல்ல அறிவுறுத்தியுள்ளேன். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு […]
அக்டோபர் 23 அன்று கோவையில் நடந்த கார் குண்டுவெடிப்பைத் தொடர்ந்து என்ஐஏ அதிகாரிகள் சோதனை. தமிழ்நாடு முழுவதும் 45 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். கோவை கார் சிலிண்டர் வெடிப்பு தொடர்பாக என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். அதாவது, கோவையில் மட்டும் 20 இடங்களில் சோதனை நடந்து வருகிறது. அக்டோபர் 23 அன்று கோவையில் நடந்த கார் குண்டுவெடிப்பைத் தொடர்ந்து இந்த சோதனைகள் நடைபெற்று வருகிறது. சென்னை மற்றும் கேரள மாநிலம் கொச்சியில் […]
மதுரையில் குழாய் பதிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது உயிரிழந்தவருக்கு நிதியுதவி அறிவித்தார் முதலமைச்சர். மதுரையில் குழாய் பதிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது உயிரிழந்தவருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவியை அறிவித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். நேற்று முன்தினம் மதுரை நகரில், குழாய் பதிக்கும் பணியில் மூன்று பணியாளர்கள் ஈடுபட்டிருந்தபோது அதே இடத்தின் வழியாக செல்லும் குடிநீர் குழாய் வெடித்ததால் அவர்கள் பணிபுரிந்து கொண்டிருந்த இடம் நிலத்தில் புதைந்துள்ளது. இச்சம்பவத்தில் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தைச் சேர்ந்த சக்திவேல் (வயது 30) என்பவர் பள்ளத்தில் சிக்கி, […]
கட்டுக்கோப்பாக இருந்த தமிழகத்தை மதுவும், கஞ்சாவும் வந்து இளைஞர்களை சீரழித்துக் கொண்டு இருக்கிறது என அண்ணாமலை பேட்டி. தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மதுரையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அப்போது செய்தியாளர்கள் அவரிடம், மதுரையில் கல்லூரியில் நுழைந்து போதையில் இளைஞர்கள் ரகளையில் ஈடுபட்டது குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், கல்லூரி மாணவர்களிடையே போதை பழக்கம் அதிகமாகியுள்ளது. கட்டுக்கோப்பாக இருந்த தமிழகத்தை மதுவும், கஞ்சாவும் வந்து இளைஞர்களை சீரழித்துக் கொண்டு இருக்கிறது. போலிஸாரின் கைகளை கட்டி போட்டுள்ளனர். […]
மதுரையில் கல்லூரியில் போதையில் தகராறு செய்த இளைஞர்களை கைது செய்த காவல்துறையினர். நேற்று முன்தினம் மதுரை மீனாட்சி அரசு கலைக்கல்லூரி சாலையில் இளைஞர்கள் சிலர் மது போதையில் இருசக்கர வாகனத்தில் ஒலி எழுப்பியவாறு அதிவேகத்தில் சென்றுள்ளனர். மேலும், ஆபாச வார்த்தைகளால் கூச்சலிட்டபடி சென்றுள்ளனர். இளைஞர்களின் செயல் அங்கிருந்த மாணவிகளை அச்சத்தில் ஆழ்த்திய நிலையில், இதனை பார்த்துக் கொண்டிருந்த மாணவி ஒருவரின் தந்தை கல்லூரி அருகே ஏன் இப்படி செய்கிறீர்கள் மாணவிகள் பயப்படுகிறார்கள் என்று தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த […]
மதுரையில் ஆ.எஸ்.எஸ் பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய அபுதாகீர் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பதியப்பட்டுள்ளது. நாடுமுழுவதும் தேசிய புலனாய்வு அமைப்பான என்.ஐ.ஏ சோதனை நடத்தி, பலர் கைது செய்யப்பட்டனர், இந்த சம்பவத்தை அடுத்து அடுத்ததாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. கடந்த மாதம் 24ஆம் தேதி மதுரை, அனுபநாடியை சேர்ந்த ஆர்.எஸ்.எஸ் பிரமுகர் வீட்டில் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசினர். இதில் சமபந்தபட்ட குற்றவாளியை […]
மனிதச் சங்கிலி பேரணி வெறுப்பு அரசியலுக்கு முடிவு கட்டும் என மதுரை எம்பி சு.வெங்கடேசன் கருத்து. தமிழகம் முழுவதும் சமூக நல்லிணகத்தை வலியுறுத்தி விசிக, இடதுசாரிகள் சார்பாக மனித சங்கிலி போராட்டம் நடைபெற்று வருகிறது. இதில், தமிழ்நாடு காங்., மதிமுக, விசிக உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட அரசியல் கட்சிகள், மக்கள் அமைப்பு மற்றும் இயக்கங்கள் பங்கேற்றுள்ளனர். இந்த நிலையில், மதுரையில் எம்பி சு.வெங்கடேசன் தலைமையில் மனிதச் சங்கிலி பேரணி நடந்து வருகிறது. இதில் விசிக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் […]
அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு, மதுரை சிறையிலிருந்து மேலும் 15 ஆயுள் கைதிகள் விடுதலை. தமிழக்கத்தில் தலைவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு சிறைகளில் ஆயுள் தண்டனை கைதிகளை நன்னடத்தை அடிப்படையில் மாநில அரசுகள் முன்கூட்டியே விடுதலை செய்து வருகின்றன. முன்னாள் முதலமைச்சர் அண்ணாவின் பிறந்தநாளையொட்டி நல்லெண்ணம், மனிதாபிமான அடிப்படையில் சுமார் 700 கைதிகள் முன்கூட்டியே விடுதலை செய்யப்படுவார்கள் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன்படி, மதுரை மத்திய சிறையிலிருந்து அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு மதுரை மத்திய சிறையில் இருந்து […]
விரைவில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானம் முடிந்ததும் பிரதமர் மோடி திறந்து வைப்பார் என ஜே.பி நட்டா தகவல். பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா 2 நாள் பயணமாக தமிழகம் வந்துள்ளார். இந்த நிலையில், மதுரையில் நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் பேசிய ஜே.பி.நட்டா, மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானத்திற்கான பணிகள் 95% நிறைவடைந்து உள்ளன. எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மொத்தம் ரூ.1264 கோடி ஒதுக்கப்ட்டுள்ளது என்றும் கூடுதலாக தொற்று நோய் பிரிவுக்காக ரூ.134 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது […]
மதுரையில் டைடல் நிறுவனம் மற்றும் மாநகராட்சி இணைந்து ‘டைடல் பார்க்-ஐ’ அமைக்கிறது என முதலமைச்சர் அறிவிப்பு மதுரை அழகர் கோவில் சாலையில் உள்ள தனியார் விடுதியில் முதலமைச்சர் முக ஸ்டாலின் தலைமையில் “தோள் கொடுப்போம் தொழில்களுக்கு” மாநாடு துவங்கி நடைபெற்று வருகிறது. சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை சார்பில் நடக்கும் தென்மண்டல மாநாட்டில் தொழில்துறையின் பங்கேற்றுள்ளனர். இந்த மாநாட்டில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், மதுரை மாட்டுத்தாவணியில் ‘டைடல் பார்க்’ அமைக்கப்பட உள்ளது என அறிவித்துள்ளார். […]
மதுரையில் விதி மீறி இயக்கிய ஆட்டோ ஓட்டுநர்களிடம் ரூ.2.5 கோடி அபராதம் வசூல் என நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல். விதிகளை மீறிய 694 ஆட்டோக்களின் பர்மிட் ரத்து செய்யப்பட்டுள்ளதாக உயர் நீதிமன்ற கிளையில் மதுரை காவல் ஆணையர் அறிக்கை தாக்கல் செய்துள்ளார். மதுரை மாநகரில் 2013-17 வரை விதி மீறி இயக்கிய ஆட்டோ ஓட்டுநர்களிடம் ரூ.2.5 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. விதி மீறி இயக்கப்படும் ஆட்டோக்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மினி பஸ் உரிமையாளர்கள் […]
திருமணத்திற்கு பின்னும் எங்களது நண்பனை கிரிக்கெட் விளையாட அனுமதிக்க வேண்டும் மணமகளிடம் கையெழுத்து வாங்கிய மணமகனின் நண்பர்கள். மதுரையை சேர்ந்த ஹரிபிரசாத் என்பவருக்கும், தேனியை சேர்ந்த பூஜா என்பவருக்கும் மதுரையில் கோலாகலமாக திருமணம் நடைபெற்றது. மணமகன் ஹரி பிரசாத் கிரிக்கெட் கொண்டவர். இந்த நிலையில், இவர்களது திருமணத்திற்கு வந்த ஹரிபிரசாத்தின் நண்பர்கள், திருமணத்திற்கு பின்னும் எங்களது நண்பனை கிரிக்கெட் விளையாட அனுமதிக்க வேண்டும் என்று ரூ.20 பத்திரத்தில் மணமகள் பூஜாவிடம் கையெழுத்து வாங்கியுள்ளார்.
காலை சிற்றுண்டி திட்டத்தை மதுரை பள்ளியில் செப்டம்பர் 15-ஆம் தேதி தொடங்கி வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின். காலை சிற்றுண்டி திட்டத்தை அண்ணா பிறந்தநாளான செப்டம்பர் 15-ஆம் தேதி மதுரையில் தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் முக ஸ்டாலின். 1 முதல் 5-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் மதுரையில் உள்ள பள்ளியில் தொடங்கி வைக்கிறார். அதன்படி, தமிழகம் முழுவதும் 1,545 அரசு தொடக்க பள்ளிகளில் 1.14 லட்சம் மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி திட்டம் […]
நாளை ராகுல் காந்தியின் பபுரட்சி பயணத்தை தொடங்கி வைக்க கன்னியாகுமரி பயணம் மேற்கொள்கிறார் முதலமைச்சர். காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி நாளை கன்னியாகுமரியில் தொடங்கி காஷ்மீர் வரை 3,500 கிலோ மீட்டர் 150 நாட்கள் இந்திய ஒற்றுமை நடை பயணத்தை மேற்கொள்ள இருக்கிறார். அதற்காக, இன்று மாலை சென்னை வருகிறார் ராகுல்காந்தி. நாளை (புதன்கிழமை) காலை ஸ்ரீபெரும்புதூர் வரும் ராகுல் காந்தி, அங்கு ராஜீவ்காந்தி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துகிறார். இதன்பின் கன்னியாகுமரி சென்று தனது பாதயாத்திரியை […]
மதுரை விமான நிலையம் வந்தடைந்த லட்சுமணன் உடலுக்கு அமைச்சர்கள், ராணுவ வீர்ரகள் மரியாதை. ஜம்மு காஷ்மீர், ரஜோரி அருகே 25 கி.மீ தொலைவில் ராணுவ முகாம் மீது பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைப் படை தாக்குதலில் 2 தீவிரவாதிகள் கொல்லப்பட்ட நிலையில், 3 இந்திய ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களில் ஒருவர் தமிழகத்தை சேர்ந்த லட்சுமணன் என்ற ராணுவ வீரர் ஆவர்.24 வயதான இவர் மதுரை மாவட்டம் T.புதுப்பட்டியை சேர்ந்தவர்.இவரது இரங்கல் தெரிவித்து […]
மதுரையில் ஜல்லிக்கட்டு அரங்கம் மற்றும் கலாச்சார பூங்கா மாஸ்டர் பிளான் ஒப்பந்தம் ரத்து. மதுரையில் ஜல்லிக்கட்டு அரங்கம் கட்டுவதற்கான மாஸ்டர் பிளான் ஒப்பந்தத்தை ரத்து செய்தது தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம். மதுரை அலங்காநல்லூர் அருகே ஜல்லிக்கட்டு அரங்கம் மற்றும் கலாச்சார பூங்கா அமைக்க தமிழக அரசு முடிவு செய்தது. இந்த நிலையில் ஜல்லிக்கட்டு அரங்கம் மற்றும் கலாச்சார பூங்கா அமைக்க வெளியிடப்பட்ட ஒப்பந்த புள்ளி ரத்து செய்யப்பட்டுள்ளது.
மதுரையில் அடுத்த மாதம் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடத்தப்பட உள்ள நிலையில், முதலமைச்சர் இன்று ஆலோசனை. மதுரையில் அடுத்த மாதம் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற உள்ளதை முன்னிட்டு முதலமைச்சர் முக ஸ்டாலின் இன்று ஆலோசனை மேற்கொள்கிறார். நிதியமைச்சர், நிதித்துறை அதிகாரிகளுடன் சென்னை தலைமை செயலகத்தில் இன்று முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்துகிறார். கொரோனாவில் இருந்து குணமடைந்த முதல்வர் சில நாட்கள் பின் இன்று தலைமை செயலகம் சென்றுள்ளார். இதனிடையே, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் […]
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவினை தமிழக அரசு புறக்கணிப்பதாக அமைச்சர் பொன்முடி அறிவிப்பு. மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் 54-வது பட்டமளிப்பு விழா நடைபெறவுள்ளது.இந்நிலையில்,மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவினை தமிழக அரசு புறக்கணிப்பதாக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார்.அரசை ஆலோசிக்காமல் பட்டமளிப்பு விழாவிற்கான தேதி முடிவு செய்யப்பட்டதால், பட்டமளிப்பு விழாவினை புறக்கணிப்பதாக அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார். மேலும்,பல்கலைக்கழகங்கள்,மாணவர்களிடையே தமிழக ஆளுநர் ஆர்என் ரவி அரசியலை புகுத்துள்ளதாக சந்தேகம் எழுந்துள்ளதாகவும், குறிப்பாக,பல்கலைக்கழகங்களில் நடைபெறும் பட்டமளிப்பு விழா […]
மதுரை:கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்றக்கோரி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுப்பட்ட அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கைதால் பரபரப்பு. மதுரையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கைது செய்யப்பட்டுள்ளார்.கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்றக்கோரி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டதால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.இது அதிமுகவினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உரிய அனுமதியின்றி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறி முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்ட 200 பேரை காவல்துறை கைது செய்துள்ளது.
நாடு முழுவதும் தற்பொழுது கொரோனா தொற்று பல்வேறு மாநிலங்களில் அதிகரித்து வருகின்றது.குறிப்பாக,தமிழகத்தை பொறுத்தவரை சென்னை,செங்கல்பட்டு,திருவள்ளூர்,காஞ்சிபுரம்,கோயம்புத்தூர் மற்றும் கன்னியாகுமரி போன்ற மாவட்டங்களில் குறிப்பாக நகர்ப்புறங்களில் அதிகரித்து வருகின்றது.இத்தெற்றானது பொதுமக்கள் பொது இடங்களில் சமூக இடைவெளியை பின்பற்றாமல் இருத்தல்,பொது இடங்களில் முகக்கவசம் அணியாமல் இருத்தல் போன்ற கொரோனா தடுப்பு வழிமுறைகளை கடைபிடிக்காமல் கவனக்குறைவாக இருப்பதால் அதிகரித்து வருகின்றது என தமிழக அரசு தெரிவித்திருந்தது. இதனால்,பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களை தவிர்த்தல்,சமூக இடைவெளி கடைப்பிடித்தல்,முகக்கவசம் சரியாக வாய் மற்றும் மூக்கை மூடியவாறு […]