மதுரை

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு : சிறப்பு பரிசுகள் என்னென்ன ? அமைச்சர் மூர்த்தி தகவல்!

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுக்கான சிறப்பு பரிசுகள் என்ன என்பது தொடர்பான தகவலை அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார். மிகவும் புகழ் பெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு இன்று நடைபெற்று வரும் நிலையில், இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்று வெற்றி பெறக்கூடிய காளை மற்றும் போட்டியாளர்களுக்கான சிறப்பு பரிசுகள் என்ன என்பது தொடர்பாக வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி அவர்கள் தெரிவித்துள்ளார். அதன் படி தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் சார்பாக சிறந்த காளைக்கு கார் பரிசாக வழங்கப்படும் எனவும், […]

Alankanallur 3 Min Read
Default Image

“தமிழக மாணவர்களின் வாய்ப்பினை பாதிக்கும் விதி…உடனே மாற்றுக” – மத்திய அமைச்சருக்கு எம்.பி சு.வெங்கடேசன் கடிதம்!

மதுரை:தமிழ்நாட்டின் 6 மாவட்டங்களில் பணியாற்ற இந்தி எதற்கு? மாணவர்களின் வாய்ப்பினை பிரசார் பாரதியின் விதியை உடனே மாற்ற வேண்டும் என்று கோரி மத்திய அமைச்சருக்கு எம்.பி சு.வெங்கடேசன் கடிதம். தமிழ்நாட்டின் 6 மாவட்டங்களில் பணியாற்ற இந்தி எதற்கு? என்றும்,தமிழ்நாடு மாணவர்களின் வாய்ப்பினை பாதிக்கும் பிரசார் பாரதியின் விதியை உடனே மாற்ற வேண்டும் எனக் கோரியும் மத்திய தகவல் ஒலிபரப்பு துறை அமைச்சர் அனுராக் சிங் தாகூர் மற்றும் பிரச்சார் பாரதி தலைமை நிர்வாக அலுவலர் சசி எஸ்.வேம்பதி […]

Anurag Thakur 6 Min Read
Default Image

தொடங்கியது பாலமேடு ஜல்லிக்கட்டு!சிறந்த வீரருக்கு பரிசு என்ன தெரியுமா?!

மதுரை:பொங்கல் பண்டிகையை முன்னிட்டு புகழ்பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி தற்போது தொடங்கியுள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நேற்று மதுரை அவனியாபுரத்தில் உலக புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது.இதில் 24 காளைகளை அடக்கி முதல் பரிசான காரை கார்த்திக் என்பவர்  தட்டிச் சென்றார். இந்நிலையில்,புகழ்பெற்ற மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி தற்போது தொடங்கியுள்ளது.தமிழக நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் மற்றும் வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்த நிலையில்,தற்போது முதல் காலியாக மகாலிங்கசுவாமி மடத்து […]

jallikattu 4 Min Read
Default Image

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நிறைவு – முதலிடம் பெற்றது யார் தெரியுமா….?

அவனியாபுரத்தில் நடத்தப்பட்ட ஜல்லிக்கட்டில் 24 காளைகளை அடக்கி கார்த்தி என்பவர் முதலிடம் பெற்றுள்ளார். தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாள் இன்று வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் மதுரை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. இந்த போட்டியில் 641 காளைகள் அவிழ்த்துவிடப்பட்டது. தொடர்ந்து கார்த்தி மற்றும் முருகனுக்கு இடையே போட்டி வலுத்து வந்த நிலையில், இறுதியாக 24 காளைகளை அடக்கி கார்த்தி முதலிடம் பிடித்துள்ளார். மேலும் 19 காளைகளை அடக்கி முருகன் இரண்டாவது […]

Avanyapuram 2 Min Read
Default Image

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு : மாடு முட்டி ஒருவர் உயிரிழப்பு …!

அவனியாபுரத்தில் நடக்கும் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை பார்க்க சென்ற பாலமுருகன் என்பவர் மாடு முட்டி உயிரிழந்துள்ளார். தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாள் இன்று வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் மதுரை மாவட்டத்தில் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய பகுதிகளில் பொங்கல் திருநாளை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இன்று அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை பார்த்துக் கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக பாலமுருகன் என்பவர் மீது மாடு முட்டி […]

Avanyapuram 2 Min Read
Default Image

#Breaking:தொடங்கியது அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி…தடுப்பூசி கட்டாயம்!

மதுரை:பொங்கல் திருநாளை முன்னிட்டு உலகப் புகழ்பெற்ற மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி,அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. பொங்கல் திருநாளை முன்னிட்டு உலகப் புகழ்பெற்ற மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி,அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளுடன் சிறிது நேரத்திற்கு முன்னதாக தொடங்கியது.இதில் 700 காளைகள்,300 வீரர்கள் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி ஏற்றதையடுத்து,மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஸ் சேகர் ,நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மற்றும் வணிகவரி மற்றும் பத்திரப்பதிவு துறை அமைச்சர் மூர்த்தி ஆகியோர் […]

Avaniyapuram 6 Min Read
Default Image

மதுரை முன்னாள் எம்.பி ஏ.ஜி.எஸ்.ராம்பாபு காலமானார்!

மதுரை:முன்னாள் எம்.பி மற்றும் தமாகா பொதுச்செயலாளரான ஏ.ஜி.எஸ்.ராம்பாபு கொரோனாவால் நேற்று காலமானார். மதுரை முன்னாள் எம்.பியும்,தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் (தமாகா) பொதுச்செயலாளருமான ஏ.ஜி.எஸ். ராம்பாபு அவர்கள் கொரோனாவால் காலமானார்.உடல்நலக்குறைவு காரணமாக மதுரை தனியார் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில்,அவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது,இந்த நிலையில்,சிகிச்சை பலனின்றி நேற்று அவர் உயிரிழந்தார். மதுரை தொகுதியில் இவர் 1989,1991 ஆம் ஆண்டுகளில் காங்கிரஸ் கட்சி சார்பாகவும்,1996 ஆம் ஆண்டு தமாகா சார்பாகவும் என 3 முறை மதுரை நாடாளுமன்ற […]

#Corona 2 Min Read
Default Image

ஜல்லிக்கட்டுக்கான முன்பதிவு தொடங்குவதில் தாமதம்!

இணையத்தில் ஆன்லைன் பதிவு தொடங்காததால் மாடுபிடி வீரர்கள், காளை உரிமையாளர்கள் ஏமாற்றம். மதுரை அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுக்கான முன்பதிவு தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. madurai.nic.in என்ற இணையதளத்தில் ஜல்லிக்கட்டு முன்பதிவுக்கான லிங்க் இணைக்கப்பட்டதால் தாமதம் ஏற்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது. மாடுபிடி வீரர்கள், காளைகளை முன்பதிவு செய்ய லிங்க் இணைக்கப்பட்டதால் ஜல்லிக்கட்டு குழுவினர் அதிருப்திக்கு உள்ளனர். அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிகட்டுக்கு இன்று மாலை 3 மணிக்கு முன்பதிவு தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், இணையத்தில் ஆன்லைன் […]

#Madurai 2 Min Read
Default Image

ஜனவரி 17ம் தேதி அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு – ஆட்சியர் அறிவிப்பு

மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி வரும் 17ஆம் தேதிக்கு மாற்றம் என மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு. தமிழகத்தில் தை திருநாளான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டிகள் கொரோனா கட்டுப்பாடுகளுடன் நடத்த அனுமதி அளித்து தமிழக அரசு முன்னதாக அரசாணையை வெளியிட்டது. இதில், ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளையும் அரசு அறிவித்திருந்தது. தமிழகத்தில் ஜனவரி 16-ஆம் தேதி முழு ஊரடங்கு என்பதால், அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டிகளை மாற்றுவது குறித்து விழா குழுவினருடன் இன்று ஆட்சியர் அனிஷ் சேகர் […]

alanganallur 4 Min Read
Default Image

#Breaking:அலங்கா நல்லூரில் ஜல்லிக்கட்டு தேதி மாற்றமா? – ஆட்சியர் ஆலோசனை!

ஜனவரி 16 ஆம் தேதி முழு ஊரடங்கு என்பதால்,ஜல்லிக்கட்டு போட்டிகளை மாற்றுவது குறித்து அலங்காநல்லூர் விழாக் கமிட்டியினருடன் இன்று மதியம் மதுரை மாவட்ட ஆட்சியர் ஆலோசனை நடத்தவுள்ளார். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் கொரோனா கட்டுப்பாடுகளுடன் நடத்த அனுமதி அளித்து தமிழக அரசு முன்னதாக அரசாணையை வெளியிட்டது.மேலும்,ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளையும் அரசு அறிவித்திருந்தது. இதனையடுத்து,மதுரை ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளை,மாடுபிடி வீரர்களுக்கான ஆன்லைன் முன்பதிவு இன்று மாலை 3 மணிக்கு தொடங்கவுள்ளது எனவும்,அதன்படி,ஜல்லிக்கட்டு போட்டியில் […]

Alanka Nallur 4 Min Read
Default Image

#Breaking:ஜல்லிக்கட்டுக்கான முன்பதிவு இன்று மாலை 3 மணிக்கு தொடக்கம் – லிங்க் இங்கே!

மதுரை:ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளை,மாடுபிடி வீரர்களுக்கான ஆன்லைன் முன்பதிவு இன்று மாலை 3 மணிக்கு தொடங்கவுள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் கொரோனா கட்டுப்பாடுகளுடன் நடத்த அனுமதி அளித்து தமிழக அரசு முன்னதாக அரசாணையை வெளியிட்டது. இந்நிலையில்,மதுரை ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளை,மாடுபிடி வீரர்களுக்கான ஆன்லைன் முன்பதிவு இன்று மாலை 3 மணிக்கு தொடங்கவுள்ளது.அதன்படி,ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் நபர்கள் https://madurai.nic.in/ என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே,ஜல்லிக்கட்டு போட்டிகளில் கடைபிடிப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளையும் […]

jallikattu 7 Min Read
Default Image

“ஜல்லிக்கட்டு போட்டிகள் நிச்சயமாக நடைபெறும்” – அமைச்சர் பி.மூர்த்தி அளித்த உறுதி!

மதுரை:கொரோனா தொற்று பரவல் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுடன், ஜல்லிக்கட்டு போட்டிகள் நிச்சயம் நடைபெறும் என்று அமைச்சர் பி.மூர்த்தி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்துவதற்கு முதல்வர் அனுமதித்துள்ளார் என்றும்,அதன்படி ஜல்லிக்கட்டு போட்டிகள் நிச்சயம் நடைபெறும் என்றும் வணிக வரி மற்றும் பத்திரப் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி உறுதி அளித்துள்ளார். இது தொடர்பாக,மதுரையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் கூறியதாவது: “ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்துவதற்கு முதல்வர் அனுமதி வழங்கியுள்ளார்.அதற்கான கட்டுப்பாடுகள் தொடர்பான அறிவிப்புகளை முதல்வர் இன்று அறிவிப்பார்.அவர் அறிவித்தவுடன் போர்க்கால அடிப்படையில் […]

#CMMKStalin 2 Min Read
Default Image

தமிழகத்துக்கு வருவதும் இல்லை, தருவதும் இல்லை – சு.வெங்கடேசன் எம்.பி

தமிழ்நாட்டுக்கு ஒரு நீதி, குஜராத்துக்கு ஒரு நீதியா? என மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் கேள்வி. இதுகுறித்து மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், தமிழகத்துக்கு வருவதும் இல்லை, தருவதும் இல்லை. குஜராத்தில் புயல் என்றால் நேரில் சென்று 1000 கோடி அறிவிக்கிறார் பிரதமர். தமிழ்நாடு பெருவெள்ளத்தால் பாதிக்கப்பட்டபோது பிரதமரோ, உள்துறை அமைச்சரோ எட்டிப் பார்க்காதது ஏன் தமிழ்நாட்டுக்கு ஒரு நீதி, குஜராத்துக்கு ஒரு நீதியா? என கேள்வி எழுப்பியுள்ளார். தமிழகத்துக்கு வருவதும் […]

#Flood 3 Min Read
Default Image

#Breaking:தமிழக மீனவர்கள் மீது தெளிக்கப்பட்ட கிருமிநாசினி – நீதிமன்றம் கடும் கண்டனம்!

மதுரை:இலங்கையில் தமிழக மீனவர்கள் மீது கிருமிநாசினி தெளிக்கப்பட்டது மனிதநேயமற்ற செயல் என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கண்டனம் தெரிவித்துள்ளது. தமிழக மீனவர்கள் 68 பேர் எல்லைத்தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையால் அண்மையில் கைது செய்யப்பட்டிருந்தார்கள். இந்நிலையில்,இலங்கையில் தமிழக மீனவர்கள் மீது கிருமிநாசினி தெளிக்கப்பட்டது மனிதநேயமற்ற செயல் என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும்,கொரோனா அச்சம் இருப்பின் கிருமிநாசினி தெளித்ததற்கு பதிலாக தமிழக மீனவர்களை தனிமைப்படுத்தி கொரோனா பரிசோதனை மேற்கொண்டிருக்கலாம் எனவும் நீதிமன்றம் கூறியுள்ளது. இதற்கிடையில்,68 […]

#Fishermen # 3 Min Read
Default Image

பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் – மதுரை மாநகராட்சி அறிவிப்பு!

மதுரை மாநகராட்சி மண்டலம் 4 அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நாளை நடைபெறுகிறது என அறிவிப்பு. மதுரை மாநகராட்சி ஆணையாளர் மரு.கா.ப.கார்த்திகேயன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், மதுரை மாநகராட்சி மண்டலம் 4 அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நாளை நடைபெறுகிறது. அதன்படி, நாளை காலை 10 மணி முதல் 12.30 மணி வரை மாநகராட்சி மண்டலம் 4 அலுவலகத்தில் ஆணையாளர் தலைமையில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெறுகிறது. இந்த குறைதீர்க்கும் முகாமில் பொதுமக்கள் குடிநீர், பாதாள சாக்கடை இணைப்பு, […]

- 3 Min Read
Default Image

மதுரை கட்டட விபத்து – ஓராண்டுக்கு முன்பே நோட்டீஸ்..!

தலைமை காவலரின் உயிரை பறித்த கட்டடத்தை ஓராண்டுக்கு முன்பே இடிக்க மதுரை மாநகராட்சி நோட்டீஸ் வழங்கியது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது. மதுரை கீழவெளி பகுதியில் நடமாடும் தேநீர் கடையில் தேநீர் விற்பனை நடைபெற்று இருந்தது. இதனால், அந்த இடத்தில் அதிகமாக கூட்டம் இருந்த நிலையில் கூட்டத்தை கலைந்து செல்லுமாறு இரவு நேர ரோந்து பணியில் இருந்த சரவணன், கண்ணன் இருவரும் கூறி விட்டு அதே பகுதியில் நின்று கொண்டிருந்தபோது அந்த பகுதியில் இருந்த முகம்மது இத்ரீஸ் என்பவருக்கு […]

மதுரை கட்டட விபத்து 4 Min Read
Default Image

பழமையான கட்டிடம் இடிந்து காவலர் சரவணன் உயிரிழப்பு!

மதுரையில் இரவுநேர ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தபோது கட்டிடம் இடிந்து விழுந்து காவலர் உயிரிழப்பு. மதுரை கீழவெளி பகுதியில் உள்ள கட்டிடத்தின் முதல் மாடி சுவர் இடிந்து விழுந்து காவலர் சரவணன் உயிரிழந்தார். இடிபாடுகளில் சிக்கி பலத்த காயமடைந்த சரவணன் உயிரிழந்தார். படுகாயம் அடைந்த மற்றொரு காவலர் கண்ணன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். விளக்குத்தூண் காவல்நிலைய காவலர்கள் இருவரும் இரவு ரோந்து பணியில் இருந்த போது பழைமையான கட்டிடம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது.

building collapsed 2 Min Read
Default Image

“அடுத்த 2 வாரங்களுக்கு தடுப்பூசி முகாம் சனிக்கிழமை இல்லை” – அமைச்சர் மா.சுப்பிரமணியன் முக்கிய அறிவிப்பு!

மதுரை:கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு அடுத்த 2 வாரங்களுக்கு சனிக்கிழமைக்கு பதிலாக ஞாயிற்றுக்கிழமைகளில் தடுப்பூசி முகாம் நடைபெறும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸை ஒழிக்கும் விதமாக தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.அந்த வகையில்,முன்னதாக ஞாயிற்றுக்கிழமையில் கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வந்த நிலையில்,மக்கள் சிலர் தடுப்பூசி போட்டுக்கொள்ள தயங்கினர். குறிப்பாக,ஞாயிற்றுக்கிழமை என்பதால் அசைவ பிரியர்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள தயக்கம் காட்டினர். இதனையடுத்து,கொரோனா தடுப்பூசி செலுத்துவதை ஊக்குவிக்கும் விதமாகவும்,தடுப்பூசி […]

coronavaccine 5 Min Read
Default Image

மதுரையில் 200 டன் ரேஷன் அரிசி, 7 லாரிகள் பறிமுதல்!

மதுரையில் குடோனியில் பதுக்கி வைத்து ரேஷன் அரிசியை கள்ள சந்தையில் விற்பனை செய்து வந்ததது அம்பலம். மதுரை கல்மேடு பகுதியில் குடோனில் பதுக்கி வைக்கப்பட்டியிருந்த 200 டன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ரேஷன் அரிசிக்காக விவசாயிகளிடம் நெல் கொள்முதல் செய்து 20 ஆலைகளுக்கு அனுப்பப்படுகிறது. அதன்படி, மதுரை கல்மேடு பகுதியில் உள்ள ஒரு நெல் அரவை ஆலைக்கு அரசு அனுமதி வழங்கியுள்ளது. இந்த நிலையில், மதுரை கல்மேடு பகுதியில் உள்ள ஆலையில் ரேஷன் அரிசி டன் கணக்கில் […]

ration rice 3 Min Read
Default Image

#Breaking:டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முறைகேடு வழக்கு – சிபிஐக்கு மாற்றம்!

மதுரை:டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முறைகேடு வழக்கின் விசாரணையை சிபிஐக்கு மாற்றி உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு நடந்த டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வை 5575 தேர்வு மையங்களில் சுமார் 16 லட்சம் பேர் எழுதினர்.அதன்பின்னர், தேர்வு முடிவு வந்தபோது ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை மையத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு எழுதியவர்கள் முதல் 100 இடங்களை பிடித்ததால் சர்ச்சையாகியது.இதனையடுத்து,எழுந்த குரூப் 4 தேர்வு முறைகேடு புகார் தொடர்பாக சிபிசிஐடி […]

#CBI 3 Min Read
Default Image