திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில், பெட்ரோல்-டீசல் மற்றும் சமையல் எரிவாயுவின் விலை உயர்வை கண்டித்து காலை 9 மணியளவில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. சமீப நாட்களாக பெட்ரோல்-டீசல் மற்றும் சமையல் எரிவாயுவின் விலை அதிகரித்து வருகிறது. மக்கள் ஆண்ராடம் பயன்படுத்தக்கூடிய இந்த பொருட்களின் விலை அதிகரிப்பு, மக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விலை உயர்வுக்கு அரசியல் பிரபலங்கள் பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், திமுக தலைவர் ஸ்டாலின் அவர்கள் இன்று கண்டன ஆர்பாட்டம் நடைபெற உள்ளதாக […]
திமுக ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளுக்கு எதிரான மூன்று பேரும் சட்டங்களும் ரத்து செய்யப்படும் என்றும் உறுதியாகக் கூறுகிறேன். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள், ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் நடைபெற்ற விவசாயிகள் மாநாட்டில் கலந்து கொண்டார். இந்த மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய அவர், புதுடெல்லியில் வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனை திசைதிருப்புவதற்காக தமிழகத்துக்கு வந்த பிரதமர் மோடி வரப்புயர நீர் உயரும் என்று ஒளவையின் பாடலைப் பாடி விவசாயிகளுக்கு செய்த பாவத்தை […]
சீமான் சரத்குமார் எங்கள் அணிக்கு வரலாம். மக்களுக்கு நல்லது நினைப்பவர்கள் யாராக இருந்தாலும் எங்களது அணிக்கு வரலாம். சென்னையை அடுத்த தாம்பரம் சாய்ராம் கல்லூரியில், கமலஹாசன் தலைமையில் மக்கள் நீதி மையம் கட்சியின் நான்காவது ஆண்டு தொடக்க விழா நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய கமலஹாசன் அவர்கள், நான் ஆரோக்கியமாக இருக்கும்போதே மக்களுக்கு சேவையாற்ற வேண்டும். அதற்கு இன்னும் 5 வருடங்கள் உண்டு. இப்போது வயது 60 எனக்கு. சக்கர நாற்காலியில் வந்து யாரையும் […]
ரஜிகாந்த் – கமல்ஹாசன் சந்திப்பால், அரசியலில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்று விசிக தலைவர் தொல் திருமாவளவன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தல் பரப்புரை நிகழ்ச்சியில் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன், ரஜிகாந்த் – கமல்ஹாசன் சந்திப்பால், அரசியலில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது என கூறிய அவர், ஒருபுறம் அவ்வையார், மறுபுறம் திருக்குறள் படிக்கிறார், இன்னொரு பக்கம் தமிழர்களின் உரிமை பறிக்கப்படுகிறது என கூறியுள்ளார். மேலும், சிபிஎஸ்இ 8ஆம் வகுப்பு பாடப் புத்தகத்தில் […]
டெண்டர்கள் மீது ஆர்வம் காட்டாத ஒப்பந்ததாரர்களுக்கு அமைச்சர்களே போன் செய்து டெண்டர்களை எடுக்க சொல்லி கட்டாயப்படுத்துவதாக தகவல் வந்து கொண்டிருக்கிறது என ஸ்டாலின் தெரிவித்தார். ஈரோடு மாவட்டத்திலுள்ள பெருந்துறையில் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற பெயரில் தேர்தல் பரப்புரையில் பேசிய திமுக தலைவர் ஸ்டாலின், நான்காண்டு காலத்தில் எத்தனை பேருக்கு வேலை கொடுத்தீர்கள், காலியான அரசு பணியிடங்கள் நிரப்பட்டதா..? பொதுத்துறை நிறுவனங்களில் இருக்கக்கூடிய காலி பணியிடங்களை நிரப்பட்டதா..? தமிழகத்தில் மூடப்பட்ட நிறுவனங்களில் திறக்க என்ன முயற்சி மேற்கொள்ளப்பட்டது. கடந்த […]
அதிமுக மக்களின் எண்ணங்களை பிரதிபலிக்கும் கட்சியாக உள்ளது என கரூரில் முதல்வர் பழனிசாமி பரப்புரையில் தெரிவித்துள்ளார். கரூரில் அதிமுக சார்பில் வெற்றிநடை போடும் தமிழகம் என்ற தேர்தல் பரப்புரையில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பொய் பேசியே ஆட்சிக்கு வந்த திமுகவுக்கு இந்தமுறை அது எடுபடாது என விமர்சித்துள்ளார். மக்களவை தேர்தலின்போது எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் வாங்கிய மனு என்ன ஆனது? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். அதிமுக மீது எவ்வளவு குற்றசாட்டு கூறினாலும் அதை பொய் என நிரூபிப்போம் என்றும் […]
வாருங்கள் பணியாற்றுவோம் என நடிகர் ரஜினிக்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் மறைமுகமாக அழைப்பு விடுத்துள்ளார். சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் ரஜினிகாந்துடன் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் நேற்று சந்தித்தார்.ரஜினிகாந்த் இல்லத்திற்கு சென்று உடல்நலம் குறித்து நலம் விசாரித்ததாகவும், வரும் சட்டமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடும் நிலையில் முக்கிய ஆலோசனை மேற்கொண்டதாகவும் தகவல் வெளியாகியது. சென்னை மேற்கு தாம்பரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெறும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் […]
இன்று வரை 7 முறை பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி உள்ளேன் அனுமதி கிடைக்கவில்லை என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். சென்னை தாம்பரத்தில் இருக்கும் தனியார் பொறியியல் கல்லூரியில் உள்ள அரங்கத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் 4ம் ஆண்டு தொடக்க விழாவினை நடத்திக் கொண்டிருக்கிறார். கூட்டத்தில் பேசிய கமலஹாசன், இன்று வரை 7 முறை பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி உள்ளேன் அனுமதி கிடைக்கவில்லை. பசுமாட்டுக்கு கிடைக்கும் மரியாதை கூட தமிழனுக்கு கிடைக்கவில்லை. பிரதமரை சந்தித்து காவி […]
சிபிஎஸ்இ எட்டாம் வகுப்பு பாடப்புத்தகத்தில் திருவள்ளுவர் தலையில் முடி இல்லாமல் குடுமி வைத்து காவி உடை அணிந்து கோவில் குருக்கள் போன்று சித்தரிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், CBSE எட்டாம் வகுப்பு இந்தி பாடப்புத்தகத்தில் ஒரு குறிப்பிட்ட சாதிய அடையாளத்துடன் திருவள்ளுவரை வரைந்திருப்பது கண்டனத்திற்குரியது. ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என உலகப் […]
அதிமுக – பாஜக கூட்டணி பெரும்பான்மையுடன் வெற்றி பெரும் என்று பாதுகாப்புதுறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். இன்று தமிழகம் வந்துள்ள மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சேலத்தில் நடைபெற்று வரும் பாஜக இளைஞரணி மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது, வெற்றி வேல்.. வீர வேல்.. முழக்கத்துடன் உரையை தொடங்கிய அமைச்சர், சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணி பெரும்பான்மையுடன் வெற்றி பெறும் என்றும் பெரும்பான்மை பலத்துடன் பேரவைக்குள் நுழைய வேண்டும் […]
தட்டாஞ்சாவடி தொகுதிக்கு எதுவும் செய்யமுடியாத சூழலில் எப்படி மக்களிடம் சென்று வாக்குக் கேட்க முடியும் என திமுக எம்எல்ஏ வெங்கடேசன் தெரிவித்தார். புதுச்சேரி சட்டப்பேரவையில் நாளை முதல்வர் நாராயணசாமி நம்பிக்கை வாக்கு கோர உள்ள நிலையில் அடுத்தடுத்து எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்து வருகின்றனர். சற்று நேரத்திற்கு முன் காங்கிரஸ் எம்எல்ஏ லட்சுமி நாராயணன் ராஜினாமா செய்த நிலையில் தற்போது திமுக எம்எல்ஏ வெங்கடேசன் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். திமுக எம்எல்ஏ வெங்கடேசன் ராஜினாமா செய்ததால் காங்கிரஸ் […]
புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி திமுக எம்எல்ஏ வெங்கடேசன் தனது பதவியை ராஜினாமா செய்தார். புதுச்சேரியில் காங்கிரஸ் அரசுக்கு 14 எம்எல்ஏக்கள் ஆதரவும், எதிர் கூட்டணிக்கு 14 எம்எல்ஏக்கள் ஆதரவு இருந்த நிலையில், சற்றுமுன் காங்கிரஸ் எம்எல்ஏ லட்சுமி நாராயணன் தனது பதவியை ராஜினாமா செய்ததை அடுத்து, தற்போது புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி திமுக எம்எல்ஏ வெங்கடேசன் ராஜினாமா செய்துள்ளார். தனது ராஜினாமா கடிதத்தை சபாநாயகர் சிவக்கொழுந்துவிடம் அளித்துள்ளார். புதுச்சேரி சட்டப்பேரவையில் 3 திமுக எம்எல்ஏக்கள் உள்ள நிலையில், […]
புதுச்சேரியில் மேலும் ஒரு காங்கிரஸ் எம்.எல்.ஏ ராஜினாமா செய்துள்ளார். புதுச்சேரி மாநில காங்கிரஸ் அரசுக்கு 14 எம்எல்ஏக்கள் ஆதரவும், எதிர் கூட்டணிக்கு 14 எம்எல்ஏக்கள் ஆதரவும் உள்ளது. இந்நிலையில், புதுச்சேரி காங்கிரஸ் எம்எல்ஏ லட்சுமி நாராயணன் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். பெரும்பான்மையை நிரூபிக்க நாளை சட்டப்பேரவை கூடவுள்ள நிலையில் லட்சுமி நாராயணன் ராஜினாமா செய்துள்ளார். லட்சுமி நாராயணன் ராஜினாமா செய்தால் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசில் பெரும்பான்மை இழக்கும் என கூறப்படுகிறது. சபாநாயகர் சிவக்கொழுந்துவிடம் தனது ராஜினாமா […]
சிபிஎஸ்இ பாடநூலில் வெளியிடப்பட்டுள்ள திருவள்ளுவர் படத்தை உடனே அகற்ற வேண்டும் என வைகோ தெரிவித்துள்ளார். சிபிஎஸ்இ எட்டாம் வகுப்பு பாடப்புத்தகத்தில் திருவள்ளுவர் தலையில் முடி இல்லாமல் குடுமி வைத்து காவி உடை அணிந்து கோவில் குருக்கள் போன்று சித்தரிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த புகைப்படம் தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். தமிழர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, மத்திய அரசு உடனடியாக சி.பி.எஸ்.இ. பாட நூலில் […]
புதுச்சேரியில் தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில், வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட ஸ்கூட்டரை மீட்க சென்ற பெண், வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டார். அவரை தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. புதுச்சேரியில் தொடர்ந்து 6 மணி நேரமாக கனமழை பெய்து வருகிறது. இதனால் அம்மாநிலத்தில் பல இடங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில், புதுச்சேரி மேட்டுப்பாளையம் அருகே உள்ள வாய்க்காலின் அருகே உள்ள வீட்டில் ஹசீனா பேகம் என்ற பெண் ஒருவர் வசித்து வந்தார். தற்பொழுது புதுச்சேரியில் பலத்த மழை […]
தொடர் கனமழை காரணமாக புதுச்சேரியில் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை தொடர் கனமழை காரணமாக அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் உள்ள 1 முதல் 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நாளை விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளிக்கல்வித் துறை இயக்நரின் அறிவுறுத்தல் படி புதுச்சேரியில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. புதுச்சேரியில் இன்று அதிகாலை முதல் 19 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. இந்த மழையின் காரணமாக பொதுமக்கள் வெளியே வர முடியாமல் சிக்கித் தவித்து வருகின்றனர். கனமழை காரணமாக […]
திருப்பூரில் கடந்த ஐந்து ஆண்டுகளாக பெரிய நிறுவனமாக இருந்தாலும் சரி, சிறிய நிறுவனமாக இருந்தாலும் சரி அவை செயல்பட முடியாமல் திணறி வருகிறது. திருப்பூர் வடக்கு மற்றும் மத்திய மாவட்ட மக்களை மத்தியில் பேசிய, திமுக தலைவர் மு.க ஸ்டாலின், ஆட்சி முடியப்போகிறது கடைசி நேரத்தில் முதல்வர் கல்வெட்டுகளைதிறந்து வைத்துக் கொண்டிருக்கிறார். ஆட்சியில் தொடங்கும் போது நல்ல திட்டங்களை தொடங்கி வைக்க வேண்டும், ஆட்சி முடிவதற்குள் திட்டங்களை திறந்து வைக்க வேண்டும். ஆனால் முதல்வர் பின்னாடி நடந்து […]
முதல்வராக பதவி வகித்து வரும் எடப்பாடி பழனிசாமி சிறப்பான ஆட்சியை நடத்தி வருகிறார் என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டை விராலிமலை வட்டம், குன்னத்தூர் ஊராட்சியில் நடைபெற்ற விழாவில் ரூ.6,941 கோடி மதிப்பில் காவிரி – தெற்கு வெள்ளாறு – வைகை – குண்டாறு நதிகள் இணைப்புத் திட்டத்தின் முதல் கட்டத்திற்கு முதலமைச்சர் பழனிசாமி இன்று அடிக்கல் நாட்டினார். இந்த விழாவுக்கு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார். பின்னர் பேசிய துணை முதல்வர், முதல்வராக […]
தென்காசி மாவட்டத்தில் காங்கிரஸ் சார்பில் சட்டமன்ற தேர்தல் தொடர்பான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக தமிழக மாநில காங்கிரஸ் தலைவர் அழகிரி கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர் மன்மோகன்சிங் ஆட்சி காலத்தில் கச்சா எண்ணெய் 108 டாலர் என்ற போதிலும் ரூ.71 பெட்ரோல் வழங்கப்பட்டது. ஆனால் தற்போது 54 டாலர் ஆனால் 100 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க மோடி அரசிடம் எந்த திட்டமும் இல்லை. விவசாயிகளின் தொடர் போராட்டம், […]