தென்கிழக்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதால், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆராய்ச்சி மையம் கூறியுள்ளது. நீலகிரி, தேனி, நெல்லை போன்ற மலையோர பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக கூறியுள்ளார்.
கடந்த 2 தினங்களாக தமிழகத்தில் பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. இன்னும் சில நாட்களுக்கு மழை இருக்கும் என்றும் 7-ந் தேதி ஞாயிற்றுக்கிழமை பலத்த மழை இருக்கும் என்றும் வானிலை மையத்தால், ரெட் அலார்ட் எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது. மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவேண்டாம் என கேட்டு கொள்ளப்பட்டு உள்ளது இந்த நிலையில் கன்னியாகுமரியில் இருந்து ஆழ்கடலுக்கு சென்ற ஆயிரம் மீனவர்கள் இன்னும் கரை திரும்பவில்லை . புயல் குறித்து அரசு விடுத்த எச்சரிக்கை […]
தஞ்சை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை பெய்தது. தஞ்சை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காலை முதல் தொடங்கி இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இதில் தஞ்சை, நாஞ்சிக்கோட்டை, பள்ளியக்ரஹாரம், கண்டியூர் உள்ளிட்ட பகுதிகளில் பெய்த மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் வெள்ளநீர் தேங்கியதுள்ளது. கடந்த இந்நிலையில் சில வாரங்களாகவே வெயில் வாட்டி வந்த நிலையில் தற்போது பெய்த மழை பொதுமக்களையும் விவசாயிகளையும் மகிழ்ச்சிக்குள்ளாக்கியது. DINASUVADU
தென் தமிழகத்தில் அநேக இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து தெரிவித்த சென்னை வானிலை ஆய்வு மையம் தென் தமிழகத்தில் அநேக இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளது என்றும் உள் தமிழகத்தில், ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. மேலும் அரபிக்கடல் பகுதியில் இருந்து உள் தமிழகம் வழியாக இலங்கை கடற்கரை வரை, வளிமண்டலத்தில் காற்றழுத்த தாழ்வு நிலை நிலவிவருகிறது. இதன் காரணமாகவும் வெப்பச்சலனம் […]
மதுரை, சேலம் மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ததுள்ளது இதனால் மக்கள்,விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். நேற்று தமிழகத்தில் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்தநிலையில் மதுரையில் நேற்று இரவு நேரத்தில் பலத்த இடியுடன் கூடிய மழை பெய்தது. மேலும் சேலம் மாவட்டத்தில் ஆத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் நல்ல மழை பெய்தது. 2 மாவட்டங்களை தொடர்ந்து விழுப்புரம் மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் மின்னல் தாக்கி மூன்று பெண்கள் உட்பட […]
தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து தெரிவித்த வானிலை மையம் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இன்று காலை 8 1/2 மணியுடன் முடிந்த 24மணி நேரத்தில் அதிக அளவாகக் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் 8சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. மேலும் கோவையில் […]
மத்திய வாங்க கடல் பகுதியில் நிலவி வந்த வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நேற்று குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வெளுப்பெற்றது. இந்நிலையில் இந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு நிலையாக மாறும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. வங்கக்கடல் சீற்றத்துடன் காணப்படும் என்றும் வானிலை மையம் கூறியுள்ளது. இதன் காரணமாக மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது.
மத்திய வங்கக்கடல் பகுதியில் தற்போது வளிமண்டல மேல் அடுக்கில் ஒரு சுழற்சி நிலவுகிறது. அடுத்த 2 நாட்களுக்கு மழைபெய்ய வாய்ப்புள்ளதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தமிழகம், புதுச்சேரியில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழை பெய்துள்ளது. ஓரிரு இடங்களில் கனமழை பெய்தது. இந்த நிலையில் நேற்று பகலில் வெயிலின் தாக்கம் அதிகமாகவே காணப்பட்டது. பிஇருந்தாலும், நேற்று இரவு சென்னையில் திடீரென மலை பெய்ய தொடங்கியது. கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வந்த நிலையில் நேற்று […]
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய இவர், மத்திய வங்கக்கடல் பகுதியில் வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. அடுத்த 24 மணி நேரத்தில் மத்திய வங்கக்கடல் பகுதியில் குறைந்த அகாற்றழுத்த தாழ்வு நிலை உருவாக உள்ளது. வட தமிழகத்தில் அநேக இடங்களிலும் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையில் இடைவெளி விட்டு அவ்வப்போது மிதமான […]
பிலிப்பைன்ஸை கடுமையாக தாக்கிய அதிதீவிர மாங்குட் சூறாவளி சீனாவின் மிக அதிக மக்கள்தொகை கொண்ட குவாங்டாங் மாகாணத்தில் கரையை கடந்ததுடன் அங்கு கடும் சேதத்தை விளைவித்து வருகிறது. அந்த மாகாணத்தில் சுமார் 162 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசி வருவதுடன், கடும் மழையும் பொழிந்து வருகிறது.சுமார் 2.45 மில்லியன் மக்கள் வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.சீனாவின் தெற்கு கடலோர நகரமான ஜியாங்மென்னுக்கு அருகே மாங்குட் சூறாவளி உள்ளூர் நேரப்படி மதிய வேளையில் கரையை கடந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் காரணமாக குவாங்டாங் […]
சென்னை: மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் இன்று(செப்.,17) மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை மையம் தெரிவித்துள்ளதாவது: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்றும் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில இடங்களில் மழை பெய்யும். இவ்வாறு தெரிவித்துள்ளது. DINASUVADU
மீன் பிடிக்க மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கடல் சீற்றத்துடன் காணப்படும் என்பதால் தமிழகம் மற்றும் புதுச்சேரி மீனவர்கள் அடுத்த 24 மணி நேரத்திற்கு அந்தமான் நிக்கோபார் பகுதிகளுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. DINASUVADU
தமிழகத்தில் வருகிற அக்டோபரில் வடகிழக்கு பருவமழை பெய்வது வழக்கம். இந்த நிலையில், சென்னையில் பல்வேறு இடங்களில் இன்று மழை பெய்துள்ளது. சென்னையில் எழும்பூர், புரசைவாக்கம், தி.நகர், கோடம்பாக்கம், கீழ்ப்பாக்கம், ஈக்காட்டுத்தாங்கல், கே.கே. நகர், வில்லிவாக்கம், திருவல்லிக்கேணி உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்துள்ளது. இதேபோன்று கோயம்பேடு, வளசரவாக்கம், வானகரம், ஐயப்பன்தாங்கல், காட்டுப்பாக்கம், கொளத்தூர், அமைந்தகரை, செங்குன்றம், பூவிருந்தவல்லி, அண்ணாநகர் ஆகிய பகுதிகளிலும் மழை பெய்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் 3 மணி நேரத்திற்கு மழை நீடிக்கும் என தகவல் […]
காரைக்குடி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் மிதமான மலை பெய்து வருகிறது. மக்கள் மழையால் மகிழ்ச்சி அடைந்தனர். வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் சில இடங்களில் இடியுடன் கூடிய மலைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் சில மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்ததிற்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியின் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் சில மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. […]
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மாலை மற்றும் இரவு நேரங்களில் கனமழை பெய்யும் என்றும் கடந்த 24 மணி நேரத்தில் பெரம்பலூர் மாவட்டம் செட்டிக் குளத்தில் 10 செ.மீ. மழை பெய்துள்ளது என்றும் தெரிவித்துள்ளது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணிநேரத்தில் மலைக்கு வாய்ப்பு என வானிலை மையம் தெரிவித்துள்ளது. காற்றின் மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக இடியுடன் கூடிய மழை பெய்யும் எனவும், ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மேற்கு திசையில் தெற்கு கார்நாடகா முதல் தெற்கு தமிழகம் வரை குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகியுள்ளது. மேலும், கிழக்குத் திசையில், தெலுங்கானா முதல் கன்னியாகுமரி வரை மற்றோரு காற்றழுத்தத் தாழ்வுநிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு பரவலாக மழை பெய்ய வாய்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
லக்னோ, பருவமழை காரணமாக இந்தியாவில் பல பகுதியில் மலை பொய்து வருகின்றது.இதில் பல மாநிலங்கள் வெள்ளத்தில் மிதந்தன.குறிப்பாக கேரளா மிகப்பெரிய பேரழிவை சந்தித்தது.இந்நிலையில் ஆந்திரா மாநிலம் ,டெல்லி , நாகலாந்து என மழை தொடர்ந்து பெய்தது. இந்நிலையில் தற்போது உத்தரபிரதேசத்தில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருகின்றது.இதனால் மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன. குறிப்பாக ஷாஜகான்பூர், சீதாப்பூர், அமேதி போன்ற மாவட்டங்களில் கடந்த சனிக்கிழமை முதல் இடி, மின்னலுடன் கனமழை கொட்டி தீர்த்து […]
கொஹிமா, நாகாலாந்து மாநிலத்தில் பெய்த கனமழையால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து பிரதமர் மோடி கேட்டறிந்தார். தென்மேற்கு பருவமழை காலமான ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான 4 மாதங்களில் பெய்ய வேண்டிய மழை, நாடு முழுவதும் சில வாரங்களின் சில நாட்களில் பெய்துள்ளது என்றும், கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு இந்த ஆண்டின் ஆகஸ்ட் மாதத்தில் மழை பெய்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்தநிலையில், கேரளாவை தொடர்ந்து நாகாலாந்திலும் கன மழை பொய்த்து மழை காரணமாக வெள்ளம் […]