நடிகை கௌதமி அளித்த புகாரில் 6 பேர் கைது.!

நடிகை கௌதமி அளித்த நில அபகரிப்பு புகாரில் 6 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர். தனக்குச் சொந்தமான பல கோடி ரூபாய் மதிப்பிலான நிலத்தை, கோட்டையூர் அழகப்பன்

Actress Gowthami Case

நடிகை கௌதமி அளித்த நில அபகரிப்பு புகாரில் 6 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர். தனக்குச் சொந்தமான பல கோடி ரூபாய் மதிப்பிலான நிலத்தை, கோட்டையூர் அழகப்பன் மற்றும் அவரது குடும்பத்தினர் மோசடியாக விற்றுவிட்டதாக, நடிகை கௌதமி சென்னை மாநகர ஆணையரிடம் புகார் அளித்திருந்தார்.

தற்போது, நடிகை கௌதமி அளித்த நில மோசடி புகாரில் முக்கிய நபரான அழகப்பன், அவரது மனைவி நாச்சியம்மாள், சதீஷ்குமார் உட்பட 6 பேரை மத்திய குற்றப்பிரிவு போலீசார்கைது செய்தனர். முன்னதாக நடிகை கவுதமி தொடர்ந்த மோசடி வழக்கில், தயாரிப்பாளர் அழகப்பன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு முன்ஜாமீன் வழங்க சென்னை உயர்நீதிமன்றம் சமீபத்தில் மறுத்துவிட்டது.

ஊழலுக்கு சகிப்புத்தன்மை இருக்கக்கூடாது! பொன்முடியின் தண்டனையை வரவேற்ற குஷ்பு!

இந்நிலையில், நடிகை கௌதமி அளித்த நில மோசடி புகாரில் முக்கிய நபராக தேடப்பட்டு வந்த அழகப்பன், அவரது மனைவி நாச்சியம்மாள், சதீஷ் குமார் உட்பட 6 பேர் கேரளாவில் பதுங்கியிருந்த நிலையில், இன்று கேரளாவின் திருச்சூரில் வைத்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.