சென்னை :ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கிடையே இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில் அர்ஜுன், த்ரிஷா, ரெஜினா என பலர் நடித்துள்ள அஜித்தின் “விடாமுயற்சி” திரைப்படம் உலகம் முழுவதும் இன்று திரையரங்குகளில் வெளியாகிறது.
தமிழகத்தில் காலை 9 மணி அளவில் இப்படம் வெளியானது. துணிவு படத்திற்கு பின் 2 ஆண்டுகள் கழித்து இப்படம் வெளியானதை தொடர்ந்து, தமிழ்நாடு முழுவதும் ரசிகர்கள் கொண்டாடினர். இன்று வெளியான இப்படத்திற்கு நேற்றிரவு முதலே அஜித் ரசிகர்கள் கொண்டாட்டத்தை தொடங்கினர்.
unknown nodeநீண்டகால காத்திருப்புக்கு பின், இப்படம் வெளியாவதால் அஜித் ரசிகர்கள் பண்டிகை மோடுக்கு சென்று வைப் செய்து வருகின்றனர். அந்த வகையில், சென்னையில் ‘விடாமுயற்சி’ வெளியாகும் ஒரு தியேட்டர் வாசலில் வாணவேடிக்கை பட்டாசுகளை வைத்து கொளுத்தி கொண்டாடினர்.
unknown nodeunknown nodeதமிழ்நாட்ற்கு அதிகாலை காட்சிக்கு அனுமதி கிடையாது என்றாலும், இன்றும், நாளை மறுநாளும் படத்திற்கு காலை 9 மணி முதல் இரவு 2 மணி வரை 5 காட்சிகள் திரையிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால், கேரளாவில் இப்படம் அதிகாலையில் வெளியாகியது.
ரசிகர்கள் படத்தை பார்த்துவிட்டு, படத்தின் தொடக்கம் முதல் இறுதி வரை டென்ஷனும், சுவாரசியமும் கலந்து திரைக்கதையை அமைத்துள்ளதாகவும், இதுவரை வெளியான அஜித் படங்களிலேயே இது மிகவும் வித்தியாசமானது எனவும் சொல்கிறார்கள்.
ரசிகர்களின் விமர்சனம்
கேரளா மாநிலத்தில் அஜித்தின் ‘விடாமுயற்சி’ திரைப்படத்தின் FDFS இன்று அதிகாலை வெளியான நிலையில், படம் எப்படி இருக்கிறது என ரசிகர்கள் கூறி வருகிறார்கள். மகிழ்திருமேனியின் வழக்கமான ஃபார்முலாவுடன் மாஸும், ரொமான்ஸும் கலந்து விஷுவல் ட்ரீட்டாக படம் அமைந்திருப்பதாக ரசிகர்கள் கூறுகின்றனர். மேலும், அஜித்தின் லுக்கும், த்ரிஷாவின் அழகும் படத்துக்கு ப்ளஸ் பாயிண்ட் எனவும் அவர்கள் சொல்கிறார்கள்.
