ஐதராபாத் :தெலுங்கு சினிமாவின் பிரபல ஜோடியான ராஷ்மிகா மந்தானா மற்றும் விஜய் தேவரகொண்டா ஆகியோருக்கு இடையேயான உறவு இப்போது அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்கிற தகவல் தான் சினிமா வட்டாரத்தில் ட்ரென்டிங் டாப்பிக்காக மாறியுள்ளது. அதற்கு முக்கியமான காரணமே நேற்று (அக்டோபர் 3, 2025) விஜய் தேவரகொண்டாவின் ஐதராபாத்தில் உள்ள தனிப்பட்ட இல்லத்தில் ரகசியமாக நடைபெற்ற திருமண நிச்சயதார்த்தத்தில் இருவரும் ஜீவனாம்சல் மாலைகளைப் பரிமாற்றியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
விஜயின் அணி உறுப்பினர்கள் இந்த செய்தியை உறுதிப்படுத்தியுள்ளனர் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் மற்றும் சில நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். தெலுங்கு மீடியா ஊடகங்கள் தெரிவிப்பதன்படி, நிகழ்ச்சியில் யாரும் புகைப்படங்கள் எடுக்கவில்லை, ரசிகர்களுக்கு வெளியாகும் வகையில் எந்த அறிவிப்பும் இல்லை. இருப்பினும், நம்பத்தக்க சினிமா வட்டாரதத்தில் இந்த தகவல் உண்மை என கூறப்பட்டு தீ போல வைரலாகி வருகிறது.
ஏற்கனவே 2018 முதல் இருவரும் டேட்டிங் செய்து வருவதாக வதந்திகள் பரவிய நிலையில், இப்போது அது உண்மையாக உறுதியானது. ‘டீஜம்’ என்று ரசிகர்களால் அழைக்கப்படும் இந்த ஜோடி, கீதாகோவிந்தம் போன்ற படங்களில் ஒன்றாக நடித்து ரசிகர்களின் மனதில் இடம்பிடித்துள்ளனர்.இருவரும் தொடர்ந்து ஒருவருக்கொருவர் தொழில்முறை ரீதியாக ஆதரவளித்து வந்தனர்.
அடுத்த ஆண்டு பிப்ரவரி 2026 இல் இருவரும் திருமணம் செய்துகொள்ள திட்டமிட்டுள்ளனர். இந்த திருமணம் மிகவும் சிறப்பான மற்றும் தனிப்பட்ட வகையில் நடைபெறும் என்று தெரிகிறது. தெலுங்கு சினிமா ரசிகர்களிடையே இந்த செய்தி பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது, அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
