நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள எதற்கும் துணிந்தவன் திரைப்படம் வரும் 10-ஆம் தேதி வெளியாகிறது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு இசையமைப்பாளர் டி.இமான் இசையமைத்துள்ளார்.
இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக இயக்குனர் பாலா இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்திற்காக இயக்குனர் பாலாவிடம் நடிகர் சூர்யா 3 மாதம் கால்ஷீட் கொடுத்துள்ளதா கவும், அதற்கு மேல் 1 நாள் ஆக கூடாது என உறுதியாக கூறியுள்ளாராம்.
unknown nodeஇதனால், இயக்குனர் பாலா வேகமாக படத்தை முடிக்கவேண்டும் என படத்திற்கான வேலைகளை விறு விறுப்பாக ஆரம்பித்துள்ளாராம். இந்நிலையில். தற்போது கிடைத்த தகவல் என்னவென்றால் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு வருகின்ற 18-ஆம் தேதி மதுரையில் வைத்து தொடங்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
unknown nodeஏற்கனவே சூர்யாவை வைத்து இயக்கிய நந்தா, பிதாமகன் ஆகிய திரைப்படங்கள் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றதால் இந்த படத்தின் மீதும் மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவியுள்ளது. விரைவில் படத்திற்கான மற்ற அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.