இயக்குனர் மணிரத்தனம் இயக்கத்தில் பிரமாண்ட பட்ஜெட்டில் இரண்டு பாகங்களாக உருவாகும் திரைப்படம் பொன்னியின் செல்வன். இந்த படத்தில் கார்த்தி, விக்ரம், திரிஷா, ஐஸ்வர்யாராய் ஜெயம் ரவி , விக்ரம் பிரபு, சரத்குமார், பார்த்திபன், பிரபு உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
unknown nodeமெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் மற்றும் லைகா நிறுவனம் இணைந்து இந்த திரைப்படத்தை மிகப்பெரிய பட்ஜெட்டில் தயாரித்துள்ளது படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இரண்டு பாகங்களாக இந்த படம் வெளியாகவுள்ளது.
unknown nodeஇதில் முதல் வரும் பாகம் செப்டம்பர் 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த படத்தை பார்க்க ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களும் ஆவலுடன் காத்துள்ளனர்.
unknown nodeஇந்த நிலையில் பொன்னியின் செல்வன் படம் குறித்து சமீபத்தில் பேசிய மணிரத்தினத்தின் உதவி இயக்குனரும் இறுதி சுற்று சூரரைப்போற்று ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் சுதா கொங்கரா சமீபத்தில் கூறியது “பொன்னியின் செல்வன் படம் பார்த்தவர்கள் பலர் என்னிடம் படம் பிளாக்பஸ்டர் ஆகும் என சொல்கிறார்கள். நான் இன்னும் படம் பார்க்கவில்லை விரைவில் படத்தை பார்ப்பேன்” என தெரிவித்துள்ளார்.