இப்படத்திற்காக இயக்குனர் பாலாவிடம் நடிகர் சூர்யா 3 மாதம் கால்ஷீட் கொடுத்துள்ளதாகவும், அதற்கு மேல் 1 நாள் ஆக கூடாது என உறுதியாக கூறியுள்ளாராம். இதனால் இயக்குனர் பாலா வேகமாக படத்தை முடிக்கவேண்டும் என படத்திற்கான வேலைகளை விறு விறுப்பாக ஆரம்பித்துள்ளாராம்.
unknown nodeஇந்த மாதம் படத்தின் படப்பிடிப்பு மதுரையில் வைத்து தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், தற்போது இந்த படத்தில் நடிகர் சூர்யா நடிக்கும் கதாபாத்திரம் குறித்த தகவல் கிடைத்துள்ளது. அதாவது இந்த படத்தில் சூர்யா காது கேட்காத, வாய்பேச முடியாத மாற்றுத்திறனாளி கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது.
unknown nodeமாஸ் ஹீரோவாக தனது ரசிகர்களுக்கு பிடித்தவாறு வசனம் பேசி நடிக்கும் சூர்யா இப்படத்தில் வசனமே பேசாமல் நடித்தால் ரசிகர்கள் எப்படி ஏற்றுக்கொள்வார்கள்.. என்பதை படம் வெளியான பிறகு பார்க்கலாம். நீண்ட நாட்களுக்கு பிறகு இணையும் சூர்யா – பாலா கூட்டணி இணைந்துள்ளதால் நந்தா, பிதாமகன் போன்ற அற்புதமான கதையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.