கஜா புயல் பாதிப்பு ...!தமிழக அரசு 29ம் தேதிக்குள் அறிக்கைதாக்கல் செய்ய  ஆணை பிறப்பித்தது சென்னை உயர்நீதிமன்றம்...!

கஜா புயல் தொடர்பாக தமிழக அரசு 29ம் தேதிக்குள் அறிக்கைதாக்கல் செய்ய  ஆணை பிறப்பித்துள்ளது சென்னை உயர்நீதிமன்றம்.

கஜா புயல் தொடர்பாக தமிழக அரசு 29ம் தேதிக்குள் அறிக்கைதாக்கல் செய்ய  ஆணை பிறப்பித்துள்ளது சென்னை உயர்நீதிமன்றம்.

தமிழகத்தை மிரட்டிய கஜா புயலால் ஏராளமான மக்கள் தங்கள் உடைமைகளையும், வீடுகளையும் இழந்து தவித்து வருகின்றனர்.மேலும் நாகை,தஞ்சை ,திருவாரூர் , புதுக்கோட்டை மாவட்டத்தில் கடும் சேதத்தை ஏற்படுத்தியது.

இதில் மக்கள் அடிப்படை தேவையின்றி தத்தளித்து வருகின்றனர்.மேலும் பல தினங்களாக மின்சாரம் இன்றியும் சுகாதார சீர்கேடுடன் அங்கு தத்தளித்து வரும் மக்கள் கடும் கோபத்தை ஆட்சியளர்கள் மத்தியில் வெளிகாட்டி வருகின்றனர்.

மேலும் அடிப்படைவசதியின்றி சிரமப்படுவதாக புலம்புகின்றனர்.இந்நிலையில் புயலால் 50 பேர் உயிரிழந்துள்ளனர். ஏராளமானோர் வீடுகளை இழந்துள்ளனர். ஏராளமான தென்னை மரங்கள் அடியோடு சாய்ந்துள்ளது.

unknown node

இந்நிலையில் புயல்பாதித்த மாவட்டங்களை தேசிய பேரிடராக அறிவிக்கக்கோரியும் ,அரசு அளிக்கும் நிவாரணம் முழுமையாகி மக்களை சென்றடையவில்லை என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம்,  புயல் நிவாரணப் பணிகள் தொடர்பாக விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு பிறப்பித்துள்ளது.அதேபோல்  தமிழக அரசு 29ம் தேதிக்குள் அறிக்கைதாக்கல் செய்ய  ஆணை பிறப்பித்துள்ளது சென்னை உயர்நீதிமன்றம்.