பிரிட்டிஷ் இராணுவ வீரர் வில்லியம் பெண்டிங் பிரபு பிறந்த தினம் வரலாற்றில் இன்று கொண்டாடப்படுகிறது.
1874 ஆம் ஆண்டு செப்டம்பர் 14-ம் தேதி இங்கிலாந்தில் பிறந்தவர் தான் ராணுவ வீரர் வில்லியம் பெண் டிங் பிரபு. இவர் ஒரு போர் வீரராக தனது வாழ்க்கையை தொடங்கி, அதன் பின்பு தனது 22வது வயதில் நாடாளுமன்றத்தின் உறுப்பினராகினார். அதன் பின்பு 1803ஆம் ஆண்டு சென்னையின் ஆளுநராக நியமிக்கப்பட்ட இவர், சர் தாமஸ் மன்றோ கொண்டு வந்த பல்வேறு வருவாய் சீர்திருத்தங்களை ஆதரித்தார்.
மேலும் இந்திய மக்களின் நலனை பேணுவதே இந்தியாவை ஆளும் பிரிட்டிஷ் நாட்டவர்களின் தலையாய கடமை எனும் கருத்தை அடிப்படையாகக் கொண்டு செயல்பட்ட முதல் ஆளுநர் பெண்டிங் பிரபு தான். மேலும் இவரது ஆட்சியில் ஆங்கில கல்வி முறை அறிமுகப்படுத்தப்பட்டது மிக முக்கியமான நிகழ்வாகக் கருதப்படுகிறது. இவர் 1839 ஆம் ஆண்டு ஜூன் 17ஆம் தேதி தனது 64 வது வயதில் மறைந்தார். இவரது பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது.