ஹேர் டை பயன்படுத்துபவர்கள் கவனத்திற்கு..! உங்களுக்காக தான் இந்த பதிவு…!

hairdye

ஹேர் டை பயன்படுத்துவதால் ஏற்படக்கூடிய பக்கவிளைவுகள். 

இன்று பலருக்கு இளம் வயதிலேயே நரை முடி ஏற்படுவதுண்டு. இதனை மறைப்பதற்காக பலரும் ஹேர் டை பயன்படுத்துவதுண்டு. நாம் பயன்படுத்து ஹேர் டையில் பல பக்கவிளைவுகளை ஏற்படுத்தக் கூடிய கெமிக்கல்கள் கலந்திருப்பர். தற்போது இந்த பதிவில் நாம் இப்படிப்பட்ட ஹேர் டையை பயன்படுத்துவதால் என்னென்ன பிரச்னைகள் ஏற்படுகிறது என்பது பற்றி பார்ப்போம்.

பிரச்சனைகள்  

இந்த கெமிக்கல் கலந்த ஹேர் டையை பயன்படுத்துவதால் ஒவ்வாமை பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளது. உச்சந்தலையில் எரியும் உணர்வு மற்றும் சொறி பிரச்சனை ஏற்பட தொடங்குகிறது.

ரசாயனம் நிறைந்த நிறத்தை கூந்தலுக்கு தடவுவது முடியில் அதிக தாக்கத்தை ஏற்படுத்துகிறது, அதைத் தடவுவதன் மூலம் முடி உடையும். இதனுடன் முடி கொட்டும் பிரச்சனையும் தொடங்குகிறது. கெமிக்கல் கலர் பூசுவதால் கண்களுக்கு அதிக பாதிப்பு ஏற்படுகிறது. பல சமயங்களில் கண்பார்வை போய்விடும் அபாயம் கூட ஏற்படும்.

ஆஸ்துமா பிரச்னை உள்ளவர்களுக்கு இது மிகப்பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடும். எனவே ஆஸ்துமா பிரச்சனை உள்ளவர்கள் இதை பயன்படுத்தினால் ஆஸ்துமாவின் அறிகுறிகளை அதிகரிக்கச் செய்யும். எனவே இப்பிரச்சனை உள்ளவர்கள், ஹேர் டை பயன்படுத்துவதை தவிர்ப்பது நல்லது.

கூந்தலுக்கு கலர் பூசுவதால் கூந்தல் மெலிந்து பலவீனமாவதோடு, மற்றும் பல பிரச்சனைகள் ஏற்படக்கூடும் எனவே ஹேர் டை பயன்படுத்துபவர்கள் அதனை தவிர்ப்பது நல்லது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்