5 வயது சிறுமியை பலாத்காரம் செய்த 40 வயது நபர் கைது...!

A 40-year-old man from Rajasthan has been arrested for raping a 5-year-old girl.

5 வயது சிறுமியை பலாத்காரம் செய்த ராஜஸ்தானை சேர்ந்த 40 வயது நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பன்ஸ்வாரா எனும் மாவட்டத்தை சேர்ந்த 5 வயது சிறுமியை 40 வயது நபர் பலாத்காரம் செய்துள்ளார். இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக ஆனந்தபுரி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் சிறுமி தனது வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்தபொழுது குற்றம் சாட்டப்பட்ட 40 வயது நபர் மோட்டார் சைக்கிளில் வந்து அழைத்துச் சென்றதாகவும், அதன் பின்பு பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் குற்றம் சாட்டப்பட்ட நபர் மீது எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், அவர் கைது செய்யப்பட்டும் உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.