பெங்களூரு மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர் தற்கொலை

A man who was treated for corona at a Bangalore hospital has committed suicide

பெங்களூரு மருத்துவமனை வார்டு அறைக்குள் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 61 வயது நபர் தற்கொலை செய்து கொண்டார்.

பெங்களூரைச் சேர்ந்த சுங்கடகட்டே வயது 61 அஞ்சனா நகரில் வசிப்பவர்.இவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டு மூச்சுத் திணறல் பிரச்சினையுடன் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இந்நிலையில் சனிக்கிழமை அதிகாலை 1:30 மணியளவில் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

அவருக்கு சிகிச்சையளித்த மருத்துவர்கள் அவர் நோயிலிருந்து கிட்டத்தட்ட குணமடைந்து விட்டதாகவும் கூறியுள்ளனர்.ஆனால் அவர் ஏன் இந்த விபரீத முடிவை எடுத்தார் என்று தெரிவில்லை  மனச்சோர்வின் எந்த அறிகுறியையும் காட்டவில்லை என்றும் போலீசாரிடம் மருத்துவர்கள் தெரிவித்தனர்.

பெங்களூரு மேற்கு பிரிவு டாக்டர் சஞ்சீவ் எம் பாட்டீல், “இந்த வழக்கில் விசாரணை நடந்து வருகிறது, பாதிக்கப்பட்டவரின் உடல் பிரேத பரிசோதனைக்காக விக்டோரியா மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.