Categories: இந்தியா

31 மாதங்கள் கழித்து ரீ-என்ட்ரி.! சபதத்தை நிறைவேற்றிய சந்திரபாபு நாயுடு.!

Published by
மணிகண்டன்

ஆந்திர பிரதேசம்: கடந்த 2021, நவம்பர் 19ஆம் தேதி ஆந்திர மாநில சட்டசபையில் ஓர் விவாதத்தின் போது. ஆளுங்கட்சியாக இருந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் சிலர், எதிர்க்கட்சி தலைவராக இருந்த சந்திரபாபு நாயுடவின் குடும்பத்தினரை பற்றி தவறாக கூறியதாக கருத்துக்கள் எழுந்தன. இதனை அடுத்து கண்ணீருடன் அப்போது சட்டசபையில் இருந்து வெளியேறினார் சந்திரபாபு நாயுடு.

சந்திரபாபு நாயுடு சட்டசபையில் இருந்து வெளியேறும் போது, இனிமேல் இந்த சட்டசபையில் நான் கலந்து கொள்ள மாட்டேன். அவ்வாறு நான் கலந்து கொண்டால், ஆந்திர மாநில  முதலமைச்சராக மாறிய பிறகு தான் சட்டசபைக்கு வருவேன் என்று சபதம் மேற்கொண்டார்.

இந்நிலையில், அண்மையில் நடந்து முடிந்த ஆந்திர மாநில சட்டமன்ற தேர்தலில், மொத்தமுள்ள 175 இடங்களில் 135 இடங்களை வென்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை கைப்பற்றியது சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி. மேலும், அதன் கூட்டணி கட்சிகளான ஜனசேனா 21 இடங்களையும், பாஜக 8 இடங்களையும் பெற்றன. YSR காங்கிரஸ் 11 இடங்களை மட்டுமே வென்று படுதோல்வி அடைந்தது.

கடந்த 2019 தேர்தலில் வெறும் 23 இடங்களை மட்டுமே வென்று இருந்த தெலுங்கு தேசம் கட்சி, தற்போது தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்து நான்காவது முறையாக முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ளார் சந்திரபாபு நாயுடு. மேலும், 3வது முறையாக மத்தியில் பாஜக ஆட்சி அமைக்க முக்கிய பங்காற்றி உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இப்படியான சூழலில், 31 மாதங்களுக்கு பிறகு ஆந்திர மாநில சட்டமன்றத்திற்குள் இன்று நுழைந்த முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவுக்கு சட்டமன்ற உறுப்பினர்கள் பலத்த வரவேற்பு அளித்தனர். இன்று ஆந்திர மாநில சட்டமன்றத்தில் வெற்றிபெற்ற உறுப்பினர்கள் எம்எல்ஏவாக பதவி ஏற்று கொண்டனர் என்பது குறிப்பிடதக்கது.

Published by
மணிகண்டன்

Recent Posts

என்னது ரெண்டு பேருக்குள்ள ஈகோவா? அன்பை பொழிந்து விளக்கம் கொடுத்த ஹர்திக் – கில்!

மும்பை : அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா மற்றும் குஜராத் அணியின் கேப்டன் சுப்மன் கில் இருவருக்கும் இடையே நடந்த…

9 hours ago

இந்தியாவின் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டது உண்மை! CDS அனில் சௌகான் பேச்சு!

டெல்லி : பஹல்காம் விவகாரத்தில் இந்திய ராணுவம் பாகிஸ்தானை கூறிவைத்து தாக்குதல் நடத்தியது போருக்கு வழிவகுத்தது. இரண்டு நாடுகளுக்கும் இடையே நடந்த…

11 hours ago

பிரமாண்ட ரோட் ஷோ…முதலமைச்சருக்கு மதுரை மக்கள் உற்சாக வரவேற்பு!

மதுரை : தமிழகத்தில் 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கிக்கொண்டு இருக்கும் சூழலில், தேர்தலில் பங்கேற்கும் அரசியல் கட்சிகள் அனைத்தும் தேர்தலுக்கான வேளைகளில்…

12 hours ago

வாய்ப்பை இப்படி தான் பயன்படுத்தனும்! இரட்டை சதம் விளாசி சொல்லிக்கொடுத்த கருண் நாயர்!

கேன்டர்பரி : இந்திய கிரிக்கெட் வீரர் கருண் நாயர் இளம் கிரிக்கெட் வீரர்கள் கிடைத்த வாய்ப்புகள் எப்படி பயன்படுத்தவேண்டும் என்கிற அளவுக்கு…

12 hours ago

ராமதாஸ் ரெடியா இருக்காரு…அடுத்து அன்புமணியிடம் பேச வேண்டும் -ஜி.கே.மணி!

சென்னை :  பாமக நிறுவனர் ராமதாஸூக்கும், அவரது மகன் அன்புமணிக்கும் இடையே ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடு பெரிய அளவில் பேசுபொருளாக…

13 hours ago

நடிகர் ராஜேஷ் மறைவு…தனக்குத் தானே கட்டிய கல்லறையில் உடல் நல்லடக்கம்!

சென்னை : தமிழ் திரையுலகின் மூத்த நடிகர் ராஜேஷ், தனது 75-ஆவது வயதில் சென்னையில் மாரடைப்பால் காலமானார். இவருடைய மறைவு சினிமா…

13 hours ago