பயங்கரவாத நடவடிக்கைகளை தடுக்க 44 மூத்த அதிகாரிகள் அடங்கிய புதிய குழு.!

Default Image

பயங்கரவாதிகள் இந்தியா வருவதை தடுக்கவும், அவர்களுக்கு நிதியுதவி செய்பவர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்யவும் 44 மூத்த அரசு அதிகாரிகள் கொண்ட குழுவானது நியமிக்கப்பட்டுள்ளது.

பயங்கரவாத அமைப்புகளின் நடவடிக்கைகளை தடுக்கவும், அதனை கண்காணிக்கவும் மூத்த அரசு அதிகாரிகள் 44 பேர் கொண்ட ஒரு குழுவை மத்திய அரசு நிர்ணயித்துள்ளது.  UAPA இன் 1967 சட்ட விரோத செயல்பாடுகள் தடுப்பு பிரிவு 51A-யின் படி, இந்த குழு அமைக்கப்பட்டுள்ளது.

இந்த குழுவானது, தனிநபர் அல்லது ஒரு குழுவானது பயங்கரவாத நடவடிக்கைகளில்  ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் நபர்களின் வருகையை இந்தியாவுக்குள் நுழைய விடாமல் தடுக்க உள்ளது.

மேலும், இந்த குழு மூலம், பயங்கரவாதத்தில் ஈடுபடும் அல்லது இதுபோன்ற வன்முறை செயல்களுக்கு ஆதரவளிக்கும் எவரேனும் வைத்திருக்கும் நிதி மற்றும் அவர்களது சொத்துக்களை சட்ட அமலாக்க துறையினர் உதவியுடன் கைப்பற்ற  இந்த 44 அதிகாரிகளுக்கு முழு உரிமை உள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 10052025
Donald Trump
Indian Army
ilaiyaraaja - india pakistan war
Chief Minister J&K
Jammu Kashmir
scattered missile parts