ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிசன் சமோசா மற்றும் சட்னி தயாரித்து அதனை பிரதமர் மோடிக்கு பகிர விருப்பம் என தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
கொரோனா முன்னெச்செரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் ஐந்தாம் கட்ட ஊரடங்கை மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனால், பல்வேறு முக்கிய தலைவர்கள் சந்திப்பு காணொலி மூலம் நடைபெற்று வருகிறது.
அந்தவகையில், அடுத்த மாதம் 4ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடியும், ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிசனும் காணொலி மூலம் கலந்துரையாட உள்ளனர்.
இது குறித்து ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிசன் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிடுகையில், தான் சமோசா மற்றும் சட்னி தயாரித்துள்ளதாகவும், அதனை இந்திய பிரதமர் மோடிக்கு பகிர விருப்பப்படுவதாகவும் அதில் பதிவிட்டுள்ளார்.
unknown node