இந்தியாவில் சர்வதேச விமான சேவைகளுக்கான தடை ஆகஸ்ட் 31 வரை தொடரும் என விமான போக்குவரத்து இயக்குனரகம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில், கடந்த மார்ச் 25- ஆம் தேதி முதல் நாடு முழுவதும் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இந்த ஊரடங்கு, மே 31-ம் தேதி வரை கடுமையாக இருந்தது.
அதன்பின் மத்திய அரசு, ஜூன் 1 முதல் சில தளர்வுகளுடன் ஊரடங்கு அமலில் இருந்தது. தற்பொழுது 2-ம் கட்ட ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில், இது இன்று நள்ளிரவுடன் முடிவடைகிறது.
இதன்காரணமாக, 3-ம் கட்ட தளர்வுகளுக்கான அறிக்கையை மத்திய அரசு நேற்று முன்தினம் வெளியிட்டுள்ளது. அதன்படி, ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் சில தளர்வுகளுடன் ஊரடங்கு உத்தரவை நீட்டித்து, மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதன்காரணமாக, இந்தியாவில் சர்வதேச விமான போக்குவரத்துக்கு சேவைகளுக்கான தடை, ஆகஸ்ட் 31-ம் தேதி வரை தொடரும் என விமான போக்குவரத்து இயக்குனரகம் தெரிவித்துள்ளது. மேலும், வெளி நாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்களை அழைத்து வர மட்டுமே சிறப்பு விமானங்கள் இயக்கப்படும் என தகவல் வெளியானது.
மும்பை : அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா மற்றும் குஜராத் அணியின் கேப்டன் சுப்மன் கில் இருவருக்கும் இடையே நடந்த…
டெல்லி : பஹல்காம் விவகாரத்தில் இந்திய ராணுவம் பாகிஸ்தானை கூறிவைத்து தாக்குதல் நடத்தியது போருக்கு வழிவகுத்தது. இரண்டு நாடுகளுக்கும் இடையே நடந்த…
மதுரை : தமிழகத்தில் 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கிக்கொண்டு இருக்கும் சூழலில், தேர்தலில் பங்கேற்கும் அரசியல் கட்சிகள் அனைத்தும் தேர்தலுக்கான வேளைகளில்…
கேன்டர்பரி : இந்திய கிரிக்கெட் வீரர் கருண் நாயர் இளம் கிரிக்கெட் வீரர்கள் கிடைத்த வாய்ப்புகள் எப்படி பயன்படுத்தவேண்டும் என்கிற அளவுக்கு…
சென்னை : பாமக நிறுவனர் ராமதாஸூக்கும், அவரது மகன் அன்புமணிக்கும் இடையே ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடு பெரிய அளவில் பேசுபொருளாக…
சென்னை : தமிழ் திரையுலகின் மூத்த நடிகர் ராஜேஷ், தனது 75-ஆவது வயதில் சென்னையில் மாரடைப்பால் காலமானார். இவருடைய மறைவு சினிமா…