#BREAKING: புதுச்சேரியில் திமுக எம்எல்ஏக்கள் 4 பேர் கைது!

புதுச்சேரியில் மத்திய அரசை கண்டித்து போராட்டம் நடத்திய 4 திமுக எம்எல்ஏக்கள் கைது செய்து போலீஸ் நடவடிக்கை.
நாடு முழுவதும் மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் 2 நாள் பொது வேலை நிறுத்தப் போராட்டம் நேற்று முதல் நடைபெற்று வருகிறது. விலைவாசி உயர்வு உள்ளிட்ட 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் நேற்றும், இன்றும் தொழிற்சங்கங்கள் பொது வேலை நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. அதன்படி, சிஐடியூ, ஏஐடியூசி, யூடியூசி உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் இந்த இரண்டு நாள் பொது வேலை நிறுத்த போராட்டத்தை போராட்டம் நடத்தி வருகின்றன.
இந்த நிலையில், புதுச்சேரியில் மத்திய அரசை கண்டித்து போராட்டம் நடத்திய 4 திமுக எம்எல்ஏக்கள் உள்பட 100க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டதாக தகவல் கூறப்படுகிறது. மத்திய அரசை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்ட சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் சிவா, எம்.எல்.ஏக்கள் அனிபால் கென்னடி, செந்தில் குமார் உட்பட 100-க்கும் மேற்பட்டோர் கைது செய்து புதுச்சேரி போலீஸ் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. புதுச்சேரியில் தொழிற்சங்கத்தினர் 2வது நாளாக நிறுத்தம் போராட்டம் நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடப்படுகிறது.
மேலும், புதுச்சேரியில் மறியலில் ஈடுபட்ட திமுக, காங்கிரஸ், இடதுசாரிகள், விசிக மற்றும் ஏ.ஐ.டி.யு.சி, உள்ளிட்ட அனைத்து தொழிற்சங்களை சேர்ந்த 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
”சதாம் உசேனுக்கு ஏற்பட்ட கதி தான், ஈரான் தலைவருக்கு ஏற்படும்” ஈரானுக்கு இஸ்ரேல் பகிரங்க எச்சரிக்கை.!
June 17, 2025
அதிமுக முன்னாள் அமைச்சர் சண்முகநாதனின் மகன் ராஜா கைது.!
June 17, 2025
”சாதிவாரி கணக்கெடுப்பு சமூகநீதியை நிலைநாட்ட வேண்டும்” – மத்திய அரசுக்கு விஜய் அறிக்கை.!
June 17, 2025