மத்திய அரசு முழு பட்ஜெட்டை_யும் தாக்கல் செய்ய உள்ளதாக முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2014ஆம் ஆண்டு மத்தியில் ஆட்சி பொறுப்புக்கு வந்த பாரதீய ஜனதா கட்சி கடந்த 5 ஆண்டு முன்வைத்த பட்ஜெட்டும் இதுவரை இல்லாத நடைமுறையிலான முழு பட்ஜெட் தான் . இதற்க்கு காங்கிரஸ் கட்சி பாஜக_வின் இந்த முறை அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது என கடும் எதிர்ப்பு தெரிவித்தது.
மேலும் வருகின்ற மே மாதம் பாராளுமன்ற தேர்தல் நடைபெற இருப்பதால் தற்போது இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்ய இருக்கின்றது.ஆனால் தற்போது இந்த ஆண்டின் 365 நாட்களுக்கான முழு பட்ஜெட்டையும் பாஜக தாக்கல் செய்ய இருப்பதாக தெரிகின்றது.
இந்நிலையில் பாரதீய ஜனதா கட்சி இந்த முறை இடைக்கால பட்ஜெட்_தான் தாக்கல் செய்யமுடியும்.இன்னும் 4 மாதங்களில் தேர்தல் நடைபெற இருக்கிறது.இதையடுத்து பாஜக முழு பட்ஜெட்டை தாக்கல் செய்ய முடியாது என்று காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் ஆனந்த் சர்மா தெரிவித்துள்ளார்.