வங்கக்கடலில் தீவிர புயல்…இந்த 5 மாநிலங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு!

ரெமல் புயல் : மே 26-27 ஆகிய தேதிகளில் 5 மாநிலங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தெற்கு வங்கக் கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்ற நிலையில், இந்த காற்றழுத்த தாழ்வு வடக்கு நோக்கி நகர்ந்து, நாளை (மே 24) மாலை தீவிர புயலாக வலுப்பெறும். எனவும், இந்த புயலுக்கு ரெமல் (REMAL) என்று பெயரிடப்பட்டுள்ளது.
பின்னர், 26-ம் தேதி நள்ளிரவில் சாகர் தீவு மற்றும் கெபுபாரா இடையே வங்காளதேசம் மற்றும் அதை ஒட்டிய மேற்கு வங்கக் கடற்கரையில் கரையை கடக்கும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது. புயல் கரையை கடக்கும்போது மணிக்கு 102 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் எனவும் , இந்த புயலின் காரணமாக மாநிலங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதன்படி, மேற்கு வங்கம், வடக்கு ஒடிசா, மிசோரம், திரிபுரா மற்றும் தெற்கு மணிப்பூர் ஆகிய மாநிலங்களின் கடலோர மாவட்டங்களில் மே 26-27 தேதிகளில் மிக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மேலும், மீன்பிடிக்கச் கடலுக்கு செல்லும் மீனவர்கள் மே 27ஆம் தேதி வரை வங்கக் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்றும், இதுவரை கடலுக்கு சென்ற மீனவர்கள் கரைக்குத் திரும்புமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.