லடாக் எல்லை விவகாரம்.. கல்வான் பகுதியில் இருந்து பின்வாங்கியது சீன ராணுவம்!

இந்தியா-சீன அதிகாரிகள் இடையே நடைபெற்ற உயர்மட்ட பேச்சுவார்த்தையை அடுத்து, லடாக்கின் கல்வான் பகுதியில் இருந்து சீன ராணுவம் பின்வாங்கியது.
கடந்த சில நாட்களாக லடாக் எல்லை பகுதிகளில் சீன ராணுவம் தங்களது படைகளை குவித்து வந்த நிலையில், அங்கு பதற்றம் நிலவியது. இந்த பதற்றத்தை தணிக்கும் விதமாக, இதற்க்கு முன்னே இந்தியா-சீனா இடையே ராணுவ மட்டத்திலான பேச்சுவார்த்தை “மால்டோ” என்ற இடத்தில் நடந்தது.
அந்த பேச்சுவார்த்தையை தொடர்ந்து, இன்று இருநாட்டு ராணுவ அதிகாரிகள் இடையே உயர்மட்ட பேச்சுவார்த்தை நடந்தது. இந்நிலையில், அந்த பேச்சுவார்த்தையை அடுத்து, லடாக்கின் கல்வான் பகுதியிலிருந்து சீன ராணுவம் பின்வாங்கியது. மேலும், கல்வான் பகுதியிலிருந்து சீன ராணுவம், 2.5 கி.மீ. தொலைவில் முகாமிட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
இஸ்ரேலில் குடியிருப்புகளில் குண்டு மழை பொழியும் ஈரான்.! கிளஸ்டர் குண்டுகள் என்ன செய்யும்.?
June 20, 2025
தனுஷின் ‘குபேரா’ எப்படி இருக்கு.? நெட்டிசன்கள் என்ன சொல்கிறார்கள்.! இதோ டிவிட்டர் விமர்சனம்.!
June 20, 2025
”பட்டாசு விபத்தில் பலியானவர்களுக்கு ரூ.10 லட்சம் வழங்க வேண்டும்” – மதுரை கிளை உத்தரவு.!
June 20, 2025