தமிழ் பேசும் தம்பதியினரை தாக்கிய காங்கிரஸ் பிரமுகர்!

Default Image

கேரள மாநிலத்தில் உள்ள வயநாட்டில் கடந்த 21-ம் தேதி அன்று காங்கிரஸ் பிரமுகர் சஜீவானந்தன் ஒரு நபரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.அந்த வாக்குவாதம் பெருமளவில் முற்றி தகராறாக மாறியுள்ளது.

அப்போது சஜீவானந்தன் அந்த நபரை கடுமையாக தாக்கியுள்ளார்.பின்னர் அந்த நபரின் மனைவி தடுத்த போது அவரையும் கடுமையாக தாக்கியுள்ளார்.இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

சிலர் செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர்.மேலும் தாக்கப்பட்ட தம்பதியினர் தமிழ் பேசக்கூடியவர்கள் என தெரியவந்துள்ளது.இந்நிலையில் அவர்கள் தமிழ்நாட்டை சேந்தவர்களாக இருக்க கூடும் என்ற கருத்தும் பரவி வருகிறது.

மேலும் வைரலாக சஜீவானந்தன் தம்பதியினரை தாக்கிய வீடியோவை ஆதாரமாக கொண்டு மாநில மகளீர் ஆணையம் தாமாக முன் வந்து காங்கிரஸ் பிரமுகர் மீது வழக்கு தொடுத்துள்ளது.

இந்த தாக்குதல் எதற்காக நடந்தது என தெரிய வரவில்லை.இந்நிலையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய காங்கிரஸ் பிரமுகரை தெடிவருகின்றன.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

ind vs pak war Donald Trump
ind vs pak war
IndiaPakistanWarUpdates
Donald Trump
Indian Army
ilaiyaraaja - india pakistan war